Tuesday, December 20, 2016

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -௧௪ பதினான்கு - பகுதி

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -௧௪  பதினான்கு - பகுதி

 துளசிதாசர்  சொல்கிறார் :--

நான்  என் குணங்களின்  தவறு களை எல்லாம்  சொல்லி ,
எல்லோரையும்  சிரம் தாழ்த்தி  வணங்கி
ஸ்ரீ ரகுநாதரின் களங்கமற்ற புகழை
வர்ணிக்கிறேன்.
அவைகளைக் கேட்பதால் பாபங்கள்
 எல்லாம் அழிந்துவிடும்.
முனி  யாக்ய வல்கியர்  இந்தக்  கதையை
முனிவர்களில்  மேன்மையான
 பாரத்வாஜருக்குச் சொன்னார்.
அந்த  செய்தியை நான்  வர்ணிக்கிறேன்.
எல்லா நல்லவர்களும்  இன்பத்தை
அனுபவித்துக்கொண்டே அதைக்  கேளுங்கள்.

இந்த அழகான பாத்திரத்தின் குணங்களை
சிவ பகவான்   எழுதினார்.
பிறகு பார்வதியிடம் சொன்னார்.
அதே  பாத்திரத்தின்  சிறப்பை
 முனி காக்புசுண்டிக்குச்
சொன்னார்.
காக்புசுண்டிக்கு  ராமபக்தரென
அறிந்து சொன்னார்.

அதே  காக்புசுண்டி  மீண்டும் பாரத்வாஜரை சந்தித்து
அதே  கதையைப் பாடலாகப் பாடினார்.
அவர்கள்  இருவரும்  சொல்பவரும்  கேட்பவரும்
சமமான  நல்லோழுக்கசீலர்கள்.
சமநோக்கு உள்ளவர்கள்.
ஸ்ரீ  ஹரியின் லீலைகளை  நன்கு  அறிந்தவர்கள்.

அவர்கள்  தன் ஞானத்தால் முக்காலங்களையும்
உள்ளங்கை  நெல்லிக்கனி போன்றே  அறிவார்கள் .
அவர்கள்  பகவானின்  லீலைகளின் ரகசியங்களை
அறிந்து  பல விதங்களில் சொல்லுவதில்  வல்லவர்கள்.
பல விதங்களில் கேட்பவர்கள்.
அறிபவர்கள்.
அதே  கதையை நான் வராஹா க்ஷேத்திரத்தில்
என்  குருவிடம்  கேட்டேன்.
ஆனால்  குழந்தையாக  இருந்ததால்
நன்றாக  அறிந்துகொள்ளமுடியவில்லை.
ஸ்ரீ  ராமரின் ரகசியக் கதையை சொல்பவர்கள் ,
கேட்பவர்கள், இருவரும் அறிவுக்
கருவூலமாக இருப்பவர்கள்.
நான்  கலியுகத்தின் பாபங்களில்
பீடிக்கப்பட்ட மகாமூடர்கள் ,
ஜடங்கள், ஜீவன்கள், எப்படி அறிந்துகொள்ள முடியும்.
 ஆனால்  குருவானவர்  அடிக்கடி  அக்கதையைச்
சொன்னதால்  தெரிந்துகொள்ள முடிந்தது.
 அதே இந்த  மக்கள் மொழியில் எழுதப்படும்.
அதனால்   எனக்கு திருப்தி ஏற்படுகிறது.

எனக்குள் இருக்கும் சிற்றறிவால் ,
விவேக பலத்தால்
மனதில் உள்ள  ஹரியின்  தூண்டுதலால் ,
நான்  சொல்லுவேன்.
நான் என் சந்தேகம் , அறியாமை, ,
பிரமையால்  உண்டாகின்ற
கதையைச் சொல்கிறேன்.
அதைக்உ  கேட்பது  உலகம்  என்ற
 கடலைக்
கடக்க  படகாக உதவும்.
ராமகதை  பண்டிதர்களுக்கு
 ஓய்வு தரக்கூடியது.
எல்லோரையும்  மகிழ் விக்கக்  கூடியது.
கலியுகத்தின்  பாவங்களைப் போக்கவல்லது.

ராமகதை கலியுகம் என்ற
 பாம்புக்கு மயில் போன்றது.
அறிவென்ற அக்னியைப்
 கடைந்தெடுக்கும்  மத்தாகும்.
இந்தக் கதையால் ஞானம்  கிடைக்கிறது.

ராமகதை கலியுகத்தில்  எல்லா
 மனவிருப்பங்களையும்  நிறைவேற்றுகின்ற
காமதேனு   பசுஆகும்.
நல்லவர்களுக்கு  அழகான
சஞ்சீவினி   வேராகும்.
பூமியில்  இதுதாம் அமிர்த நதியாகும்.
பிறப்பு - இறப்பு   என்ற பயத்தைப் போக்கும் .
பிரமை என்ற தவளையைச்  சாப்பிடும்
பாம்பாகும்.

இந்த ராமகதை  அசுரர்களின்
சேனையைப் போன்ற  நரகத்தை  அழிக்கக் கூடியது.
சாதுக்கள் என்ற தேவர்களின்  குலத்தைக் காக்கின்ற
துர்கையாகும்.
சாதுக்களின் சமுதாயம்  என்ற பாற்கடலுக்கு
லக்ஷ்மிபோன்றது.
அகில உலகின் சுமை  சுமக்கின்ற அசையாத பூமி போன்றது.

No comments: