Saturday, November 28, 2015

அறக்கடவுள் கர்ணவதம் போலாகுமே.

உலகைக் கண்டேன் ,
உண்மை அறிகிலேன்.காரணம் 
உண்மை  வெற்றி பெறுவதில் தாமதம் ;
ஊழல்கள்  மரியாதையுடன் நடமாட்டம்.
பணமே வாழ்க்கை என்று 
நேர்மை நியாயம் ஒழிக்கும்  அழிக்கும்  அரசு.
நீதி நியாயம் வழங்க இயலா நீதிமன்றம்.
நேர்மை மாவட்ட ஆட்சியாளர் நடவடிக்கை 
எடுக்க  முடியா நிலை;
கோடிக்கணக்கில் ஊழல் செய்யும் சாமியார்கள் ஆட்சியாளர்கள் 

மனிதநேயமில்ல மதவாதிகள்,
இறைவன் எங்கே /?
இங்கேதான் என்ற நிலை 
அநீதிக்கு உடன் தண்டனை இல்லையேல் 
அறக்கடவுள் கர்ணவதம்  போலாகுமே.

No comments: