Tuesday, May 31, 2016

முருகா போற்றி

காலை வணக்கம் .
கந்தனவைணங்குகிறேன்
கந்தா போற்றி.
கார்த்திகேயா போற்றி
கிரிவாசா  போற்றி.
கீர்த்திநாதா  போற்றி
குருநாதாசாமியே போற்றி
கூர் வடிவேலா  போற்றி
கேசவன் மருகா போற்றி
கை லாய வாச புத்தரா போற்றி.
கொடுமுடி தீர்த்தப்பிரயா போற்றி
கோமதி புதல்வா போற்றி
கௌமார மார்க்கா போற்றி
முருகா போற்றி.

பழனி வேலா போற்றி
பக்த அனுக்ரஹா போற்றி போற்றி .

Friday, May 27, 2016

பக்தர்கள்

கடவுளை நம்புபவன்  களங்கமில்லாதவன்.
ஆடை எளிது உணவு எளிது
இருக்கை எளிது  இனிமையானவன்
ஆசையில்லாதவன்
பற்றில்லாதவன்
பஞ்சப்பரதேசிபோல்
பரலோக எண்ணங்கள்
ஆனால் இன்றோ ஆன்மீகம்
ஆடம்பரத்தின் உச்சகட்டம்.
குடிசையில் வாழ்ந்தோர்
ரிஷி முனிகள்
இன்று ஆஷ்ரமங்களோ
அழகுமாளிகைகள்
ஆசனமோ தங்க இருக்கை.
மகுடமோ வைரம்.
அபிஷேகப் பிரியராக
அலங்காரப்பிரியராக
ஆசிர்வாதத்திற்கே
ஆஸ்திசேர்க்கும் ஆஸ்திப்ரியராக
ஒரு அதிசயம்
அனைத்து அரசியலவாதிகளும் சென்றூ
தங்கும் விடுதியாக
ஆன்மீகம் செழிக்கிறது களிக்கிறது
அப்பாவிகளை அடக்கி
வாழ்கிறது
பலஆயிரம்கோடி சொத்துக்கள்
காவல்துறை எதிர்த்துப் போராடும் அடியார்கள்
பக்தி பரவசமா ? பாவாடை சாமியாரா ?  புரியவில்லை.
ஆனால் ஆயிரங்கோடிகள்
நடமாடும் மாளிகைகள்

Thursday, May 26, 2016

முருகா சரணம்

முருகா .! அறுபடை வாசா.!
அழகா! அபிஷேகப் பிரியா!
அசுர சம்ஹாரா!
அன்பருக்கு அருளும் ஆறுமுகா!
கணபதி தம்பி கார்த்திகேயா.!
நம்பினவர்களுக்கு நண்மைதரும்
நடராஜன் மைந்தா!
நம்பிராஜன் மருகா!
வள்ளிமணளா!
   வேடா ! வ்ருத்தா!
ஆவினன் குடிவாழ்
தண்டபாணி தெய்வமே!
  திருத்தணி நாதா!
திருப்பரங்குன்ற வேலா!
திருச்செந்தூர் சூரா! வீரா!தீரா!   அழகர் மலை  வாசா!
அப்பனுக்குஆசனான சுவாமிமலை
தெய்வமே!
குன்றுதோராடும் குன்னக்குடியோனே!
விராலிமலைவாசா!
உன் னருளால் வாழ்கின்றேன் .
உன் திருவடிகளே ! சரணம்!
கந்தா சரணம் ! கடம்பா சரணம்!
கார்த்திகேயா ! சரணம்!
கிரிவாசா  வாசா சரணம்!
காங்கேயா சரணம்.
கௌரி புத்திரா சரணம்!
சரவணபவா சரணம்.! சரணம்!
ஷண்முகா சரணம்! சரணம்!
சாமிநாதா ! சரணம் சரணம்!

Monday, May 23, 2016

தாசானுதாசன்

खुशामद करके जीना क्या जीना है।
धन  प्रधान नहीं , धनलक्ष्मी वर प्रधान ।
दासानदास बनने में ही अति आनंद। अति संतोष।
अति शांति। आत्मोन्नतति ।
कबीर ने कहा : माल मुल्क तो हरि देत है,
हरिजन हरी ही देत।
முகஸ்துதி செய்து வாழ்வது வாழ்க்கையா ?
பொருள் முக்யமல்ல.
திருமகள்  வரமே முக்கியம்

கபீர் சொல்கிறார் :

நாடும் பொருளும்  ஹரி அளிப்பார் .
பக்தன் அளிப்பான் ஹரியை
தாசன் அளிக்கும் ஹரியைக்காண
தொண்டரடிப்பொடியாழ்வராக வேண்டும்.

நாடும் பொருளும் என்று  தோஹையை மொழிபெயர்த்தேன்.
தமிழின் இனிமை கண்டேன்.
நாடு என்றால் தேசம்.
நாடும் பொருள் என்று எழுதியதில் விரும்பும் பொருள்
தருவார் ஹரி.
தமிழ் ஆழ் பொருள் மொழி

Sunday, May 22, 2016

இறைவா போற்றி.

        காலை  நேரம்.  
கடவுளைத் தொழுதேன் .
கணபதியே போற்றி.
கந்தா போற்றி
சிவனே  போற்றி .
துர்கையே போற்றி.

    கடவுள் அருளால்  இன்று எங்கள்  திருமண நாள்.

    என் மனைவி கோமதியை கரம் பிடித்து ௪௧ ஆண்டுகள் 


நாற்பத்தி  ரெண்டாவது  ஆண்டு  அடி எடுத்துவைக்கிறோம்.


சாவித்திரி   சத்தியவானை காப்பாற்றியது கதை .ஆனால் 


என்  மனைவி என்னைப் போராடி காப்பாற்றியது உண்மை. 


 அன்பு ,மகிழ்ச்சி ,ஆனந்தம் இந்த   வாழ்க்கை ஒரு போராட்டம்.

அதில் மகிழ்ச்சி  சக்தி ,எழுச்சி பெற ஆண்டவன் அருள்  .

அவனருளால்  இணையும் திருமண பந்தம்.

அந்த  பந்தத்தில் எப்படி ஒரு நெருக்கம்.

பாசம். நாம் இருவர், நம் குடும்பம் .நம் முன்னேற்றம்.

தானம் தர்மம். எப்படியோ   வாழ்நாளில் ஒரு முன்னேற்றம். 

இந்த இல்லற பந்தம் ,இனியபந்தமாக ,இணை பிரியா பந்தமாக 

மனக்கசப்புகளுடன் ,சண்டைகளுடன் மகிழ்ச்சியாக 

வளர்ச்சியாக அமைத்த ஆண்டவனின் அமைப்புக்கு நன்றி. 

உனக்கு நான் எனக்கு நீ  என்று  ஆக்கி  அகிலவாழ்க்கைக்கு  

பொருள் பொருந்திய பொருளாதாரம்  இல்லாவிட்டாலும் 

பொருளுள்ள  தாரம் பொருந்திவிட்டால் இன்பமே.

அந்த இறைவன் எங்களுக்கு ஆரோக்கியம் அளிக்க வேண்டும்.

எங்களது  பரம்பரை செழிக்க  மூன்று மழலைச்செல்வங்கள் .
மகன்கள் -மருமகள்கள் .மகள் -மருமகன் 

பேரங்கள்,பேத்திகள்  அனைவரின் ஆரோக்கியம் ,ஞானம்  ,ஆஸ்தி

 வளம் பெற ,அகிலம் வலம்  வர ,அவனியில் புகழ்பெற.

மானிடப்பிறவி  மாண்பு பெற மதிப்பு பெற ஆண்டவன் எப்பொழுதும் 

துணை நின்று க்ருபைகாட்ட  பிரார்த்தனைகள்.

கணேசாய நமஹ.  கந்தாய  நமஹ . சிவாய நமஹ. துர்காய நமஹ .










  

Thursday, May 19, 2016

யாகம்

ரகுநாத கிருஷ்ண மூர்த்தி அவர்கள் பதிவு நகல் . அவருக்கு நன்றி
ஐந்து யாகங்கள

***************************
சித்தர்களும், யோகிகளும் பல்வேறு யாகங்கள் செய்து தவ வலிமைகள் பெற்றனர்.
முற்கால அரசர்களோ பல யாகங்கள் செய்து தங்கள் இராஜ்ஜியங்களையும், படை வலிமைகளையும் பெருக்கிக் கொண்டனர்.
யாகங்களால் இவை மட்டுமல்ல, பெறுதற்கரிய பிறவிப் பேறும் பெற முடியும்.
வாழ்க்கையில் யோகிகள் மட்டுமல்ல, இல்லறத்தாரும் கடைப்பிடிக்க வேண்டிய சில யாகங்கள் உண்டு.
இல்லறத்தில் வாழும் ஒவ்வொரு வரும் தினமும் செய்யவேண்டிய
5 வித யாகங்களை கீழ்க் கண்டவாறு பெரியோர்கள் வகுத்துள்ளனர்.
1.தேவயாகம், 2.பூத யாகம், 3.மனிதயாகம், 4.பிரம்ம யாகம், 5.பிதுர் யாகம்.
தேவ யாகம்:
-------------------------
ஒவ்வொருவரும் தினம் ஏதாவது ஒரு தெய்வத் திருமேனியைத் தரிசித்து வணங்க வேண்டும்.
பூத யாகம்:
---------------------
ஒவ்வொருவரும் தினமும் ஒரு பிராணிக்கு (பசு, பூனை, காகம், நாய், எறும்பு, குருவி, குரங்கு, பட்சி ஆகிய ஏதாவது ஒர் உயிரினத் துக்கு) ஒருபிடி உணவு அளிக்க வேண்டும்.
மனித யாகம்:
---------------------------
தினமும் ஒரு ஏழை மனிதனுக்கு உணவளித்து வாழ்தல் மனித யாகம்.
பிரம்ம யாகம்:
------------------------------
அறிவை கொடுத்த ஆசானையும் ஞானம் கொடுத்த ரிஷியையும், தெளிவை கொடுத்த பெரியவர்களையும் மதித்து நடப்பது
பிரம்ம யெக்கியமாகும்.
பிதுர் யாகம்:
-------------------------
நம்முடைய காலஞ்சென்ற மூதாதையர்களுக்கு அர்ப்பணம் செய்தல், தீபம் ஏற்றல் முதலியவற்றைத் தவறாமல் செய்வது பிதுர்யாகம்.
யாகம் செய்வதனால் பயன் உண்டா?
என்றும் பஞ்சயெக்கியம் என்பது என்ன?
யாகம் என்ற வார்த்தையின் பொருள் அர்ப்பணித்தல் ஆகும்.
நம்மிடம் உள்ளபொருட்களில் புனிதமானவைகள் என கருத கூடியதை,
இறைவனுக்கு அர்ப்பணம் செய்வதே
யாகம் ஆகும்.
அம்மா சமைத்த உணவை எடுத்து அம்மாவுக்கே குழந்தை ஊட்டினால் தாய் சந்தோஷப்பட மாட்டாளா?
அதே போல் இறைவன் படைத்ததை இறைவனுக்கே கொடுக்கிறோம்.
அம்மா கட்டி பிடித்து முத்தம் தருவது போல்,
கடவுளும் நமது பிராத்தனைக்கு எதாவது தருவார்.
அதனால் தான் வேதங்கள் யாகம் செய்வதை
தர்மகாண்டத்தில் பேசுகிறது.
பலன் நோக்கும் யாகமாக இருந்தாலும் பலன் நோக்காயாகமாக இருந்தாலும் யாகத்தை செய்பவன் நிச்சயம் சிறப்பு அடைகிறான்.
நெருப்பை வளர்த்து நெய்யை விட்டு, பொருட்களை ஆகுதிகளாக போடும்
யாகத்தில் விஞ்ஞான பூர்வமான பலனும் உண்டு.
ஒவ்வொரு நாட்டிலும்,தொழிற் சாலைகளிலும் சிறப்பான யாக குண்டங்களை அமைத்து நியதிப்படி யாகம் செய்யப்பட்டிருக்குமேயானால்,
இன்று பூமி பந்து உஷ்ணம் அடைந்திருக்கவும் முடியாது.
சுற்றுபுறச் சூழல் கெட்டுருக்கவும் செய்யாது.
இனி பஞ்சயெக்கியம் பற்றிப் பார்ப்போம்:
தினசரி கடவுளை வழிபடுவது தெய்வயெக்கியமாகும்.
உடல் தந்த பெற்றோரை அன்றாடம் வணங்குவது பிதுர்யெக்கியம் ஆகும்.
நலிந்தோருக்கு தொண்டு செய்வது மனுஷ யெக்கியமாகும்.
பச்சை புல்லையும், படர்ந்து நிற்கும் கொடியையும்,ஓங்கி நிற்கும் மரத்தையும் கள்ளமில்லாத பறவைகளையும், களங்கமில்லாத விலங்குகளையும் காப்பது பூதயெக்கியமாகும்.
அறிவை கொடுத்த ஆசானையும் ஞானம் கொடுத்த ரிஷியையும், தெளிவை கொடுத்த பெரியவர்களையும் மதித்து நடப்பதுபிரம்ம யெக்கியமாகும்.
இந்த ஐந்து யாகத்தையும் எந்த செலவும் இல்லாது
யார்வேண்டுமானாலும் செய்யலாம்.
அப்படி செய்பவன் மட்டும் தான் மனிதன் ஆவான்.
###$$###$$###$$###$$###$$###$$####$$###
சிவ வடிவங்கள்
-----------------------------------
சிவ வடிவங்கள் என்பவை
சைவக் கடவுளான
சிவபெருமானின்
வடிவங்களாக
ஆகமங்களும், நூல்களும் கூறுபவனவாகும்.
இவ்வடிவங்களில் சிவபெருமான் தன்னால் படைக்கப்பட்ட உயிர்களுக்கு அருளுகின்றார்.
வடிவ வகைகள்
----------------------------------
இச்சிவ வடிவங்களை உரு, அரு, அருஉரு என மூன்றாக வகைப்
படுத்துகின்றனர்.
இதனை அருவம், உருவம், அருவுருவம் என்றும்,
பிரவிருத்தர், சத்தர், பரம்பொருள் என்றும்
சகளம், நிட்களம், சகள நிட்களம் எனவும்
பலவாறாக சைவர்கள் அழைக்கின்றனர்.
உருவ நிலை
----------------------------
சகளத் திருமேனி, சகளம் என பலவாறு அறியப்படும் உருவ நிலையானது
பிரம்மன், திருமால், உருத்திரன், மகேசன் எனும் நான்கு தெய்வ வடிவங்களைக் குறிப்பதாகும்.
தலை, உடல், கை, கால் என உறுப்புகள் அமைந்த
சிவ வடிவங்கள் இவ்வகையில் அடங்கும்.
அருவ நிலை
---------------------------
நிட்களம், நிட்களத் திருமேனி என்று அறியப்படும் அருவ நிலையானது
விந்து, நாதம், சக்தி, சிவம் எனும் நான்கினைக் குறிப்பதாகும்.
உறுப்புகள் எதுவும் இல்லாத சிவலிங்கம் இவ்வருவ நிலையில் அடங்கும்.
அருவுருவ நிலை
------------------------------------
சகளம், சகளத் திருமேனி என்று அறியப்படும் அருவுருவ நிலையானது,
சதாசிவ வடிவமாக இருக்கும்
முகலிங்கத்தினை குறிப்பதாக அமைகிறது.
நவந்தருபேதம்
--------------------------------
உருவ நிலையில் நான்கு,
அருவ நிலையில் நான்கு
மற்றும் அருவுருவ நிலையில் ஒன்று
என ஒன்பதும் நவந்தரும் பேதமாகும்.
இவ்வுருவங்கள் உயிர்களின் பிறப்பினை ஒழிக்க சிவபெருமான் எடுத்தவையாகும்.
இதனை,
"நவந்தருபேதம்
ஏக நாதனே நடிப்பன்"
என சிவஞான சித்தியார் குறிப்பிடுகிறார்.
பல்வேறு உருவ
-----------------------------------
நிலைகள்
----------------------
நவந்தருபேதத்தில் சிவபெருமானின் உருவ நிலை
பிரம்மா, திருமால், உருத்திரன், மகேசுவரன்
என நான்கென குறிப்பிட்டலும்,
நூல்கள் பல்வேறு உருவ நிலைகளைக் குறிப்படுகின்றன.
பஞ்சகுண மூர்த்திகள், பதினாறு வடிவங்கள், பதினெட்டு வடிவங்கள், மகேசுவர வடிவங்கள், அஷ்டாஷ்ட மூர்த்திகள்
என பல்வேறு வகைப்பாடுகளும்,
எண்ணற்ற சிவவடிவங்களும் உள்ளன.
ஐவகை உருவம்
-----------------------------------
மகாபுராணங்களில் ஒன்றான லிங்க புராணம்
சத்தியோஜாதம், வாமதேவம், தத்புருஷம், அகோரரூபம், ஈசன் என ஐவகை உருவம் குறித்து விளக்குகிறது.
பஞ்சகுண சிவ
******************
மூர்த்திகள்
**************
வக்கிரம், சாந்தம், வசீகரம், ஆனந்தம், கருணை
முதலிய குணங்களை பஞ்ச குணம் என்கிறோம்.
இந்த குணங்களின் அடிப்படையில்,
  சிவனது ஐந்து மூர்த்தர்கள் வகைப்படுத்தப் படுதலை,
பஞ்சகுண சிவமூர்த்திகள் என்கிறார்கள் சைவர்கள்.
வக்ர மூர்த்தி - பைரவர்
சாந்த மூர்த்தி - தட்சிணாமூர்த்தி
வசீகர மூர்த்தி - பிட்சாடனர்
ஆனந்த மூர்த்தி - நடராசர்
கருணா மூர்த்தி - சோமாஸ்கந்தர்
சிவ மூர்த்தங்கள்
*********************
சிவாகமங்கள் சிவபெருமானின் 5 முகத்திற்கும் 5 மூர்த்திகளை முன்நிறுத்துகின்றன.
இவ்வாறான இருபத்தைந்து மூர்த்தங்களும் மகேசுவர மூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
ஈசானம் -
--------------------
சோமாஸ்கந்தர், நடராஜர், ரிஷபாரூடர், சந்திரசேகரர், கல்யாணசுந்தரர்
தத்புருஷம் -
---------------------------
பிட்சாடனர், காமசம்ஹாரர், சலந்தராகரர், கால சம்ஹாரர், திரிபுராந்தகர்
அகோரம் -
-----------------------
கஜசம்ஹாரர், வீரபத்திரர், தட்சிணாமூர்த்தி, நீலகண்டர், கிராதர்
வாமதேவம் -
--------------------------
கங்காளர், கஜாரி, ஏகபாதர், சக்ரதானர், சண்டேசர்
சத்யோஜாதம் -
*****************
இலிங்கோத்பவர், சுகாசனர், அர்த்தநாரீஸ்வரர், அரியர்த்த மூர்த்தி,
உமா மகேஸ்வரர்
ஓம் நமசிவாய
###$$###$$###$$###$$###$$###$$####$$###
சில சிந்தனைகள் தங்கள் மேலான பார்வைக்கு
============================================
1.    சொல்வதனால் குறைந்து போகும் பொருள்கள் இரண்டு

அவை:- புண்ணியமும், பாவமுமாகும் ஆகும்.
நீ செய்த புண்ணியங்களை – தருமங்களை – நீயே எடுத்துச் சொல்வதனால் புண்ணியம் குறையும்.
நீ செய்த பாவங்களை நீயே பிறரிடம் கூறுவதனால் பாவம் குறையும்.
குறைய வேண்டியது பாவம்; நிறைய வேண்டியது புண்ணியம்.
ஆதலினால் நீ செய்த புண்ணியத்தைக் கூறாதே; பாவத்தைக் கூறு.
2.     நீ இறைவனுடைய கருணையைப் பெற வேண்டுமானால் அதற்கு வழி ஒன்று உண்டு.
அது வெறும் வணக்கமும் வழிபாடும் மட்டுமன்று.
துன்பமுற்றுத் துடிக்கிற உயிர்களிடம் நீ கருணை செய்.
அவற்றின் துன்பத்தை நீக்கு.
நீ பிற உயிர்களிடம் கருணை செய்தால்
கடவுள் உன்னிடம் கருணை கொள்வார்.
கருணையால் கருணையைப் பெறலாம்.
இதனை ஒருபொழுதும் மறவாதே.
3.    உலகத்திலே நீ இரு.
ஆனால் உலகம் உன்னிடத்தில் இருக்கக்கூடாது.
குடும்பத்தில் நீ இரு.
ஆனால், குடும்பம் உன்னிடத்தில் இருக்கக்கூடாது.
உலகமும் குடும்பமும் உள்ளத்தில் புகுந்தால்
நீ அழுந்தி விடுவாய்.
வண்டிமேல் நீ ஏறு; வண்டி உன்மேல் ஏறக்கூடாது.
கப்பல் கடலில் இருக்க வேண்டும், கடல்
கப்பலில் புகக்கூடாது. கடல் நீர் கப்பலில் புகுந்தால் கப்பல் அமிழ்ந்து விடும்.
4.    வேறு எந்தப் பிராணிகளுக்கும் இல்லாத
நரையை உனக்கு இறைவன் தந்தது எதன் பொருட்டு என்று சற்றுச் சிந்தித்துப் பார்;
ஏனைய பிராணிகள் உண்பதற்கும் உறங்குவதற்கும் மட்டுமே ஏற்பட்டவை;
மனிதனாகிய உன்னில் உறையும் உத்தமனை
அடைய நீ வந்தாய்.
அதை மறந்தவருக்கு ஓர்  உணர்ச்சி வரும் பொருட்டே இறைவன்
நரையைத் தந்தான்.
நரைக்கத் தொடங்கும்போதாவது
உன் ஆவி
ஈடேறும் நெறியில் செல்.
5.    யாசித்து, நெய்யும் பாலும் தயிரும் சேர்நத் சிறந்த அன்னத்தை உண்பதைவிட,
உழைத்து உண்ணும் தண்ணீரும் சோறும் சிறந்தது.
வீரமும் புகழுமில்லாமல் மங்கி நெடுங்காலம் இருப்பதைவிட,
வீரமும் புகழும்  பெற்றுச்
சிறிது காலம் வாழ்வது சிறந்தது.
உமிக் குவியல் போல் நெடுநேரம் காந்திக்
கருகுவதை விட,
தைலமுள்ள மரம் போல்
ஜொலித்துச் சிறிது நேரம் எரிவது சிறந்தது.
6.    புலன்களை வென்றவனே வீரன்.
இறைவனுடைய இலக்கணங்களை உணர்ந்தவனே ஞானி.
துன்பங்களைப் பொறுப்பவனே தவசி.
விருந்தினருக்கென்று வாழ்பவனே இல்லறத்தான்.
அறஞ் செய்ய வாய்ப்பு இல்லாதபோது இறந்தவனே இருந்தவன்.
கொடுக்காமல் பொருளைத் திரட்டி வாழ்பவனே இறந்தவன்.
7.    அழுக்கு மூன்று வகையாகும்..
i)    மன அழுக்கு.
அவை:- பொறாமை, ஆசை, கோபம்,
பகை என்பன.
இந்த மன அழுக்கைத் ‘தியானம்’ என்ற நீரால் கழுவுக.
ii).    வாயழுக்கு, அவை:-
பொய், புறங்கூறல், தீச்சொல்
என்பன.
இந்த வாயழுக்கைத் ‘துதி’ என்னும் நீரால் கழுவுக.
iii). மெய்யழுக்கு.அவை:-
கொலை, புலை, பிறன்மனை
நயத்தல், களவு முதலியன.
இந்த மெய்யழுக்கை ‘அர்ச்சனை’ என்னும் நீரால் கழுவுக.
8.    நாவுக்கு அடிமையாகாதே!
‘நல்லுணவு எங்கே? எங்கே?
என்று தேடி ஏங்காதே.
இறைவனருளால் கிடைத்ததை உண்டு திருப்தியடை.
நாவுக்கு அடிமையானால் உனது நல் குறையும்.
மீன் சதா உணவாசையினால் ஒழியாமல் தண்ணீரில்,
உலாவுகிறது,
ஒருசமயம் உணவாசையால் தூண்டிலில் பட்டு இறந்துவிடுகிறது.
9.    பாம்பு, தேள், நட்டுவாக்கிலி முதலிய பெருந் துன்பத்தைச் 
செய்யும் உயிர்களைப் போலவும்.
பெருச்சாளி, எலி, பூனை, நாய் முதலிய துன்பத்தைச் செய்யும் உயிர்களைப் போலவும்,
கொசு, மூட்டை பூச்சி, உண்ணி முதலிய சிறு துண்பத்தைச்
செய்யும் உயிர்களைப் போலும் நீ இருக்காதே.
அனில் என்ற உயிரை நோக்கு;
அது ஒருவருக்கும் தீங்கு செய்யாமல் வாழ்கிறது
சேதுபந்தனத்தில் ஸ்ரீராமருக்கு உதவி செய்தது.
அதுபோல் வாழ்தல் வேண்டும்.
10.     பிறர் உன்னை திட்டுவார்களாயின் அந்த வன்சொற்களை இன் சொற்களாக கருது.
நீ எக்காரணத்தைக் கொண்டும் எப்போதும் எவ்விடத்தும் பிறரை வன்சொல் கூறி வையாதே.
கிடைத்தது கூழாயினும் அதனை
நெய்யன்னமாகக் கருதி உணவு செய்.
பழம் பாயேயானாலும் பஞ்சனையாகக் கருதிப் படு.
கசப்புப் பெருளாயினும் அதனைக் கற்கண்டாகக் கருதி உட்கொள்.
அதனால் மெய்ப்பதம் காண்பாய்.
திருச்சிற்றம்பலம்
#######$$$$###$$###$$###$$###$$###$$###
நால்வர்  பாதையில்...
~~~~~~~~~~~~~~~~~
நஞ்சுண்ட நாயகனாகிய ஈசனை,
ஞானசம்பந்தர் கொஞ்சியும்,
திருநாவுக்கரசர் அஞ்சியும்,
மணிவாசகர் கெஞ்சியும்,
சுந்தரர் விஞ்சியும் பதிகங்கள் பாடியுள்ளனர்.
ஞானசம்பந்தரை பாலைக் காட்டியும்,
திருநாவுக்கரசருக்கு சூலை (நோய்) காட்டியும்,
மணிவாசகருக்கு காலை காட்டியும்,
சுந்தரரை ஓலை காட்டியும் ஈசன் தடுத்தாட்கொண்டார்.
நால்வரும் சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்மறைகளின் வழி நின்று பாடி அருள்பெற்றனர்.
சிதம்பரம் தில்லைக் கோயிலுக்கு நான்கு வேதங்களே நான்கு கோபுரங்களாக அமைந்துள்ளன.
நான்கு கோபுர வழியாகவும் மேற்கண்ட நால்வரும் வழிவந்து வழிபாடாற்றியுள்ளனர்.
கிழக்கு கோபுரம் வழியாக மாணிக்க வாசகரும்,
தெற்கு கோபுரம் வழியாக திருஞானசம்பந்தரும்,
மேற்கு கோபுரம் வழியாக திருநாவுக்கரசரும்,
வடக்கு கோபுரம் வழியாக சுந்தரரும்
வந்து நடராஜப் பெருமானை தரிசித்து பேறுபெற்றனர்.
நடராஜப் பெருமான் ஏன் அவர்களின் மனதில் இந்த குறிப்பிட்ட வாசல் வழியாகத் தான் வரவேண்டும் என்று பணித்தார்?
அதற்கு அழகான பதிலை ஆன்றோர்கள் தந்தருளியுள்ளனர்.
திருஞானசம்பந்தர் -
************************
சீர்காழி தோணியப்பரின் அருளால்,
உமையம்மையின் திருஞானப்பால் குடித்த, குழந்தை வடிவினர்.
பெரியவர்கள் குழந்தைகளைக் கொஞ்சுவது போல,
குழந்தையே தெய்வத்தைக் கொஞ்சும் விதத்தில்
பாடல்களைப் பாடியுள்ளவர்.
குழந்தை நம்மைத் தேடி வரும்போது,
நாமே அந்தக் குழந்தையை நோக்கிச் சென்று கொஞ்ச விழைவது போல,
தாமே முன்னோக்கிச் சென்று (நடராஜப் பெருமான் தெற்கு நோக்கி காட்சியருளுபவர்) குழந்தையை வரவேற்பது போல,
நடராஜப் பெருமான் சம்பந்தரை தெற்கு கோபுரம் வழியாக
வரச் செய்து அருள்பாலித்தார்.
திருநாவுக்கரசர் -
**********************
மிகவும் பணிவானர்.
உழவாரப் பணி செய்தவர்.
மகேஸ்வரனின் அருள் பெற மிகவும் கெஞ்சிப் பாடியவர்.
திருநீறு பூசிய பின் சூலை எனும் வயிற்று வலி நோய் தீர்ந்து,
சிவனை நெக்குருகப் பாடியவர்.
அவருக்காக, அருள் தரும் அபய ஹஸ்தத்தினால் (நடராஜரின் வலக்கை மேற்கு நோக்கி நீண்டிருக்கும்) அருள,
அப்பர் சுவாமிகளை மேற்கு கோபுர வாயில் வழியாக வரச் செய்து அருள்பாலித்தார்.
சுந்தரர் –
************
வன் தொண்டர்.
ஓலையைக் காட்டி சுந்தரன் தன் அடிமை என திருவிளையாடல் செய்து,
சுந்தரரை ஈசன் ஆட்கொண்டருளினார்.
ஈசனை ஒரு நண்பன் போல நினைத்தவர்.
விஞ்சிப் பாடியவர்.
பரமேசனையே தன் காதலிக்காக தூது போகச் சொல்லியவர்.
ஒரு நண்பனானவர் எப்படி தன் நண்பரின் பின்பக்கத்திலிருந்து வந்து,
தோள் மேல் கை போட்டு நட்பு கொண்டாடுவாரோ
அதே போல, சுந்தரர் நடராஜப் பெருமானை (நடராஜரின் பின் பக்கமாகிய வடக்கு) வந்தடைந்தார்.
சுந்தரரை வடக்கு கோபுர வாயில் வழியாக வரச் செய்து அருள்பாலித்தார்.
மாணிக்கவாசகர் –
***********************
இவர் பாடல்களின் வாசகங்கள் ஒவ்வொன்றும் மாணிக்கம் போல மதிப்புடையதாக இருந்ததால்,
இறைவனாலேயே மாணிக்கவாசகர் என போற்றப்பட்டவர்.
திருப்பெருந்துறையில் கல்லால மரத்தடியின் கீழ் யோக நிலையில் அமர்ந்திருந்த
தட்சிணாமூர்த்தியின் இடது புறத் திருவடியின் திருவொளி கண்டு
ஞான மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்தவர்.
ஆகையால், அவரை (நடராஜப் பெருமானின் இடது புறமாகிய) கிழக்கு கோபுரம் வழியாக வரச் செய்து அவருக்கு அருள்பாலித்தார்.
நால்வர்கள் காட்டிய ந(நா)ல்வழியே சென்று,
அவர்கள் காட்டிய அறநெறியைப் பின்பற்றி,
அவர்களின் பாடல்களை பக்தியோடு பாடி, பரமனின்
அருளைப் பெறுவோம்.

Wednesday, May 18, 2016

அறிவியல் போல் ஆன்மீகமும் அன்பு ,கடமை ,தானம் அறமே கடவுள்.

   ஆன்மிகம்  அடிப்படை 

மன ஒருமைப்பாடு 

வாய்மை 

கடமை 
தானம் 
தர்மம் 
பரோபகாரம் 

உலகப்பற்று இன்மை 

புலனடக்கம் 

அஹிம்சை 
 அலௌகீகம்

ஆசைகள் பெண் பொன் மண் இன்றி இருத்தல்

கடவுளின் நாமம் தவிர வேறு சிந்தனை இல்லாதிருத்தல்.

இப்படி  வையகம் இயங்கினால் 

எப்படி இருக்கும் ?

ஜபமாலை  தயாரிப்பது யார் ?
உணவு தயாரிப்பது யார் ?
தண்ணீர் ஆகாரம் 
காற்று ஆகாரம் 
நடக்குமா ?
நடக்காது என்பதற்கு  புத்தர் பாயாசம் அருந்திய சான்று. 
கையில் பிக்ஷைப்பாத்திரம்
மரத்தின் கீழ் வாசம் 

பிறகு எப்படி வைர நகை அலங்காரம். 

வானளாவிய கோபுரம் பணம் இன்றி 
வசூலின்றி  நன்கொடை இன்றிவருமா ?
இவ்வுலகில்  ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை செய்யும் அறிவு ஆற்றல் உள்ளது.

ஒரு புகழ்  பெற்ற  அரசனால் பள்ளம் தோண்ட முடியுமா ?
விவசாயம் செய்ய முடியுமா?
ஆஷ்ராம்சாமியார்கள்  மந்திரத்தால் மேடம் கட்ட முடியுமா ?
சாமியார்கள் மாதிரி ஆன்மிகம் பேச முடியுமா ?
தோழி ஞானம் என்பதுதான் இறைவன் அளிப்பது.

ஒவ்வொருவருக்கும் ஒருஞானம். 
அதன்படி தொழிலாற்றினால் போதும் .
செய்யும் தொழிலே  தெய்வம்.
ஆலயம் செல்லவேண்டாம்.
நாம் ஒரு அதிகாரி என்றால் நேர்மையாக கோப்பை நகர்த்தவேண்டும்.
கோப்பையில் குடியிருக்கக்கூடாது. 
தொழில் தர்மம்  தான் ஆன்மிகம்.
ஆன்மீக சக்திகொண்டு காமலீலை செய்து அவமானப்படக்கூடாது.
தங்கள் தங்கள் திறமையால் 
சமுதாயத்தில் ஒழுக்கம் ஏற்படுத்தவேண்டும்.
அழகான குரல்வளம் என்று ஆபாசப்பாடல் பாடி 
இளைஞர்களைக் கெடுக்கக்கூடாது.
அதைத்தான் கடமை செய்தால் பலன் கிடைக்கும் .
அந்த பலன் இறைவன் அருள்படி.
ஒரேமாதிரி  பொம்மை செய்தாலும் 
சிலருக்கு அதிகம் விற்பனையாகும். 
சிலருக்கு ஆகாது . இதுதான் இறைவனின் மேன்மை. 
நமது புண்ணியபாவ பிரதிபலிப்பு. 

அன்பு ,கடமை ,தானம் அறமே கடவுள்.

Saturday, May 14, 2016

मुख पुस्तिका।

अजनबी है हम ।
अपरिचित हम।
जाने अनजाने
अनदेखे संपर्क में
आ जाते हैं।
बिना देखे दोस्ती
न जाने प्यार
हंस बनता दूत।
मेघ देता संदेश।
वैग्ञानिक युग में तो
मुख पुस्तिका द्वारा बंधन।
कलि युग की दोस्ती
हाथ हाथ में होतीे हैं
दोस्ती। कली बढ
फूल बन फूल ता फलता
खिलते हैं चेहरा।
दोस्ती बंधन प्यार बंधन
कभी कभी शादी बंधन।
ईश्वरीय बंधन।
मुख पुस्तिका बंधन।
दिन दिन रक्षा बंधन।
हीरों से सज्जित भगावान
साल में एक ही दिन ।
आपके दर्शनार्थ ।
कितना निकट दर्शन ।
तिरुमलै बालाजी का।
मंगल प्रदायिनी आनंद प्रद ।

Thursday, May 12, 2016

வாழ்க்கையின் சில உண்மைகள்

SOME TRUTHS OF LIFE!!!.... >
✍1.जीवन  வாழ்க்கை
    நீ பிறக்கும் பொழுது அழுதாய். உலகமே விழா கொண்டாடியது.

உன் வாழ்ககையில்  நீ வாழும் முறையால்  உலகமே அழவேண்டுக் நீ விழா கொண்டாட வேண்டும்.

जब तुम पैदा हुए थे तो तुम रोए थे जबकि पूरी दुनिया ने जश्न मनाया था। अपना जीवन ऐसे जियो कि तुम्हारी मौत पर पूरी दुनिया रोए और तुम जश्न मनाओ।

✍2.कठिनाइयो  கஷ்டங்கள்
  நீ உன் கஷ்டங்களுக்கு காரணம்
பிரச்சனைகளுக்கு காயணம்  மற்றவர்கள் என்று எண்ணும் வரை உன் கஷ்டங்களையும் பிரச்சனைகளையும்  தீர்க்க முடியாது.

जब तक आप अपनी समस्याओं एंव कठिनाइयों की वजह दूसरों को मानते है, तब तक आप अपनी समस्याओं एंव कठिनाइयों को मिटा नहीं सकते|

✍3.असंभव   முடியாதது.
       இவ்வுலகில் முடியாதது என்பது எதுவும் இல்லை.  நாம் நினைப்பதெல்லாம் செய்யமுடியும் .
இன்று வரை நாம் நினைக்காததெல்லாம்  நினைக்கமுடியும் .

इस दुनिया में असंभव कुछ भी नहीं| हम वो सब कर सकते है, जो हम सोच सकते है और हम वो सब सोच सकते है, जो आज तक हमने नहीं सोचा|

✍4.हार ना मानना  தாேல்வியை ஒப்புக்கொள்ளக்கூடாது.

    குறிக்கோள் அடைய முன்னேறும் வழியில் இருந்து  நடுவில் திரும்புவதால்  எவ்வித பயனும் இல்லை. நீங்கள் நிர்ணயித்த தூரம்
சென்றால் தான் குறிக்கோளில் வெற்றிபெறமுடியும்

बीच रास्ते से लौटने का कोई फायदा नहीं क्योंकि लौटने पर आपको उतनी ही दूरी तय करनी पड़ेगी जितनी दूरी तय करने पर आप लक्ष्य तक पहुँच सकते है|

✍5.हार जीत  வெற்றி தோல்வி
வெற்றி உலகத்திற்கு நம்மை அறிமுகப்படுத்துகிறது.தோல்வி  நமக்கு உலகத்தை அறிமுகப்படுத்துகிறது.

सफलता हमारा परिचय दुनिया को करवाती है और असफलता हमें दुनिया का परिचय करवाती है|
✍6.आत्मविश्वास தன்னம்பிக்கை
மனதுடன் ஒரு பொருளை விரும்பினால் அது உனக்கு கிடைக்க உன் செயல் ஆரம்பித்து வடுகிறது.

अगर किसी चीज़ को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने में लग जाती है
✍7.महानता  மதிப்பு மரியாதை
ம ஹானதா உயர்ந்த நிலை விழுவதால் அல்ல அடிக்கடி விழுந்தெழுவதால் உண்டாகிறது.
महानता कभी न गिरने में नहीं बल्कि हर बार गिरकर उठ जाने में है|
✍8.गलतिया  தவறுகள்
    நீங்கள்  உங்கள்  தவறுகளை  ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் மீண்டும்  ஒரு தவறு செய்து விடுவீர்கள்.நீங்கள் உங்கள் தவறை ஏற்றால் தான் தவறுகளிலிருந்து நீங்கள் பாடம் கற்க முடியும்

अगर आप समय पर अपनी गलतियों को स्वीकार नहीं करते है तो आप एक और गलती कर बैठते है| आप अपनी गलतियों से तभी सीख सकते है जब आप अपनी गलतियों को स्वीकार करते है|

✍9.चिन्ता கவலை
       உங்கள் கட்டுப்பாட்டில்  உங்கள் பேச்சு சூழ் நிலை யால் கவலை இல்லை என்று வருத்தப்படுவது 
   உங்கள் காலவிரயம் தான் ஏற்படும்.எதிர்கால வருத்தம்தான் .

 

अगर आप उन बातों एंव परिस्थितियों की वजह से चिंतित हो जाते है, जो आपके नियंत्रण में नहीं तो इसका परिणाम समय की बर्बादी एवं भविष्य पछतावा है|
✍10.शक्ति  . சக்தி

உலகின் ஆற்றல் முழுவதும் முதலில் நம்முடையதுதான். நாம் நம் கண்ணை மூடிக்  கொண்டு இருட்டாக இருக்கிறது  என்று நினைக்கிறோம்.
ब्रह्माण्ड की सारी शक्तियां पहले से हमारी हैं| वो हम हैं जो अपनी आँखों पर हाथ रख लेते हैं और फिर रोते हैं कि कितना अन्धकार है|

✍11.मेहनत   உழைப்பு
  நாம் நம் தலை எழுத்தை நாமே  நிர்ணயிக்க முடியும். நாம் நமக்கு எழுதமுடியவில்லை என்றால்  சூழல் நம் தலை எழுத்தை எழுதிவிடும் .

  
हम चाहें तो अपने आत्मविश्वास और मेहनत के बल पर अपना भाग्य खुद लिख सकते है और अगर हमको अपना भाग्य लिखना नहीं आता तो परिस्थितियां हमारा भाग्य लिख देंगी|
✍12.सपन   கனவுகள்

தூங்கும்போது வருவது கனவல்ல.
நம்மை  தூங்கவிடாமல் செய்வதே  கனவு.
सपने वो नहीं है जो हम नींद में देखते है, सपने वो है जो हमको नींद नहीं आने देते।
✍13.समय காலம்
    நேரம் இல்லை என்று நீங்கள் சொல்ல முடியாது.  மஹான் மற்றும் வெற்றியாளர்களுக்கு கிடைக்கும் நேரம் தான் உங்களுக்கும் கிகை்கிறது.

आप यह नहीं कह सकते कि आपके पास समय नहीं है क्योंकि आपको भी दिन में उतना ही समय (24 घंटे) मिलता है जितना समय महान एंव सफल लोगों को मिलता है|

✍14.विश्वास  நம்பிக்கை

பாழடைந்த உலகத்தில் நம்பிக்கை
ஔி பெறச் செய்ய முடியும் .
நம்பிக்கை கல்லை இறைவனாக்க முடியும் . அவநம்பிக்கை இறைவனால் படைக்கப்பட்ட
மனிதனையும் கல் நெஞ்சக்காரர்கள் ஆக்க முடியும்.
विश्वास में वो शक्ति है जिससे उजड़ी हुई दुनिया में प्रकाश लाया जा सकता है| विश्वास पत्थर को भगवान बना सकता है और अविश्वास भगवान के बनाए इंसान को भी पत्थर दिल बना सकता है|
✍16.सफलता வெற்றி
      தொலைவில் இருந்து பார்க்கும்  போது  எல்லா வழியும் மூடப்பட்டிருப்பதாகத் தெரியும் .
வெற்றியின்  மிக அருகில் செல்லும்போது  தான்  வெற்றி
  வழி திறக்கும்

दूर से हमें आगे के सभी रास्ते बंद नजर आते हैं क्योंकि सफलता के रास्ते हमारे लिए तभी खुलते जब हम उसके बिल्कुल करीब पहुँच जाते है|
✍17.सोच     சிந்தனை

   மழைபெய்தால் எல்லா பறவைகளும் தங்குமிடத்தை தேடும்  ஆனால் பருந்து மேகங்களுக்கு மேல் பறந்து மழையைப்பார்க்கும் .ப்ரச்சனை சமமாக இருந்தாலும்  பார்வையில் வேறுபாடு உண்டாக்குகிறது
 

बारिश की दौरान सारे पक्षी आश्रय की तलाश करते है लेकिन बाज़ बादलों के ऊपर उडकर बारिश को ही नजरअंदाज  कर देते है। समस्याए समान  है, लेकिन आपका नजरिया इनमे अन्तर  पैदा करता है।
✍18. प्रसन्नता  மகிழ்ச்சி

  மகிழ்ச்சி  முதலில் நியமிக்கப்பட்டவை இல்லை.
நம்செயலால் வருவது.
यह पहले से निर्मित कोई चीज नहीं है..ये आप ही के कर्मों से आती है॥

‌‌‌‌‌ ‌ ‌‌‌
श्रीराम जय राम जय जय राम
       ॐ हं हनुमन्त्ये नमः
          जय श्रीरामजी�
      भारत माता की जय      
      वन्देमातरम्
       जय हिन्द
                    
                ❗

⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳

Wednesday, May 4, 2016

संस्कृत श्लोक ----சம்ஸ்க்ருத்  அறிவுரைகள்

अलसस्य कुतो विद्या , अविद्यस्य कुतो धनम् |  ---சோம்பேறிக்கு  கல்வி இல்லை; கல்வியற்றவனுக்கு  தனம் இல்லை .
अधनस्य कुतो मित्रम् , अमित्रस्य कुतः सुखम् || தனமற்றவனுக்கு நட்பில்லை ; நட்பில்லாதவனுக்கு சுகம்  இல்லை. 

संस्कृत श्लोक अर्थ सहित


Sanskrit Shlokas With Meaning in Hindi संस्कृत श्लोक अर्थ सहित

संस्कृत श्लोक

श्लोक 1 :
अलसस्य कुतो विद्या , अविद्यस्य कुतो धनम् |
अधनस्य कुतो मित्रम् , अमित्रस्य कुतः सुखम् ||
अर्थात् : आलसी को विद्या कहाँ अनपढ़ / मूर्ख को धन कहाँ निर्धन को मित्र कहाँ और अमित्र को सुख कहाँ |
———
श्लोक 2 :
आलस्यं हि मनुष्याणां शरीरस्थो महान् रिपुः |  மனிதனுக்கு மிகப்பெரிய எதிரி சோம்பேறித்தனம் .
नास्त्युद्यमसमो बन्धुः कृत्वा यं नावसीदति || சோம்பேறித்தனம்  உறவு உழைப்பு போல் உறவும்நட்பும் எதுவும்  இல்லை. உழைப்பவனுக்குத்    துன்பமே  இல்லை. 
यथा ह्येकेन चक्रेण न रथस्य गतिर्भवेत् |  =
एवं परुषकारेण विना दैवं न सिद्ध्यति ||

ஸஹஜ மார்க்கம்

ஈஷ்வரனை நேரடி தர்ஷனம் கண்டவர்கள்

 ஸஹஜமார்க்கமாக இறைவனைத்  தவிர

வேறு சிந்தனை ெசய்யாதவர்கள்.

காதலர்கள் எங்கு பார்த்தாலும்

 அன்பிற்குஉரியவர்  முகமே தெரியுமாம்.

அவ்வாறே ஸஹஜமார்க்கத்தில்

அதாவது எளியவழியில் இறைவனைக்

 காண ேவறு எவ்வித சிந்தனை இன்றி

 இயல்பான வாழ்க்கை முறை இயற்கையான த்யானம்.

துருவன் மீரா  ஆண்டாள்

  ஸஹஜ அன்பு வழியில் சென்ற  உயர் இறை அன்பர்கள.



Tuesday, May 3, 2016

எத்தனையோ பெரிய மகான்கள் அனைவருக்கும் வணக்கம் .

 

 அவனியில்  நாம்  பார்க்கும்  மனிதர்கள்

  1.அலௌகீக   சிந்தனையாளர்கள் ,

    2.  லௌகீக   சிந்தனையாளர்கள்.

முதல் வகை சிந்தனையாளர்கள்  அன்பு ,அறம் ,பரோபகாரம் ,இரக்கம்
தியாகம் ,பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
வாழ்வது  மற்றவர்களுக்காக .

இரண்டாவது வகை சுயநலம்.

தனக்காக  வாழ்பவர்கள்.
தங்களைச் சார்ந்தோருக்குக்காக  வாழ்ந்து மடிபவர்கள்.
  முதலாவதாவதாவதாக  வாழ்ந்த பாதை  பல
யுகங்களுக்கு   வழிகாட்ட வையகம் நிலைக்க  .

   எத்தனை மகான்கள் முதல்வகையான  வாழ்க்கை வாழ்ந்து
 வையகத்திற்கு அமைதியை ,மன நிறைவை ,முன்னேற்றத்தை அளித்தவர்கள்.

 அவர்கள் வழிகாட்டல் இல்லை  என்றால் வையகம்  இல்லை.

 வேதங்கள், குரான் ,பைபிள் , குரு க்ரந்த   சாஹப் , மகாவீர் ,புத்தர் வாழ்க்கை உபதேசங்கள் , விவேகானந்தர் , ராகவேந்திரர் , சீரடி பாபா ,
கவிஞர்கள்  வ கபீர் ,துளசி ,சந்த்   ஏக்நாத் ,விடோபா ,ராமகிருஷ்ண பர்சமஹ்ச்ம்சர் ,ரமண மகரிஷி 
பக்த  தியாகராஜர் .
 எந்தரோ மஹானுபாவலு  ,அந்திரிகி வந்தனம் .
எத்தனையோ  பெரிய மகான்கள் அனைவருக்கும் வணக்கம் .