Wednesday, April 6, 2016

பகவான் -கடவுள் -ஆண்டவன்

 இறைவனைத் தேடு ?
எங்கே சென்று தேடுவது?
குருவைத்தேடு ?
குருவை எங்கே சென்று தேடுவது ?
அடர்ந்த  வனத்திலா ?
ஆலயங்களிலா ?
ஆஷ்ரமங்களிலா ?

ஹோமம் செய்தா ?
யாஹம் செய்தா ?
  காணிக்கைகள் செலுத்தியா ?
 குருவுக்கு குரு யார் ?
சித்தர்கள் மூலமாகவா ?
 அலைபாயும்  மனதை எப்படி அடக்குவது ?
ஆசை துறந்து வாழவேண்டுமா ?
அனைத்துக்கும் ஆசைப்பட்டு வாழவேண்டுமா ?
நல்லமனம்  வேண்டுமா /?
ஆஸ்திவேண்டுமா ?
இப்படி  அலைபாயும் கேள்விகள்.?

சனாதன தர்மமா ?இஸ்லாமிய தர்மமா ?கிறிஸ்தவ தர்மமா ?
புத்த தர்மமா ?ஜைன தர்மமா ? சீக்கிய தர்மமா ?
உருவமா?உருவமற்ற வழிபாடா ?
எத்தனை வழிகாட்டிகள் ?
எத்தனை மார்கங்கள் ?
அத்வைத்தமா ?த்வைத்தமா ?விசி ஷ்டாத்வைத்தமா ?
யோகமா / ப்ராணாயாம குண்டலினி சக்தியா ?
ஆழ்நிலை தியானமா ? சூழ் -  நிலை தியானமா ?

இதுதான்  இறைவனைக் காண வழி  --என்ற வரைமுறை உண்டா ?/

ஞானம் வேண்டுமா ? அன்பு வேண்டுமா ?

இத்தனையும்  மறந்து  வழிபடும்  சிந்தனை வேண்டும் ?

 சத்தியம் ,அன்பு ,தொண்டு ,பிறருக்காக வாழ்தல் 

நேர்மை ,கடமை  செய்தல்  , மனிதநேயம் .

ஒன்றே செய்க ; நன்றே  செய்க . 
ஐந்து நிமிட சிந்தனை காலை எழுந்தவுடன் .
ஐந்துநிமிட சிந்தனை தூங்குமுன் .
இரவில் தூங்குமுன் சிந்தனை 
நாள் முழுவதும்  என்ன செய்தோம் ?
நல்லன என்ன /தீயன என்ன ?
காலையில் நல்லன செய்யவேண்டும் .
நமக்கு இயற்கையாக ஆண்டவன்  அளித்த  சக்தி என்ன /

நமக்கு இயற்கையாக உள்ள  ஆற்றல் என்ன ?
இயற்கையாக பாடமுடியுமா ?ஆடமுடியுமா ?
பேச முடியுமா ?பளு தூக்கமுடியுமா ?
ஓவியம் வரைய முடியுமா /காவியம் படைக்க முடியுமா ?
ஆட்சி செய்ய முடியுமா ?அடங்கி வாழ முடியுமா ?
அதிகார வாழ்க்கையா ? அடிமை வாழ்க்கையா ?
பணமா ?கல்வியா ?வீரமா ?
இவை எல்லாம்  இயற்கையில் வருகிறதா ? செயற்கையால் முடியுமா ?

பயிற்சி --முயற்சி .--வெற்றி --தோல்வி.
உலக அழகியைப்பார்த்து  ஆஹா! நாமும் அப்படி ஆகவேண்டும் 
என்று  நினைப்பது  பயிற்சி --முயற்சி யால்  முடியுமா ?
அறிவியல் ,இலக்கியம் ,அரசியல்  சிந்தனைகள் மூன்றும்  பெற முடியுமா ?

இயற்கைத்திறனை  அறிந்து  செயல்பட்டால்  நாமும் இறைவனைக் 
 காண லாம்.
அதற்கு  தியானம் ஆழ்நிலை தியானம் போதும் .
அதற்குத்தான்   உன்னையே நீ அறிந்துகொள் .
உண்மையைத்   தெரிந்துகொள்.
அதுவே ஆண்டவன். 
அஹம் பிரம்மாஸ்மி.  --நானே  கடவுள்.






No comments: