Thursday, December 24, 2015

c பொய் ஞானம் ஒழிய வேண்டும்.

ராமன்   கிருஷ்ணன்  விஷ்ணு அவதாரம் ,

அவதார இறைவன்கள்  அல்லலுற்றனர் அவனியிலே.

திருவிளையாடல்  சிவனின் அதில் தெருவிளையாடல் அதிகம்,

இவ்வையக வாழ்வில் இன்னல் அதிகம்

இதை இறைவனே அவதரித்து காட்டிய காட்சிகள்.

அதிகாரம் பதவி சக்தி அனைத்தும் சூழ்ச்சிகளின் படலம்.

பங்காளிப்பகை ,நட்புப்பகை ,ஜென்மப்பகை ,

பழிவாங்கும் படலம் , இதுவே புராணம்
.
இதுவே அகிலம். மாயை என்ற ஹிந்துக்கள்
சைத்தான்  சாத்தான்என்ற முகலாய கிறிஸ்துவர்கள்
அஞ்சும் தீய சக்திகள் .
தேவர்களே சிறை சென்ற கதைகள்

நரகாசுரனை சத்யபாமா உதவியுடன் வதம்.

மோகினி அவதாரம் பஸ்மாசுரன் வதம்
 சூரா சம்ஹாரம் கந்தர் அவதாரம்

தேவர்களே போராடும் தீய சக்தி
ஆண்டவனே !வையக  தீய சக்திகள்
உனக்கே கடும் போராட்டம் !
நீ  யே  அரும்பாடு படும் போது

நான் என்ன மாத்திரம்.
உன் பூர்ண அருள் வேண்டும் .
உன் அருள் சக்தி வேண்டும்.
உன் ஞானம் வேண்டும்.

பொருளுள்ள வாழ்க்கை யாக வேண்டும்

பொருளால் வாழ்க்கை   பொருளற்ற வாழ்க்கை

உன் அருளுள்ள பார்வையால்
c
பொய் ஞானம் ஒழிய வேண்டும்.

c
முருகா ! முருகா ! முருகா !






No comments: