Thursday, October 13, 2016

ஆண்டவன் அருள்

   


  நாளுக்கு  நாள்  நடைபெறும்     நிகழ்வுகள்,


   நான்மறையில்   எழுதிய  உண்மைகள்.


  யுகங்கள்  மாறுகின்றன,  நிகழ்வுகளில்  வடிவங்கள்  மாறுகின்றன,


அனைத்து  யுகங்களிலும்     யாருமே   நிம்மதியாக  இல்லை.


ஆனால்    ஆட்சி , புகழ், அசுர அராஜகங்கள்  இல்லா  யுகம்  இல்லை.


 ராமர்  வாழ்ந்த  காலத்திலும்  கடத்தல்,

தெய்வக்குழந்தைகள்   வளர்த்த  தசரதருக்கும் ,

அவரது  ராணிகள்   கைகேயி , கௌசல்யா , சுமித்திரை மூவரின்


கண்ணீர்க்கதைகள்.

குந்தியின்   மனதில்  நிம்மதியா ?

கண்ணனின்  வாழ்வில்  நிம்மதியா ?

யுகங்கள்  மாறுகின்றன .  காட்சிகள்  மாறுகின்றன.

அறிவியல்  கண்டுபிடிப்புகள்  மாறுகின்றன.

ஆனால்    மனிதர்கள் வாழ்வில்  நிம்மதி இல்லை.

உண்மையே  பேசிய  ஹரிஷ்ச்சந்திரன் ,

பொய்யாகவே   வாழ்ந்த  இந்திரன் ,

அரக்கர்களின் அட்டூழியம் .

இன்றைய  காட்சிகளிலும்  ஆள்பவருக்கு  மூன்று  துணைவியார்,

ஆள்பவர்களுக்கு  செல்வி  ,

  யுகங்கள் , நிகழ்வுகள்  புதிய  தோற்றப்  பொழிவோடு.

ஜானகி  ராமச்சந்திரன் ,   மாற்றான்  துணையோடு,

அன்று  ராவணன்   சீதை  கடத்தல்,

இன்றைய  ஜானகி  ஆட்சிபீடம் .

நிம்மதி  எங்கே ?  அமைதி  எங்கே?

யுகங்கள்  மாறினாலும்   காட்சிகள்  புதிய  கோலத்தோடு.

இதுவே  அன்பு  உலகம்.  ஆண்டவன்  ஏற்பாடு.

அன்று  சீதை , ஆண்டாள் , கபீர்  அனாதையாக.

இன்று  பல  தொட்டில்  குழந்தைகள்,
கடத்தி    தூங்கவைத்து   பிச்சைஎடுக்கும்  கும்பல்.

நாற்சந்தி யில்   சிறுவர்  பிச்சை .

 ஆலயங்களில்  இறைவன்  வேடத்தில்  பிச்சை.

ஆண்டவனையே  பிச்சை எடுக்கவைக்கும்  பூலோக வாசிகள்.

 எல்லாமே  அவன் செயல்.

No comments: