Wednesday, January 11, 2017

ராமசரித மானஸ்-பாலகாண்டம் -முப்பத்தொன்பது.

 ராமசரித மானஸ்-பாலகாண்டம் -முப்பத்தொன்பது.

இறைவன்  காலின்றி நடக்கிறான்.
காது  இன்றி  கேட்கிறான்.
கை இன்றி பலவித  வேலைகள் செய்கிறான்.
நாக்கு இன்றி அறுசுவைகளின்
 ஆனந்தத்தை அடைகிறான்.
பேசும் திறனின்றி பெரும் பேச்சாளன் ஆகிறான்.

உடலின்றியே  தீண்டுகிறான்.
கண்ணின்றி பார்க்கிறான்.
மூக்கின்ரி முகர்ந்து பார்க்கிறான்.
அந்த பிரம்மாவின் செயல்
அனைத்தும் அலௌகீகமானது.
அவரின் மகிமையை வர்ணிக்க முடியாது.
வேதங்களும் பண்டிதர்களும் வர்ணிக்கிற
தியானம் செய்கின்ற  இறைவன்தான்
தசரத குமாரர், பக்தர்களுக்கு நன்மை அளிப்பவர்,
அயோத்தியாவின் அரசர் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி.

No comments: