Sunday, January 22, 2017

ராமசரிதமானஸ்--பாலகாண்டம்--ஐம்பத்தி நான்கு.

ராமசரிதமானஸ்--பாலகாண்டம்--ஐம்பத்தி நான்கு.

     பிராம்மாவின் அறிவுரைப்படி வானரர்கள் மலைகளிலும் ,
காடுகளிலும்  தன வீரமுள்ள சேனைகளுடன்  தங்கி இருந்தனர்.

  அயோத்தியாவில் தசரதர் என்ற அரசர் ஆட்சி செய்தார்.
அவர் பெயர் வேதங்களில் புகழ் பெற்றிருந்தது.
அவர் தர்மத்தில் அதிகம் பற்றுகொண்ட தர்மவீரர்.
அவர் மிகப்பெரிய ஞானி.
அவர் மனதில் சாரங் என்ற வில்லேந்திய பகவானிடம் பக்தி இருந்தது.
அவர் அறிவு அந்த பக்தியிலேயே லயித்திருந்தது.

அவருக்கு கௌசல்யா மற்றும்  பிரியமுள்ள ராணிகள்  இருந்தார்கள்

அவர்கள் அனைவருமே மிகவும் பணிவாகவும் ,கணவனுக்கேற்றபடி நடப்பவர்களாகவும்  இருந்தனர்.
அவர்களுக்கு ஹரியின் மேல் மிகுந்த பக்தி இருந்தது.
 தசரதருக்கு குழந்தை இல்லை.  மிகவும் அவருக்கு தன மேல் வெறுப்பு வந்துவிட்டது. உடனே குருவின் ஆஷ்ரமம் சென்று அவர் பாதங்களை வணங்கி  வேண்டினார்.
குரு வஷிஸ்டர்  அவருக்கு மிகவும் தைரியமளித்தார். அவர் அரசனிடம் உனக்கு  நான்கு மகன்கள் பிறப்பார்கள். அவர்கள் மூவுலகத்திலும்
புகழ் பெறுவர்.  பக்தர்களின் பயத்தைப் போக்குவர்.
வசிஷ்டர் ஸ்ருங்கி ரிஷியை அழைத்து புத்திரகாமேஷ்டி யாகம் செய்வித்தார். முனிவரின் பக்தியுடன் செய்த வேள்வியால் மகிழ்ந்து
அக்னிதேவர் தோன்றி  கலசத்தில் பாயாசம் கொடுத்து இதை உன் விருப்பப்படி  பங்கிட்டுக்கொடு என்றார்.
ராஜா  மிகவும் மகிழ்ந்தார்.
உடனே அரசர் தன் ராணிகளை அழைத்தார். அந்த பாயாசத்தில் பாதியை
கெள்சல்யாவிற்குக்  கொடுத்தார். மீதமுள்ள பாதியை இரண்டு பங்குளாக்கினார். அதில் ஒரு பங்கை ராணி கைகேயிக்குக் கொடுத்தார்.
மீதமிருந்ததை  கௌசல்யா ,கைகேயி இருவரிடமும் அளித்து சுமித்திரைக்கு
கொடுக்குபடி சொன்னார்.  அவர்கள் மகிழ்ந்து அதை சுமித்திராவிற்குக் கொடுத்தனர்.

ராணிகள் கருதரித்தனர். அவர்கள் மிகவும் மகிழ்ந்தனர்.  ஸ்ரீ ஹரி கர்பத்தில்
தோன்றியதுமே எல்லா உலகத்திலும் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகின.

No comments: