Tuesday, November 22, 2016

அகிலம் காக்கும் ஆண்டவன் !அற்புதமே !

அகிலம்  பற்றி  அறிவது
ஆதி மனிதன்  முதல்  இன்றுவரை

அறிவியல்  வளர்ச்சி ,
ஆயுள் வளர்ச்சி ,
அனைத்தும்  இருந்தும்
மனிதன்  அறியா  மர்மங்கள்
மனிதனை   பலமிழக்கச்     செய்கின்றன.
அதுவே  ஆண்டவனை  நோக்கி
தியானம் , புனித  பயணம் , வேள்வி
என்றே   ஆன்மீகக்  கூட்டாம். .
விமானங்கள்  ,கப்பல்கள் மாயமாகும்
கடல்  பகுதிகள் ,
பணம் இருந்தும்    பதறவைக்கும்
இயற்கை  சீற்றங்கள்
இயற்கை  செயற்கை விபத்து  மரணங்கள்,
அறிவாளிகளையும் .
பெரும் பணக்காரர்களையும்
ஆட்டிப்படைப்பதால்
ஆண்டவன் ஆன்மீகம் தியானம்
தனித்தன்மை  தனி மகத்துவம்
மேலும் மேலும்   அதிகரித்தாலும்
இன்னும்  நேர்மை வளரா  நிலையம்
அற்புதமே,




No comments: