Saturday, March 26, 2016

சிந்திக்க

அனைவருக்கும் காலை வணக்கம் .

கடவுள் உயர்ந்தவர்
உண்மையில்  அவரை  விரும்புபவர்கள்   எந்த உலகியல் ஆடம்பரத்தை விரும்பமாட்டார்.
நான் கடவுள் என்று சொல்பவன்
எப்படி கடவுளாவான்.
கடவுள் என்று தனக்குத்தானே வைரக்கிரீடம் பாலாபிஷேகம் செய்து ஏமாற்றுபவன் ஊழல் மந்திரிக்கு தண்டனை தராமல் அவன் .வெற்றிக்கு ஆசியும் யாகமும் செய்வது வேடிக்கை விந்தையாகத் தெரியவில்லை.
அனைவரையும் காக்கும் இறைவன்
இந்த ஆஷ்ரம கோடீஸ்வரர்கள் சிறை செல்லும் செய்தியே வருகிறது  பல ஆயிரம் கோடி ஆஸரமச் சொத்துக் கணக்கு தெரிகிறது.
ஆயிரம் வீடு ஏழைகளுக்கு கட்டித்தந்த செய்தி வருகிறதா ?
அன்னதானச் செய்தி அதுவும் மற்றவர் கைங்கர்யம்
நடிகர்  பால் என் கட்டவுட்டுக்குத் தவறு அப்பாலை ஏழை களுக்கு வழங்குங்கள் என்று சொன்னதுண்டா ?
முதலில் எல்லோருக்கும் இலவச கல்வி உண்டா ?
அரசியல் தலைவர்கள் நடிகர்கள் நடத்தும் பள்ளியில் கட்டணம் அதிகம்  அங்கு நிரந்தர ஆசிரியர் உண்டா .? அங்கு ஆசிரியர்கள் கொத்தடிமை. அரசியல் பின்னனி பொறியியல் கல்லூரி  பேராசிரயர் சம்பளம் பத்தாயிரம்
தர்மம்  நியாயம் இல்லை. இதை மக்கள் சிந்திப்பது எப்போது? வாக்களிக்குமுன் இளைஞர்களே !சிந்திப்பீர் !

.

No comments: