Tuesday, November 3, 2015

இழந்தவர் அதிகம்.

அன்பும் ஆழ்ந்த தியானமும்

பற்றும் பாசமும் கவரும் உலகில்

பற்றற்ற பக்தி வருவது மெத்தக் கடினம்.


பற்று பாசம் பந்தம் நேசம் நட்பு  இவைகளை

பாரினில் விரும்புவோர் நேர்மையுடன்

இருப்பதும்  கடினம்.

இவ்வையகப்பாசம் இன்னலைத் தரும் .

துரோகத்தைத் தூண்டும்.

நேர்மையற்றோருக்கு பக்கபலமாய் இருக்கத்தொன்றும் .

ராமனின் பாசம் வனவாசம் என்றால்

பரதனின் பாசம் குடில் வாசம்.
கர்ணனின்  நட்புக்கு நன்றி அநீதிக்குத் துணை.
விபீஷணனின்  பிரிவு  துரோகம்.
பாரினில் பற்றால் பாசத்தால்
இழந்தவர்  அதிகம்.

இறைவனின்பற்றால்   ஆனந்தம்.
நாட்டைத்துறந்த மன்னனுக்குமானந்தம். ஆகையால்
 தியானம்மான நிறைவு , மன அமைதி.


No comments: