Monday, November 30, 2015

பாரதம் இந்துவாகியது

நம் நாடு  ஆசைகள் துறந்து கோவணம் கட்டி ப்ரார்த்தனைகள்
செய்தநாடு.
அனைத்தும் ஆண்டவனுக்கே அரசர்களுக்கே  என்று வாழ்ந்தநாடு.
வெந்த சோறு சாப்பிடுவோம் விதிவந்தால் சாவோம் என்ற நாடு.
அரசன் நலம் என்றே நம்நலம் என்று கல்வி அறிவு பேராமல் தொழில் அறிவு பெற்று கூலி கூட பெறாமல் நாட்டின் வளம் சேர்த்த சுயநலமில்லா மக்கள் வாழ்ந்தநாடு.
நம்நாடு அப்படித்தான் இருந்தது்.வெளிநாட்டு சாத்தான்கள் வந்து பாரதத்தை ஹிந்துவாக்கி இந்து வாக்கி பல திருடர் களை  உருவாக்கி விட்டனர்.
உலகிலேயே கலப்பட சமத்துவமும் அழகுக்கு அடிமையாவதும் சஹஜம்.
என்ன செய்வது ஆடையே துறந்த  ஆசை இல்லா ஆன்மீகம் இங்கே
ஆடையையே உருவும் அரசியலும் இங்கே.
கோடிக் கணக்கில் நாட்டு நலம் காணா பதுக்களும் இங்கே.ஆன்மீகத்தில்..

விநாயகர் வணக்கம்

.விநாயகர் வணகக்கத்தால் செல்வம் பெருகும் .
கார்யசத்தி உண்டாகும்.வரிடத்தில் அன்புகலந்த அச்சம் பக்தி தேவர்களுக்கும் உண்டாகும்

  "திருவாக்கும் ; செய்கருமங் கைகூட்டும்; செஞ்சொற்பெருவாக்கும்:பீடும் பெருக்கும்...உருவாக்கும்.;
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக்
காதலால் கூப்புவர் தம் கை"

கபிலதேவர்.
भगवान गणेश की प्रार्थनन अगजग के लोग और देव भी करते हैं।इसको कपिलदेव नामक तमिल के भक्त कवि ने यों लिखा है...
संपत्ती बढेगी,कार्य सिद्धि होगी,
सुंदर शब्द शक्ति बढेगी,गौरव गंभीरता बढेगी,
प्यार भरा भय होगा,
इसीलिए देव भी गजमुख की प्रार्थना  हाथ जोड
अति प्यार से
करते हैं।

Sunday, November 29, 2015

மதி

காலை வணக்கம்

மதிநாள்.
மதி சந்தரன்
மதி அறிவு
மதி மரியாதை செய்
மதியாதார்தலைவாசல் மிதிக்கவேண்டாம்.
மதிகெடுதல்
மதி மாசல்வீணை மாலைமதியம்
மதித்து வாழ்
மதிக்க வாழ
மதிமுகம்
கோமதி சந்திரமதி மதுமதிசாருமதி
சுமதி வெண்மதி துன்மதி
மதியால் வந்த மதி.
நண்பர்களே! மதிகுறித்து
புது சொல்  எழுதுங்கள்

மதிமயக்கம்.

Saturday, November 28, 2015

வையகம் புகழும் எண்ணங்கள் தா.

இறைவா!
 இன்னலின்றி  இப்புவியில் 
வாழ்ந்தோருண்டா  ?

இச்சைகள் அதிகமாக 

ஈனச்செயல் அதன் காரணமாக 
உள்ளத்தில்  எண்ணங்களின் 
சிற்றலைபேரலை 
ஊக்கம் தரும் எண்ணங்கள் 
உருப்படும் எண்ணங்கள் 
உதவும் எண்ணங்கள் 
உதவா எண்ணங்கள் 
உதைபடும் எண்ணங்கள் 
உயர்த்தும் எண்ணங்கள் 
வெளியிடும் எண்ணங்கள் 
வெளியிட முடியா எண்ணங்கள் 
வறுமை எண்ணங்கள் 
வளமை எண்ணங்கள் 
வேற்று எண்ணங்கள் 
வேறுபடுத்தும் எண்ணங்கள் 
திருத்தும் எண்ணங்கள் 
திருந்தா எண்ணங்கள் 
தெளிவான எண்ணங்கள் 
தெளிவற்ற எண்ணங்கள் 
தையல் எண்ணங்கள் 
தையலால் எண்ணங்கள் 
கெஞ்சும் எண்ணங்கள் 
கொஞ்சும் எண்ணங்கள் .
கொஞ்ச நகருங்கள் 
கொஞ்சம் நகருங்கள் 
கோப எண்ணங்கள் 
கோபமூட்டும் எண்ணங்கள் 
பொருளற்ற எண்ணங்கள் 
பொருளுள்ள எண்ணங்கள் 
பேரருள் எண்ணங்கள் 
பேரிருள் எண்ணங்கள் 
பேரிடர் எண்ணங்கள் 
பேர் பெற எண்ணங்கள் 
பேரழிக்கும் எண்ணங்கள் 
பலி யாகும் எண்ணங்கள் 
பழி வாங்கும் எண்ணங்கள் 
புவி போற்றும் எண்ணங்கள் 
புவி இகழும் எண்ணங்கள் 
தகிக்கும் எண்ணங்கள் 
தவிக்கும் எண்ணங்கள் 
திக்கு முக்காடும் எண்ணங்கள் 
திசை மாறும் எண்ணங்கள் 
மயக்கும்  எண்ணங்கள் 
உயர்ந்த உவக்கும் பக்குவ எண்ணங்களை 
உலகநாதா உவமை ஒப்புமை இல்லா 
வல்லமை பெற்ற வாகீசா!
வளம்  நலம் புகழ் பெறும்  எண்ணங்கள் தா .
வலம் வரும் எண்ணம் வேண்டாம் 
வசை தரும் எண்ணம் வேண்டாம் ,
வசை பாடும் எண்ணம் வேண்டாம். 
வையகம் காக்கும் வைத்யநாதா !

வையகம் புகழும் எண்ணங்கள்  தா.
வறுமை ஒழியும்  எண்ணங்கள் வேண்டும்.
வாழ்வில் ஆனந்தம் பிரம்மானந்தம் தரும் 
எண்ணங்கள்  வேண்டும்.
உன்னருள் வேண்டும்.
உத்தமர்கள் உறவுவேண்டும்..
உண்மையுடன் வாழ வேண்டும் .
ஊர் உலகம் போற்றவேண்டும்.
உடலும் உள்ளமும் ஆரோக்ய ஆனந்தம் அடைய வேண்டும்.


அறக்கடவுள் கர்ணவதம் போலாகுமே.

உலகைக் கண்டேன் ,
உண்மை அறிகிலேன்.காரணம் 
உண்மை  வெற்றி பெறுவதில் தாமதம் ;
ஊழல்கள்  மரியாதையுடன் நடமாட்டம்.
பணமே வாழ்க்கை என்று 
நேர்மை நியாயம் ஒழிக்கும்  அழிக்கும்  அரசு.
நீதி நியாயம் வழங்க இயலா நீதிமன்றம்.
நேர்மை மாவட்ட ஆட்சியாளர் நடவடிக்கை 
எடுக்க  முடியா நிலை;
கோடிக்கணக்கில் ஊழல் செய்யும் சாமியார்கள் ஆட்சியாளர்கள் 

மனிதநேயமில்ல மதவாதிகள்,
இறைவன் எங்கே /?
இங்கேதான் என்ற நிலை 
அநீதிக்கு உடன் தண்டனை இல்லையேல் 
அறக்கடவுள் கர்ணவதம்  போலாகுமே.

Friday, November 27, 2015

அன்பு பக்தி மனிதநேய மறுப்பு.

மதங்கள் அன்பு வளர்க்க
மனிதஒற்றுமை ஓங்க
மனிதநேயம் வளர்க்க
தானதர்மம் வளர்க்க
தியாகமயமான
பற்ற்ற வாழ்க்கை வாழ
அழியும் உடல் ஆஸ்தி சேர்ப்பது
ஆனந்தமாக சுயநலத்துடன்
அவனியில் இருக்க அல்ல
எளிய வாழ்க்கை உயர்ந்த எண்ணத்துடன் வாழவே.ஆனால்
இன்று
ஆண்டவன் பெயரால்
மனித ஒற்றுமை  மறுக்கும் காட்சி
அல்லா பெரிதன்று ஒருகூட்டம்
பதினைந்து நிமிடத்தில்
இந்துக்களை ஒழிக்க போது ம்
என்கிறது.
பச்சிளம் பள்ளி சிறார்கள்
அல்லாவின் குழந்தைகள்
பாக்கில் கொன்ற பாவிகள்
கல்மனதையும் களங்க வைத்தது
சனாதன தர்மமோ ஜாதிவெறியால்
மனிதர்களை உயர்ந்த தாழ்ந்த என்று ஏளனம்செய்கிறது.
கிறிஸ்தவம் அன்பு சேவை
கல்வி தொண்டு என தலித்துகளை
மதம்மாற்றி மரியாதை செய்கிறது.
வளர்ந்தவர்கள் உயர்ந்த ஜாதி
ஹிந்துக்களை விஷ ஜந்துக்களாகப்
பார்த்து பயங்கரவாத இஸ்லாமியர்களை அடக்க முயற்சிக்கிறது.
மதங்கள் சுயநல அரசியல்
மதத் தலைவர்களால்
மனித ஒற்றுமையை கூறு போட்டு
பயங்கரவாதத்தைத் தூண்டுகிறது.



Thursday, November 26, 2015

1. மங்களம் . கரிமுகத்தோனே !

1. மங்களம் .
கரிமுகத்தோனே !

பரிதி  இருளைப் போக்குவது போல் -உன் 

 தாமரைச்   சரணங்களை துதிப்போரின் 
தடைகளை போக்கும் 
தேவ தேவனே! போற்றி ! போற்றி!

ஒவ்வொரு நற்காரியத்துவக்கத்தின் 
நாயகனே! 
கல்வித்துவக்கம் , திருமணம் ,புதுமனை புகுவிழா ,
போர் ,சங்கட காலங்களில் 
உன்னை பல பெயர்களில் 
போற்றி வழிபடுகின்றனர் .
ஏகதந்தன் என்றும் கபிலன் என்றும் ,
கஜகர்ணன் என்றும் லம்போதரன் என்றும் ,
விகடன் ,விக்னநாஷன்  என்றும் 
விநாயகன் ,தூம்ரகேது ,கணநாயகன் என்றும் 
பாலச்சந்திரன்  கஜானன் என்றும் 
பன்னிரண்டு பெயர்களில் துதிப்போருக்கு 
எவ்வித தடைகளும் வராமல் காப்பாய்.

வடமொழி 
स  जयति सिंधुरवदनो  देवो यत्पादपंकजस्मरणम्। 
वासरमणिरिव   तमसां  राशीन्नाशयति विघ्नानाम।। . 
समुखश्चैकदंतश्च कपिलो गजकर्णकः। 
लम्बोदरश्च विकटो विघ्ननाशो  विनायकः। 
धूम्रकेतुर्गणाध्यक्षो भालचन्द्रो गजाननः।
द्वादशैतानि नामानि यः  पठेच्छृणुयादपि। 

Tuesday, November 24, 2015

இந்த எண்ணமே மனத்திற்கு நிம்மதி.

இறைவனை நம்பினாலே தான் நிம்மதி.

ஆட்சியைக் கண்டால் ,அவர்கள் கொடுக்கும் 

ஒப்பந்தகாரர்கள் போடும் சாலைகள் 
இன்று வேளச்சேரி  பிரதான சாலையில் 
பல்லாங்குழி போல் 
எத்தனை தடைவை அந்த சாலைகள் 
மனசாட்சி இல்லை 
இறைவனின் பயம் இல்லை --இருப்பினும் 

ஆண்டவன் தண்டிப்பான் என்ற எண்ணம் 
அதிலேதான் நிம்மதி.

பயணிகள் நிழற்கொடை அமரும் கற்கள்  

காணவில்லை டைடல்  பார்க்  சாலையில்.
தெருவிளக்கு மாதக்கணக்கில் எரியவில்லை 

என்றால் கண் காணித்து மாற்ற மின் ஊழியர்கள் இல்லை.
பொறியாளர் இல்லை. 
நெறியாளரும் இல்லை .
நேர்மையாளரும் இல்லை.
நம் மன நிம்மதி ஆண்டவன் அருளுவான்.
கடைகளில் நாம் பொருள் வாங்க சென்றால் 
வாகனங்கள் நிறுத்த வசதி செய்யவேண்டும்.
ஆனால் மால் பெரிது மால்வெட்டி கட்டியது 
ஒருமணி நேரம்  அவ்வளவு பெரியமால் வாகனக்கட்டணம் 
முப்பது ரூபாய் .
எப்படியும் நூறுரூபாய் கட்டணம்.
போக்குவரத்துக்கு இடையூறு
 நம்  நிம்மதிக்கு சொல்ல  வேண்டியது 
ஆண்டவன் அருளுவான்.

பள்ளியில் அடாவடி ரசீது இல்லா நன்கொடை 
நமக்கு நிம்மதி ஆண்டவன் அருளுவான்.
போக்குவரத்துக் காவலர் கைநீட்டி வாகனம் நிறுத்தி 
சாவி  எடுத்து ஓரங்கட்டி கையூட்டு வாங்கி 
போக அனுமதித்தால்  ஆண்டவன் அருள். 

இவ்வாறு ஒவ்வொரு அநீதிக்கும் நிம்மதி தர 
ஆண்டவன் அருளுவான்.
வாழ்க இறையன்பு. அன்பே ஆண்டவன் .
2ஜி 3 ஜி ஊழலா ,
மாயாவா மமதாவா  லாலுவா ஜெயாவா கருணாவா 
தப்பிபதவியிலா எல்லாமே இறைவன் அருள். 
மன நிம்மதிக்கு மேலே இருப்பவன் நீதிபதியாக தண்டித்து 
அருளுவான். 
இந்த எண்ணமே மனத்திற்கு நிம்மதி.
மருத்துவர் ,நகைக்கடை ,மெக்கானிக்
ஏமாந்தால் பூர்வ்ஜன்மக்கடன் என்பதே
ஆண்டவன் அருள்  என்பதே.


Monday, November 23, 2015

சிவ உள்ளார்ந்த வழிபாடு

இறைவனே.!தயையின் நிதியே..!
பசுபதியே..!தேவனே!
இரத்தினம் பதித்த
அரிய தெய்வீக
ஆடைகள்
கஸ்தூரி மணக்கும் சந்தனம்
மல்லிகை முல்லை
வில்வம்  முதலிய மலர் அர்ச்சனைகள்
தூப தீப எல்லா பூஜைப் பொருளை
ஏற்றுக் கொள்வீர்

இறையன்பு

b

Friday, November 20, 2015

ஆண்டவன் சித்தம்

ஓம் கணேசாய நமஹ
ஓம் கார்த்திகேயாய நமஹ
ஓம் நமச்சிவாய
ஓம் துர்காயை நமஹ
ஓம் விஷ்ணுவே நமஹ
ஓம் லக்ஷிமியை நமஹ
ஓம் தக்ஷிணா மூர்த்தியை நமஹ
ஓம் ராமாய நமஹ
ஓம் க்ருஷ்ணாயை நமஹ
ஓம் கருப்பண்ணசாமியே போற்றி
சாமியே சரணம் ஐயப்பா
ஆண்டவன் இத்தனை
இந்து மதத்தில்
இருந்தும் அசுர சக்திகள்
அட்டகாசம் அதிகம்
அசுர ஆடம்பரம் அதிகரிக்கும் போது
ஆண்டவன் ரக்ஷிப்பான
்.

சிவ சிவ

சிவ சிவ என்றால்
சித்தம் தெளியும்
சித்த சஞ்சலம் அழியும்.
வையக மாயை ஒழியும்.
அவனியின் ஆசை அடங்கும்
இச்சாசக்தி ஞானசக்தி க்ரியா சக்தி
முச்சக்தி முன் வந்து ஊக்கம் தரும்.

சிவ சிவ சிவ 

சிவாய நமஹ
நமஹ சிவாய
நமச்சிவாய
நமச்சிவாய  என்றாலே
நலம் பல கிட்டும்
நாளும் நலம் பெருகும்
நல்லெண்ணம் வரும்
அன்பு கிட்டும்
ஆதரவு பெருகும்.
ஆறுதல் கிடைக்கும்
ஆத்மசுகம்  கிட்டும்
ஆத்ம பலம் பெருகும்.
ஆத்மா பரமாத்மா ஒன்றாகும்
பரமானந்தம் கிட்டும்
பரமசிவன் அருள் கிட்டும்
பாரினில்  பிறந்த பிறவிப்பயன்
நமச்சிவாய நமச்சிவாய
என்ற நாம ஜபத்தால்
இன்மையில் நன்மை கிட்டும்.
இன்னலில் இன்பம் பெருகும்.

Wednesday, November 18, 2015

மனிதன் தெள்ளறவில்

.மக்கள் எந்த சூழலிலும்
மகிழ்ச்சியையே
மற்றவர்கள் முன் காட்டவும்
சுயகௌரவம் காட்டவும்
முயல்வர்.
ஏழை பணக்காரர்  உயர்ந்தவன்
தாழ்ந்தவன் என்ற பாகுபாடில்லை.
ஆனால்    உயர்ந்த
எண்ணம் வளர
ஆஸ்தி உதவாது.
உயர்ந்த எண்ணமும்
ஞானமும் அறிவில் தெளிவும்
வேண்டும்.
உள்ளத்தில் உள்ள சஞ்சலம் போகவேண்டும்.
இறைவன் அறிவை மட்டும்
தான் தந்து  தெளிவு பெறும்
சக்தியை மனிதனிடம் தந்து
வேடிக்கை பார்க்க புலியையும்
மானையும் ஓநாயையும் நரியையும்
யானையையும் பசுவையும் படைத்து வேடிக்கை பார்க்கிறான்.
மனஅமைதி மனமகிழ்ச்சி
மனிதன் தெள்ளறிவில் .

அதுவே நான் கடவுள். பிரம்மாஸ்மி .

ஆண்டவன் மனிதனைப்படைத்தான் 

அறிவினையும் அளித்தான்.

அறிவில் தெளிவில்லா சஞ்சலத்திற்கு 

உள்ளம்  அளித்தான் .

தெளிவுபெற மூளையும் கொடுத்தான்.

தெளிவில் மயங்க மாதுவைப்படை த்தான் .

மதி மயங்க மதுவைப்படைத்தான்.

நல்வழி செல்ல நீதி நூல் படைத்தான்.

நான்  என்ற ஆணவம்  படைத்தான் .
நற்குணம் தீய குணம் 
பாவ புண்ணியம் 
அறிய இயற்கையைப் படைத்தான்.
மனித அறிவிற்கப்பாற்பட்ட இயற்கையின் விந்தை ,
இதை  மறக்க அறிவியல் விந்தைகளையும் ஏற்படுத்தினான்.
எண்ணங்களில் ஏற்றம் வேண்டும்.
மற்றவர்களின் உயர்வால் ஆசைகள் 
மற்றவர்களின் வளர்ச்சியால் பொறாமை 
தனக்கே அனைத்தும் வேண்டும் என்ற பேராசை 
இவையே மனிதனின் அமைதிக்குத்தடைகள்.
பேராசை உள்ளவன் உயிர் போகும் வரை
 இன்னலில்  மூழ்குகிறான்.
உலகில் பேரரசன் ஆசை இல்லாதவனே 
அவனே  ஆண்டவனின் ஆசி பெற்றவன். 
ஞானிகள் கூறும் அறிவுரை 
அன்பும் தியாகமும் சேவையும் சுயநலமின்மையும் 
உள்ளவனே உயர்ந்தவன்.
அவன் ஆத்மா ஆண்டவன் சமம். 
அதுவே   நான் கடவுள். 
பிரம்மாஸ்மி .




Tuesday, November 17, 2015

இறைவன் அளிக்கும் எச்சரிக்கை மணி .-भगवान की खतरनाक घंटी.

இயற்கையின் சீற்றம் ,   प्राकृतिक कोप 

இறைவன் அளிக்கும் எச்சரிக்கை மணி .--भगवान की खतरनाक घंटी. 

இன்னல் அழைக்கும் மனிதா ! உனக்கு मनुष्य!तू खुद करता संताप निमंत्रण। 

அறிவளித்தேன் . மெய்ஞானம் அளித்தேன் .  ज्ञान दिया ! आत्म ज्ञान दिया !

மனிதனுக்கு மரணத்தையும் நிச்சயித்தேன். मनुष्य को मृत्यु का भी तय किया. 

கோடிகள் இருந்தும் பிணி மூப்பில்லா வாழ்வியல் இல்லை. करोड़ हो फिर भी रोग बुढ़ापा बिन जीवशास्त्र नहीं। 
கோடிகள்  பதவிகள் இருந்தாலும் இல் வாழ்க்கையில்லா 
करोड़ हो फिर भी गृहस्त जीवन बिन जीवन। 

கோடிகள் இருந்தும் சந்தானமில்லா 
करोड़ों होने पर भी निस्संतान जीवन. 

சந்தானம் இருந்தும் சம்பத்து இருந்தும் 
भले ही संतान हो ,संपत्ति हो 

சந்தோசம் இல்லா வாழ்வுகண்டு அமைதி யில்லாமல் 
आनन्दरहित जीवन ;अशांत जीवन ;

அவனியில்வாழும்  தனாதிபதிகள்.
जग में जीवित अमीर अनेक. 

பங்களா வாசிகள்  இருவர் என்றிருக்கும் நிலை.
बंगला के निवासी ;दोही रहने की स्तिथि। 

சமுதாயத்தில் இறைவனின் தீர்ப்பு 
समाज में  ईश्वर का न्याय। 

ஊழல் கருப்பு  பணத்தால்   வெல்ல முடியாது.
भ्रष्टाचार काले धन से जीत नहीं सकता। 

அறம் செய்வீர் ! धर्म कीजिये !
தானம் செய்வீர் !दान कीजिये। 

மதிப்புடன் வாழ்வீர். सादर जीवन बिताइये। 
ஆனந்தம் பிரம்மானந்தம் பெறுவீர்.!  आनंद ब्रह्मानंद पाइए। 

Friday, November 13, 2015

तिरुक्कुरल

तिरुवल्लुवर  का कहना है  कि
ईशवर अनुपमेय है।

उनके शरण में  अपने को समर्पण कर लो।
तभी मानसिक चिंता दूर होगी।
தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தாருக்கல்லால் மனக்கவலை
மாற்றல் அரிது.
दृढ मन से प्रार्थना संपूर्ण भाव से अतुलनीय अनुपम
ईश्वर के चरणों में  समर्पण कर लो।
वही अपूर्व शक्ति  तेरी चिंताओं को दूर करेगी।।
अन्यथा नहीं दूर होगी।

உலகப்பற்று

காலைவணக்கம்.
பழனி முருகா
பாலகுமாரா.!
ஆண்டியாய் வந்தாலும்
ஆறுமுகமாய் வந்தாலும்
தந்தைக்கு உபதேசம் தந்தாலும்
தரணியில் வாழ
தாரத்துடன் வாழ
தெய்வானை வள்ளியுடன்
வள்ளுவர் குறள் நெறி
வையகத்துக்குகாட்டிய
வள்ளிமணாளா
உலகப்பற்றுடன்
உலகநாதன் பற்றும்
இறுகப்பெற்றால்
உலகப்பற்று உதிர்ந்து விடும்

பற்றுக பற்ற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
பிறவி உண்டாக மூலகாரணம் வா.
அவா வென்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவா அப்பிறப்பீனும் வித்து

கந்தன் கருணை

கந்தா கடம்பா கார்த்திகேயா
கலியுக வரதா.!
கருணைக்கடலே..!
காலை முதல் மாலை வரை
கந்தாகந்தா  என்றால்
கண நேரத்தில் கருணைபுரிவான்
இன்னல் நீக்கி இன்பம் அளிப்பான்.
அன்பர்களுக்கு ஆனந்தமளிப்பான்.
எண்ணங்கள் யாவையும்
ஏற்றமளிக்கும்
உள்ளம் நிறைவடையும்
ஊக்கமும் ஒப்பில்லா உயரவுண்டாகும்
ஓம் முருகா ஓம் முருகா என்றால்
ஓளஷதமாகும்.
கந்தா கந்தா என்றால்
கரையில்லா மகிழ்ச்சி பொங்கும்

Tuesday, November 10, 2015

தீபாவளி

ஆண்டவன் இருக்கிறானா?
என்ற கேள்விக்கு
இன்று தீபாவளி
இருள் சூழ்ந்த தீபாவளியாக
வெள்ளம் சூழ்ந்த தீபாவளியாக
நடைபாதை வியாபாரிகளுக்கு
நஷ்ட தீபாவளியாக மாறிவிட்டது.
மகிழ்ச்சி குறைந்த தீபாவளி
மகிழ்ச்சியற்ற தீபாவளி
டாஸ்மாக் வியாபாரம் அதிகமாகுமா .!.!?  குறையுமா  இதுவே அரசின் இலக்கில் வெற்றி பெருமா.?
பாரப்போம்.
மக்களே.டாஸ்மாக் போகாமல் தீபாவளி கொண்டாடுங்கள்.
அதுவே மதுக்கடை மூட உண்மை போராட்டம்.

Sunday, November 8, 2015

தீபாவளி

தீபாவளி தீயவை ஒழித்து
இருளில் ஒலிஔி பெற்று
புத்தாடை உடுத்தி மகிழும் நாள்.
இந் நன்நாளில் டாஸ்மாக்
அதாவது மதியிழக்கும் மதுக்கடை
பக்கம் பார்வை செல்லக்கூடாது.
மது அருந்தக்கூடாது
ஐம்புலன் அடக்கத்துடன்
மதுவிற்பனையை
மந்தமாக்கி நஷ்டமடையச்
செய்ய சபதம் எடுங்கள்
தீய வருமானம் வளர்ச்சியல்ல
நாட்டிற்கும் வீட்டிற்கும் தீமையே.
இந்த தீபாவளி மதுக்கடை முந்நூற்று அறுபது கோடி
இலக்கை டெபாசிட் இழக்கச் செய்ய
சபதம் எடுப்போம்.
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
அரசல்ல .மக்கள் நினைத்தால்
மதுக்கடை பக்கம் செல்லாமல்
இருந்தால் போதும்
போராட்ட அரசியல் தேவையில்லை
இறைவன் நல்லறிவை  தந்து மாயையை ஒழிக்கட்டும்.

Thursday, November 5, 2015

அவனருள்.

வையக மாற்றங்கள்.

வையகத்தில் வைகறைமுதல்  இரவு வரை மாற்றங்கள் 

எவ்வளவோ  மாற்றங்கள் 

குளிர் விடியக்காலை 

குளிர்காயகாலை வெயில் 

சுட்டெரிக்கும் நடுப்பகல் 

மாலை வெயில் 
இரவுகுளிர் 

வாழ்க்கையிலும் பால பருவம் 
ஆனந்தம் 
அந்த  ஆனந்தத்திற்கு  ஆண்டவனின் ஆசிவேண்டும்.

நடைபாதைக் குழந்தைகள் 

குளிரில் பஞ்சத்தில் ஆடையின்றி 
கழிப்பறை இன்றி  ஒருபக்கம்.

அங்கேயே ஆனந்தக்களிப்பில் 
உணவுமிகுதி ,உடையும் மிகுதி 
ஒரு பக்கம்.
எத்தனை மக்கள் எவ்வளவு வேதனை 
எத்தனை மக்கள் மகிழ்ச்சிபொங்க 

அங்கே தான் ஆண்டவனின் சித்து விளையாட்டு.
அவன் அன்பு வேண்டும் .அவன் அருள் அவனன்பே  பிரதானம்.வேண்டும் 
ஆஸ்த்திக்கும்  ஆரோக்யத்திற்கும் 
ஆயுளுக்கும் ஆயகலைகளுக்கும்
அவனருள்.

Tuesday, November 3, 2015

ஸனாதனதர்மம்

அல்லா ஒன்றே தெய்வம் .
குரானில் இல்லாது ஒன்றுமில்லை

ஏசுவே பாபங்கள்ஏற்று மன்னிப்பவர்
என்று குறுகிய மனப்பான்மை
உள்ள மதாசாரத்தில்
அந்த மஐங்களை சாரவில்லை எதிரத்தால் என்ற அச்சத்துடன்
இருக்கும் வையகத்தில்
ஜகன்நாதன் விஸ்வநாதன் ஜகத்ரக்ஷகன் என்று வையகத்தைக் காக்க ப்ரார்த்திக்கும் மதம்
நமது ஸனாதனதர்மம்.
ஜயஜகத்
வையகம் வாழ்க என்ற முழுக்கம்
ஜகத்மித்யா உலகம் பொய்யானது
என்ற முழக்கம் ஸத்யமேவ ஜயதே
வாய்மை வெற்றிபெறும்
பாபிகளுக்கு மன்னிப்பில்லை
தண்டனை வேதனைகள் நிச்சயம்
இறந்த பின்னும் தண்டனை.
கர்ம வினைகளுக்கு
ஏழேழு பிறவியிலும் தண்டனை
என்றெல்லாம் இறையான்மை வலியுறுத்தி நிலையாமையைஅறிவுறுத்தி
அறவழிகாட்டி வழிநடத்தி
ஆண்டவனை உருவமும் அருவமுமாக ஏற்று
அங்கிங்கெனாதபடி எங்கும் ப்ரகாஷமாக மனிதனின் ஒவ்வொரு செயலையும்
கண்காணித்து  தண்டனை.அளிக்கும்
வாழவைப்பவராக
காட்டும் இறைசக்தியே ஸனாதனதர்மம்.
அறம் வளர்க்கும்்
அறநெறியோடு பொருளாசையற்று
இறைப்பணியில் ஈடுபட்டால்
இறைவன் இயற்கையாக வழங்கும்
கடமையை பணியை செய்தால்
மகழ்வுடன் வாழலாம் என்பதே
ஸனாதனதர்மம்.
ஹிந்து என்று அயலவர் இட்டநாமம்
குறுகியவட்டம்.
ஸனாதன தர்மம் ஜகம் முழுவதும்
காக்கும் சக்தி
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
இறைவன் எளியவன் .
சுடலைபொடி பூசி
வாழ்பவன்
ஒலிஔி வடிவானவன்.
ஓம் ஓங்காரம்

இழந்தவர் அதிகம்.

அன்பும் ஆழ்ந்த தியானமும்

பற்றும் பாசமும் கவரும் உலகில்

பற்றற்ற பக்தி வருவது மெத்தக் கடினம்.


பற்று பாசம் பந்தம் நேசம் நட்பு  இவைகளை

பாரினில் விரும்புவோர் நேர்மையுடன்

இருப்பதும்  கடினம்.

இவ்வையகப்பாசம் இன்னலைத் தரும் .

துரோகத்தைத் தூண்டும்.

நேர்மையற்றோருக்கு பக்கபலமாய் இருக்கத்தொன்றும் .

ராமனின் பாசம் வனவாசம் என்றால்

பரதனின் பாசம் குடில் வாசம்.
கர்ணனின்  நட்புக்கு நன்றி அநீதிக்குத் துணை.
விபீஷணனின்  பிரிவு  துரோகம்.
பாரினில் பற்றால் பாசத்தால்
இழந்தவர்  அதிகம்.

இறைவனின்பற்றால்   ஆனந்தம்.
நாட்டைத்துறந்த மன்னனுக்குமானந்தம். ஆகையால்
 தியானம்மான நிறைவு , மன அமைதி.