Monday, April 4, 2016

மதுராந்தகம்

भक्त त्यागराज के सारे के  सारे कीर्तन तेलुगु में होने पर  भी  तमिल और अन्य भाषा भाषियों को भी अत्यंत  प्रिय है। कारण हर गीत में भक्ति रस का भावावैश।  सुननेवालों की आत्माएँ अति प्रफुल्लित ।
ये पंच रत्न कीर्तन  में  गाते हैं --जितनेभी 
महानुभाव हो सब को वंदना। एक बार सुनना
प्राण धारा में मिल जाती है।
त्यागराज को राम मंत्र  का उपदेश  उनके पिता ने दिया है।
परंपरागत राम ,सीता ,लक्षमण  हनुमान आदि देवों की मूर्तियाँ  देकर पिता ने पूजा करने की आग्ञा दी ।

एक करोड राम नाम जपने  से राम के दर्शन मिलेंगे।
ऐसे    ठेके लेकर राम नाम जपते रहे।पर ९६०००० के नाम जपते ही  राम के दर्शन  मिले।
राम के दर्शन  से चकित त्यागराज जल्दी दर्शन के कारण  पूछा तो उठते बैठते आप राम नाम ही रटते हैं   उन सब को मिलाने पर एक करोड नाम भजन हो गये।  इसलिए सीता लक्षमन सहित दर्शन देने अाया। ।

தியாகராஜரின் கீர்த்தனைகள் அனைத்தும் தெலுங்கில் இருந்தாலும் அவை தமிழர்கள் உட்ப
டै அனைவராலும் ரசித்துக் கொண்டாடப்படுவதற்கான காரணம் அதிலுள்ள உணர்வுபூர்வமான பக்திரசம்தான். அப்பாடல்களில் இருக்கும் உயிரோட்டம், கேட்பவர்களின் ஆன்மாவுடன் கலந்து வாழும் விருப்பத்தை அதிகரிக்கிறது.

இக்கீர்த்தனைகள் இறைவன் புகழைப் பாடுவதால ் அனைவருக்கும் உரிமை உடையதாக நினைக்கிறார்கள். தனக்கு உரிமையானது என்பதால் நினைவில் நிரந்தர இடம் அளிக்கிறார்கள். அதிலும் பஞ்சரத்ன கீர்த்தனைகளில் உள்ள ‘எந்தரோ மகானுபாவுலு’ வாழ்வில் ஒரு முறை கேட்டுவிட்டால், அது உயிரோடு ஒட்டிக் கொண்டுவிடுகிறது.

இவருக்குச் சிறுவயதிலேயே ‘ராமநாம மந்திரம்’ அவரது தந்தை மூலம் உபதேசம் ஆனது. அவரது தந்தை குலவழியில் தான் பூஜித்து வந்த ஸ்ரீராம, சீதா, லஷ்மண, ஆஞ்சநேய சிலாரூபங்களை தியாகராஜரிடம் கொடுத்து தினமும் பூஜித்து வருமாறு கூறினாராம். நாள்தவறாமல் இதனைப் பூஜித்து வந்த தியாகராஜர், இந்த தெய்வங்களை நேரில் காண விரும்பினார். ராமருடன் நேரடியாகப் பேசுவது போல பல கீர்த்தனைகளை இயற்றிய இவர், அந்த உரிமையில் ஒப்பந்தம் ஒன்றினை ராமருடன் போட்டுக் கொள்கிறார்.

ராம தரிசனம்

கோடி ராமநாமம் ஜபித்து முடித்தால் தரிசனம் தர வேண்டும் என்பதே அந்த ஒப்பந்தம். ஒரு நாள் மதியஉணவு உண்ண, தலைவாழை இலையின் முன் ‘ராமா’ என்று சொல்லிய வண்ணம் அமர்கிறார் தியாகராஜர். அப்போது ஜகத்ஜோதியாய் ஸ்ரீராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோர் தியாகராஜர் முன் தோன்றினார்களாம்.

திகைத்துப் போன தியாகராஜர், “தொன்னூற்றாறு லட்சம் ராம நாமம்தானே ஜபித்து முடித்து இருக்கிறேன். ஒப்பந்தப்படி இன்னும் ஒரு கோடி முடியவில்லையே” என்று ராமரிடமே கேட்டாராம். அதற்கு ராமர், உட்காரும்போதும் எழும்போதும் ‘ராமா’ என்பாயே அதையெல்லாம் சேர்த்தால் ஒரு கோடி ஆகிவிட்டது. அதனால் நேரடியாக காட்சி அளிக்க வந்தேன் என்றாராம்.

No comments: