Saturday, December 17, 2016

ராமச்சரித மானஸ் --பலகாண்டம் --10 -துளசிதாசர்

ராமச்சரித மானஸ் --பலகாண்டம் --10 -துளசிதாசர்

    ஸ்ரீ  ராமர் கரடி மற்றும் வானரங்களின்
    சேனையை  ஒன்று திரட்டினார்.
   மேலும் சமுத்திரத்தில்  பாலம் கட்டியத்திற்கு
 கொஞ்சம் கூட உழைக்கவில்லை.
 ஆனால் பெயர் எடுத்ததுமே  உலகக்  கடல்
  காய்ந்துவிடுகிறது.

 இப்பொழுது  சிந்தியுங்கள்: --
ராமநாமம் ,ராமர்  இந்த இரண்டில்
  ராமநாமமே   உயர்ந்தது.
  ஸ்ரீ  ராமர்   ராவணனை
அவன்அ குடும்பத்துடன்
அழித்தார் .
அப்பொழுது  சீதையுடன் அயோத்தியாவில்  நுழைந்தார்.
ராமர்  அரசனானார் . அவதி  அவரின்  தலைநகர் ஆனது.
தேவர்கள் முனிவர்கள் அவரின்  குணங்களை புகழ்கிறார்கள்.
ஆனால்  ராமரின் பக்தர்கள் அன்புடன் பெயரை
நினைத்ததுமே  உழைக்காமல் மோகம்  என்ற சக்திசாலி
சேனையை  வென்று  ராமரின் மீது காதலில் மூழ்கினர்.
சுகத்தில் சஞ்சரித்தனர்.  எவ்வித கவலையும் அவர்களைத் துன்புறுத்தவில்லை.

அதனால் நிர்குண பிரம்மத்தைவிட
சகுண  பிரம்மத்தைவிட
 ராமநாமம்  பெரியது.
இந்த ராமநாமம்  வரமளிப்பவர்களுக்கே
வரமளிக்கக் கூடியது.
ஸ்ரீ சிவபகவான்  தன்   இதயபூர்வமாக
 இதை  அறிந்து தான்
நூறுகோடி ராமரின் சரித்திரத்தில்
 இந்த ராமநாமத்தையே
தேர்ந்தெடுத்தார்.



No comments: