Wednesday, April 5, 2017

ராமசரிதமானஸ் --அயோத்யா காண்டம் ---பக்கம் பதினொன்று

              ராமசரிதமானஸ் --அயோத்யா காண்டம்
                               ---பக்கம் பதினொன்று


 கோபத்தில் எரிந்துகொண்டிருந்த கைகேயி எதிரில்
கோபம் என்ற உருவிய வாள்நிற்பதுபோல் நின்றாள்.
தீய அறிவு அந்த வாளின் பிடி , குரூரம் என்பது அதன் கூர்மை பதம் , கூனி மந்தரைஎன்ற சானைக் கல்லில்
 தீட்டி மிக கூறியதாக ஆக்கப்பட்டுள்ளது .

      அரசர் அது மிக கடுமையாகவும் பயங்கரமாகவும் இருந்ததைப் பார்த்தார்.  அவர் மனதில் இவள் என்னுடைய உயிரை எடுத்துவிடுவாள் என்று தோன்றியது.
அரசர் நெஞ்சம் நிமிர்த்தி மிகவும் பணிவான குரலில் பேசினார்---அன்பே!நம்பிக்கையையும் அன்பையும்
போக்கி  இப்படி  தீய வரங்களை எப்படி கேட்கிறாய்?
எனக்கு பரதனும் ராமனும்  இரண்டு கண்கள்.  இதை
நான் சங்கரரின் மீது ஆணையிட்டு  சொல்கிறேன்.
அவரே சாட்சியாக இருக்கட்டும்.
 நான் கட்டாயம் தூதர்களை அனுப்புகிறேன்.
இரண்டு சகோதரர்களும் (பரதனும் சத்துருக்கனனும் ) செய்திகேட்டதும்  வந்து விடுவார்கள்.
நல்ல நாள்   பார்த்து  எல்லா  ஏற்பாடுகளும் செய்து பரதனை  அரசனாக்குகிறேன்.
ராமனுக்கு   அரசனாகும் பேராசை கிடையாது.
அவனுக்கு பரதன் மேல் அன்பு அதிகம்.
நான் தான்   நம்  குல  வழக்கப்படி   மனதில் பெரியவன் -சின்னவன் என்று பிரித்து  மூத்த மகனுக்கு பட்டாபிஷேகம் செய்ய  ஏற்பாடு செய்தேன்.
நான் ராமன் மீது நூறுதடைவைகளுக்கு  மேல்   ஆணை இட்டு
சொல்கிறேன்  ராமனின் அம்மா என்னிடம் எதுவும் கேட்கவில்லை. ராமனுக்கு அரசபதவி வேண்டும் என்று கௌசல்யா கேட்கவில்லை. நான் தான்  உன்னிடம் கேட்காமல் இப்படி செய்தேன்.
இதனால் என் மனவிருப்பம்  நடக்க வில்லை.
 இப்பொழுது கோபத்தை விட்டு விடு. சில நாட்களுக்குப்பின்
பரதன்  யுவராஜ் ஆகிவிடுவான்.
எனக்கு ராமனுக்கு  வனவாசம்  என்பதுதான்  மிகவும்  வருத்தமாக உள்ளது.  என் இதயம்   எரிகிறது.  இது  பரிகாசமா ?  கோவமா ?உண்மையா?
கோவத்தை விட்டு விட்டு   ராமனின்   தவறைச் சொல்.
ராமன் மிகவும்  சாது என்றுதான்  அனைவரும்   சொல்கின்றனர்.
  நீயே ராமனைப் புகழ்ந்திருக்கிறாய்.  அவனிடம் மிகவும் அன்பாக இருந்திருக்கிறாய். நீ புகழ்ந்ததும் அன்பு காட்டியதும்  பொய்யா ?    மெய்யா ?
அவன் விரோதிக்கே அனுகூலமானவன் . அம்மாவிடம் அனுகூலமற்று எப்படி நடந்து கொள்வான்.
 அன்பே! சிரிப்பையும் கோவத்தையும் விட்டுவிடு.
எண்ணி சிந்தித்து வரங்களைக் கேள். அப்பொழுதான் நான்
பரதனின் ராஜ்யாபிஷேகத்தைப் பார்க்க முடியும்.

     மீன்கள் தண்ணீரின்றி இருக்க முடியும். பாம்பு மாணிக்கம்
இன்றி இருக்கமுடியும்.    ஆனால்  நான் ராமனின்றி
உயிருடன் இருக்கமுடியாது.
 அன்பே!அறிவே!என்னுடைய   வாழ்க்கையே  ராமனின் தர்சனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
 அரசரின் ஒவ்வொரு வேண்டுகோளும்  கைகேயின் குரோதாக்னியை மேலும் அதிகப்படுத்தியது.
அது   நெருப்பில் நெய்   ஊற்றியது போல் இருந்தது.
 நீங்கள் என்ன சொன்னாலும் சரி , இங்கு உங்களது சொல் எடுபடாது. நான் கேட்டதைக் கொடுங்கள்.  முடியாது என்றால்
இல்லை என்று சொல்லி இகழ்ச்சியைப் பெறுங்கள்.
ராமர், நீங்கள் ராமரின்  அன்னை அனைவரும் நல்லவர்கள்.
கௌசல்யா என்  நலம் விரும்புபவள் . நான் அதை நினைவில்நடு அதன் பலனையே அவளுக்கு கொடுத்துவிடுவேன்.   விடிந்ததுமே  முனிவேடம்  தரித்து ராமன்   வனத்திற்குச் செல்லவில்லை  என்றாள்
நான் இறந்துவிடுவேன். உங்களுக்கு இகழ்ச்சியும்
அவப்பெயரும் ஏற்படும்.
     குரோதம் என்ற நதி   கரைகடந்து ஓடுவது போல்  கைகேயி எழுந்தாள். அந்த நதி பாவம் என்ற    மலையில்  இருந்து
வெளிப்பட்டு குரோதம் என்ற நீரினால் பெருக்கெடுத்து  பொங்கி   ஓடியது. அந்த பயங்கரத்தைப்   பார்க்க முடியாது.
இரண்டு வரங்களும் அந்த    நதியின்  இரு கரைகள்.
கைகேயியின் பிடிவாதம் அந்த      நதியின் ஓட்டம் .
கூனியின் தூண்டுதல் இந்த நதியின் சுழல்.
அந்த குரோத நதி ராஜா தசரதர் என்ற மரத்தை வேரோடு சாய்த்து    ஆபத்து என்ற கடலை நோக்கி செல்கிறது.

அரசருக்கு இந்த வரங்கள் உண்மை என்று உணர்ந்ததுமே தன் மரணம் பெண்ணை சாக்காக வைத்து தலையின் மேல் நடனமாடுகிறது முடிவெடுத்தார். உடனே தசரதர் கைகேயியின் காலில் விழுந்து  அன்பே! நீ சூரிய குலம்
என்ற மரத்திற்கு கோடாலி ஆகிவிடாதே. என்றார்.
நீ என் தலையைக் கேள் தருகிறேன். என்னை ராமரின் பிரிவால் வதைத்து விடாதே. ராமனை மட்டும் வைத்துக்கொள்.இல்லை என்றால் உனக்கு இந்த ஜன்மம் முழுவதும் மன வேதனையே.
நோய்  தீராத நோய் என்று அறிந்ததுமே , மிகவும் வேதனையான குரலில்  ராமா !ராமா!ரகுநாதா! என்று
சொல்லி தரையில் விழுந்துவிட்டார். 

No comments: