Tuesday, December 20, 2016

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் ௧௩ துளசிதாஸ் .

                 ராமசரிதமானஸ் -பாலகாண்டம் ௧௩. துளசிதாஸ்

என்னுடைய பிரபு  ராமச்சந்திரர்  என்னுடைய  பக்தி  நிறைந்த

பாட்டைக்  கேட்டு , பார்த்து , மனம் என்ற
 கண்ணில் மேற்பார்வை  செய்து ,
என்னுடைய  பக்தியையும் , அறிவையும்
புகழ்ந்தார்.
என்னனை  நானே பகவானின்
சேவகன்  என்று சொல்கிறேன்.
இவ்வாருசொல்வதால் அவருக்கு கோபம் வரலாம்.
ஆனால்  இதயத்தில் நல்ல  எண்ணம் இருக்கவேண்டும்.
நான்  என்  மனதில் அவருடைய சேவகன் ஆவதற்கு
தகுதி  இல்லை  என்றே  நினைக்கிறேன்.
என்னை  நான்  பாவி   என்றும்
தீனன் என்றுமே  கருதுகிறேன்.

என்னுடைய  மனதின் தூய்மையையும்
நல்ல தன்மையையும் ராமர்  அறிந்து
என்நிலை  அறிந்து  என்னை விரும்புகிறார் .
என்னை   நேசிக்கிறார்.
 இறைவனின்  மனதில் பக்தர்களின்  தவறுகள்
நினைவில்  இருப்பதில்லை.
அவருடைய  இதயத்தில் 
 நல்லதே
அதிகமாக  ஞாபகத்தில் 
 வைத்துக்கொள்கிறார்.
வாலியின் எந்தபாபத்தால் அவனை
வேட்டைக்காரன்  போல்  கொன்றார் ,
அப்படியே  சுக்ரீவனிடம்  நடந்துகொண்டார்.
அதே  செயல்  விபீஷணனுடையது.

அதை  அவர்  கனவிலும்  நினைக்கவில்லை.
எதிர்மாறாக பரதனை சந்திக்கும் போது
ராமர்  அவரை கௌரவித்தார்.
அரசவையில்  அவனைப் புகழ்ந்தார்.
ராமர்  மரத்துக்குக்  கீழே ,
குரங்கு  கிளைகளின்  மேல்,
.
ராமர்  உயர்ந்தவர், ஆனால் வானரங்களை 
அவர்  தனக்கு  சமமாகக்  கருதினார்.
ராமர்  போன்று  ஒரு  குணசீலர் எங்குமே  இல்லை.
ராமரே!உங்களது  நல்ல  குணத்தால்
 எல்லோருக்குமே  நன்மையே  உண்டாகும்.
இந்த விஷயம் சாத்தியமானால் துளசிதாசருக்கும்
எப்பொழுதும்  நல்லதே  உண்டாகும்.




No comments: