Saturday, January 14, 2017

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --நாற்பத்திரண்டு

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --நாற்பத்திரண்டு

  வேதங்களின் ஒரு அங்கத்தில் கூறப்பட்டுள்ள ஒரு கதை;-

தேவர்கள் ஜலந்தர் என்ற அரக்கனுடன் போராடி  போரில் தோற்ற பிறகு,

மிகவும் துன்பப்படுவதைப் பார்த்து சிவபகவான் ஜலந்தரனுடன் போரிட்டார்.
ஆனால் அந்த மகாபலி அரக்கனை வதம் செய்ய முடியவில்லை.

  அந்த அரக்கனின் மனைவி பதிவிரதை. இதன் காரணமாக திரிபரசூரன் போன்ற வெல்ல முடியாத அரக்ககர்களை வதம்  செய்த சிவனால்,
மகாபலியை வெல்லமுடியவில்லை.

  ஹரிபகவான்  அந்த பெண்ணின் விரதத்தை தகர்த்து ,
அந்த அசுரனை  கொன்றார். அவன் மனைவி கோபம் கொண்டு தெய்வத்தையே  சபித்தாள்.
  லீலைகளின் கருவூலமாக  விளங்கிய ஹரி  அவளின் சாபத்தை ஏற்றார்.
அதே ஜலந்தர் ராவணன் ஆகப்  பிறந்தான்.
 அவனை ராமாவதாரத்தில் வதம் செய்து முக்தி அளித்தான்.
இந்த காரணத்தால்  தான் விஷ்ணு  மனிதநாக ராமராக அவதரித்தார்.

  யாக்ய வல்க்கியர் சொன்னார் -- பாரத்வாஜ் முனிவரே !கேளுங்கள், ஹரியின் ஒவ்வொரு அவதாரக் கதையையும்  கவிஞர்கள்  பலவிதமாக வர்ணித்திருக்கிறார்கள்.

  மேலும் சிவன்  சொன்னார் ,  " பார்வதி! கேள். ஒருமுறை நாரதரே விஷ்ணுவுக்கு சாபம் அளித்தார். "

இதைக்கேட்டு கிரிஜா மிக ஆச்சரியப்பட்டார். நாரதர் மிகப் பெரிய ஞானி.
விஷ்ணுவும் பக்தர்.
 இந்த ஆச்சரியமான கதையைக்  கேட்க  பார்வதி மிக ஆவலுற்றார்.
அப்பொழுது மகாதேவன் சொன்னார் . ஞானியோ முட்டாளோ ,
ரகுநாதர் விருப்பப்படி , உடனே அப்படியே நடப்பார்கள்.
யாக்யவல்கியர் பாரத்வாஜ முனிவரிடம் , நான்  ராமரின்
குணா திசயங்களைப்பற்றிக் கூறுகிறேன்.
துளசிதாசர் சொல்கிறார் --கௌரவம் மற்றும் ஆணவத்தை விடுத்து பிறவி அறுக்கும்  ராமரை பஜனை செய்.

இமயமலையில் ஒரு  பவித்திரமான குகை உள்ளது. அதன் அருகிலேயே  புனித கங்கை ஓடுகிறது. நாரதருக்கு அந்த இடம் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக  இருந்தது.

   

No comments: