Thursday, February 16, 2017

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --எண்பத்தொன்று

        ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --எண்பத்தொன்று

          மணிகள் -மணி ஓசைகளை வர்ணிப்பது  இயலாது.
நடந்து செல்லும் சேவகர்கள்  உடற்பயிற்சி செய்துகொண்டே
வந்தனர் .  சிரிக்க வைப்பதில் சிறந்த  நிபுணர்களான  கோமாளிகள்  வித-விதமான வேடிக்கைகள்  காட்டிக்கொண்டிருந்தனர்.
அழகான அரசகுமாரர்கள்
மிருதங்கம் -முரசொலிகளுக்கு ஏற்ப  குதிரைய நடனமாடவைத்தனர் . தாளத்திற்கேற்றவாறு கால்கள் ஆடின. சிறந்த நட்டுவனார்கள் ஆச்சரியத்துடன் இந்த ஆட்டத்தைப்
பார்த்துக்கொண்டிருந்தனர்.
மணமகன் ஊர்வலம் வர்ணிக்கமுடியாது.
அழகான சுபம் தரும் சகுனங்கள் தென்பட்டன.
மயில் ஒருபக்கம் உணவு பொறுக்கிக் கொண்டிருந்தது.
சிலர் கீரிப்பில்லையையும் பார்த்தனர்.
மூன்றுவித காற்று( குளிர்ந்த ,மந்த,மணமுள்ள )
அனுகூலமான திசையில் இருந்து வந்துகொண்டிருந்தது.
பெண்கள் நிறைந்த பானைகள் மடியில் குழந்தைகளுடன்
வந்துகொண்டிருந்தனர்.
ஓநாய்கள் அடிக்கடி தென்பட்டன. பசுக்கள் தன் கன்று குட்டிகளுக்கு பாலூட்டிக்கொண்டிருந்தன.
மான் கூட்டம் இலதுபக்கம் சுற்றி வலது பக்கமாக வந்தது.
இவை எல்லாம் சுப சகுனங்கள்.
வெள்ளை கழுத்துள்ள பருந்து வட்டமிட்டு நல்ல சகுனத்தையும் , குயில் களும் இனிய இசை எழுப்பின .
 மங்களமான,நல்லது செய்யக்கூடிய, மனம் விரும்பிய பலன்கள்  தரக்கூடிய சகுனங்கள்  உண்மையான நிகழ்ச்சிகளுக்காக  ஒன்று சேர்ந்துள்ளன. பகவானே
புத்திரனாகப் பெற்றவர்களுக்கு சுப சகுனங்கள் எளிதுதான்.
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி மணமகன் . சீதை மணமகள்.
ஜனகரும் தசரதரும்  புனித  சம்பந்திகள்.

 
  இப்படிப்பட்ட  திருமணம் கேட்டு சுப சகுனங்கள் எல்லாம் நடனமாடின. இவ்வாறு முரசுகள் முழங்க  ஊர்வலம் புறப்பட்டது .
  சூரிய வம்சத்தின் கொடிபோன்ற தசரதர் வருவதைப் பார்த்து  ஜனகர் நதியில் பாலம் கட்டினார்.
வழியில் தங்குவதற்கு அழகான கூடாரங்கள் அமைத்தார்.
அதில் தேவலோகம் போன்றே அனைத்தையும் ஏற்பாடு  செய்தார்.
அனைவருக்கும்  தங்கள் மன விரும்பியபடியான
உயர்ந்த சாப்பாடு, படுக்கை ,ஆடைகள் கிடைத்தன.
அங்கு மணமகன் வீட்டாருக்கு செய்த மரியாதையால்
அனைவரும் தன் தன் வீடுகளை மறந்துவிட்டனர்.
மிகவும் ஓசையுடன் அடித்த முரசொலி கேட்டு ,
மணமகன் ஊர்வலத்தை வரவேற்க யானை,குதிரை, தேர் ,
காலாட்படைகளின் அணிவகுப்பு நடந்தது.


No comments: