Wednesday, December 9, 2015

வியக்க வைத்தாரே !

நமச்சிவாய 

நலம் தரும் நாமம் நமச்சிவாய !

மன நலம் தரும் நாமம் நமச்சிவாய !
சித்தம் தெளிய நாமம் நமச்சிவாய !
வாக்கு அருளும் நாமம் நமச்சிவாய !
யம பயம் போக்கும் நமச்சிவாய!

நரனுக்கு நலம் தரும்        நாமம்  நமச்சிவாய !
மதுரமான வாழ்க்கைக்கு   நமச்சிவாய !
சிகிச்சைக்கு நாமம்  நமச்சிவாய !
வாழ்க்கை ஒளி  பெற நமச்சிவாய !
யாக்கை நிலைபெற நமசிவாய .
ஓம் நமச்சிவாய !ஓம் நமச்சிவாய !
ஓம் நமச்சிவாய !ஓம் நமச்சிவாய !

சிந்தனை செய்யச்  செய்யச் செய்ய !
சிவ பெருமானை 
வையக ஆசை குறையுதய்யா !
மன சஞ்சலம் போகுதய்யா !
ஓம் நமச்சிவாய!
பக்தனுக்கு உதவ பிரம்படி பட்டாரே !
விறகு சுமந்தாரே !
நம்மைக்காக்கும் நமச்சிவாயம் !
புலவனாய் வந்தாரே!
நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே !
என்றே அவனிக்குச் சொல்ல 
நக்கீரனைத் தேர்ந்தேடுத்தாரே !
நரியைப் பரியாக்கி 
வியக்க வைத்தாரே !
ஓம் நமச்சிவாய !ஓம் நமச்சிவாய !







                     




/

No comments: