Sunday, January 29, 2017

அனைவரின் நன்மைக்கே. வேறுபாடின்றி,

இறைவனுக்கு படைப்பதெல்லாம்,
ஏழைகளுக்கு உதவும்  எண்ணம்
தேங்காய் சிதறுதேங்காய்
அங்குள்ள ஏழைகள் எடுத்து சாப்பிட.
ஆனால் இன்றோ அது ஒப்பந்தகாரர் கையில்.
ஏழை எடுத்து சாப்பிட்டால்  அடிதான்.
பாலாபிஷேகமும் அப்படியே .
பிரசாத ஸ்டால்கள் இல்லாத காலம்
பிரசாதாம் பிறருக்கே . ஆனால்  இன்று
அதுவும் வாணிகமே.
ஆலயம் என்பது
  ஆ , ஐயோ, என்பவருக்கு
உதவ .
உள்ளோர் இல்லாருக்கு உதவ.
ஆனால் இன்றோ உள்ளே நுழையவே
நுழைவுக்கட்டணம்.

பூக்கள் சமர்ப்பிப்தால் எத்தனை ஏழை
பெண்கள் பொருளீட்டுகின்றனர்.
வாடும் மலரில் வாடும் மனம்  மகிழும்.
மணம்  வாழ்க்கையில் வீசும்.
பூ மணம்  இயற்கை அழகு,அவைகளை
பறித்து   அர்ச்சித்தால் பலருக்கு வருமானம்.
பூந்தோட்டக்காரன், அதை பறித்து சேர்ப்பவன்.
அதைதொடுத்து கலை  வண்ணம் சேர்ப்பவன்.
அதிலும் மொத்தவியாபாரி, சில்லறை வியாபாரி,
ஆலயங்கள் முன் விற்கும் பெண்கள்.
தெருவில் விற்கும் தெரு வியாபாரி.
பூதன்னை வாடவைத்து ,
எத்தனை பேர் வாழ்க்கையில் மனம் வீசும் மாண்பு.
மனிதனைத்தவிர  அனைத்து படைப்புகளும்
அனைவரின்  நன்மைக்கே. வேறுபாடின்றி,

No comments: