Saturday, January 28, 2017

துளசிதாஸ் -ராமசரிதமானஸ் ---பாலகாண்டம் ---அறுபது.

துளசிதாஸ் -ராமசரிதமானஸ் ---பாலகாண்டம் ---அறுபது.


         விஷ்வாமித்திரர்  ஸ்ரீ ராமனையும்  லக்ஷ்மணனையும் அழைத்துக்கொண்டு  கானகம் சென்றார்.
வழியில்    முனிவர் தாடகையைக் காட்டினார்.
 இவர்கள் பேச்சொலி கேட்டதுமே
அவள் கோபத்துடன் ஓடினாள்.

ராமர்  தன்  ஒரே  பாணத்தால் அவளின்  உயிரை எடுத்தார்.
அவள் பெண்ணாக  இருப்பதால், தன்னுடைய தெய்வீக ரூபத்துடன்  காட்சி அளித்தார்.

ரிஷி உடனே  பிரபுவை  கல்வியின் கஜானா என்றறிந்து
 அவருக்கு பசி எடுக்காமல் இருக்கும் வித்தையைக் கற்றுக்கொடுத்தார். மேலும் அவர்  சரீரத்தில் , ஒப்பிடமுடியாதா  சக்தியையும்  ஒரு தேஜஸையும் கொடுத்தார்.

அனைத்து அஸ்த்ர சஸ்த்ரங்களை சமர்ப்பித்து ,
தன்  நல விரும்பியாகக்  கருதி ஆஷ்ரமத்திற்கு
அழைத்துச்  சென்று  , பக்தியுடன்  பழங்களையும் ,கிழங்கு மற்றும்  வேர்களையும் சாப்பிட வழங்கினார்.
     காலையில் ராமர் ரிஷிகளிடம்  நீங்கள் சென்று  வேள்விகளை  ஆரம்பியுங்கள்.  நான் உங்களை காவல் காக்கிறேன்.  
  இந்த  செய்தியைக்  கேட்டதும்   முனிவர்களின் விரோதியான  ராக்ஷசன்  மாரீசன்  தன உதவியாலர்களுடன்
வேள்வியைத் தடுக்க ஓடினான்.   ஸ்ரீராமர் அவன்  மீது
பலனில்லா அம்பு தொடுத்தார். அதனால்  அவன் கடலைத்தாண்டி  நூறு மைல்களுக்கு அப்பால் சென்று    விழுந்தான்.


   பிறகு ஸுபாஹூ மீது அக்னி பானத்தைத் தொடுத்தார்.

தம்பி லக்ஷ்மணன்  ராக்ஷஸ படைகளை சம்ஹாரம்  செய்தான்.
இவ்வாறு  ஸ்ரீ ராமர்  அரக்கர்களைக் கொன்று வேள்விக்கான  இடையூறுகளைப்  போக்கி அந்தணர்களின் அச்சத்தைப்
போக்கினார் .   அப்பொழுது  அனைத்து தேவர்களும்
முனிவர்களும்  ஸ்ரீ ராமரைப் புகழ்ந்தனர்.

No comments: