Sunday, March 19, 2017

रामचरित मानस -ராமசரித மானஸ்-பாலகாண்டம் -எண்பத்தெட்டு

रामचरित मानस -ராமசரித மானஸ்-பாலகாண்டம் -எண்பத்தெட்டு

 சீதா- ராமர் திருமணம்முடிந்த அழகான காட்சியை
ரதியும் மன்மதனும் பார்க்க ஆவலாக வந்து வெளிப்பட்டும்
மறைந்தும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

   எல்லோரும்   ஜனகரைப் போலவே மெய்மறந்து

ஆனந்தத்தில் மூழ்கினர்.
 முனிவர்கள் ஆனந்தமாக மணமகன் -மணமகளை
அக்னி வலம் வரச் செய்தனர்.
சுப காரியங்களில்  உறவினர்களுக்குத் தரும் எல்லா
குல முறைகளையும் பூர்த்தி செய்தனர்.
ஸ்ரீ ராமர் சீதையின் நெற்றியில் குங்குமம் இட்டார்,
அந்த அழகை வர்ணிக்க முடியாது .
தாமரைக் கரம் குங்குமம் என்ற மகரந்தத்தை
கருமையான புஜங்களை பாம்பாக உவமை சொல்லி சீதையின் முகத்தை நிலவுக்கு உவமை சொல்லி  பாம்பானது
நிலவை அலங்கரிக்கிறது என்கிறார்.
பின்ன  வசிஷ்டரின் ஆணையால் சீதையும் ராமரும் ஒரு அரியணையில் அமர்ந்தனர். இந்த அழகான காட்சி கண்டு
தசரதர் மிகவும் ஆனந்தமடைந்தார்.

பிறகு   வசிஷ்டர்  உத்தரவுப்படி ஜனகர்  திருமணப் பொருட்களை அலங்கரித்து  மாண்டவி, ஸ்ருத கீர்த்தி ,உரமில ஆகிய மூன்று அரசகுமாரிகளையும் அழைத்தார்.
   குஷத்விஜியின் அழகும் குணமும் ஒழுக்கமும் நிறைத்த பெரிய மகளுக்கும் பரதனுக்கும் விவாகம் நடந்தது.
சீதையின் சிறிய தங்கை ஊர்மிளாவை லக்ஷ்மணனுக்கு மனம் முடித்துவைத்தார். அழகான கண்களும்  குணவதியான சுருதி கீர்த்தியின்  திருமணம் சத்துருக்கனனுடன் நடந்தது. 

No comments: