Friday, September 18, 2015

ஜபமாலையைப் போட்டுவிடு.

இறைவன்   வழிபாடு என்பது மிக அவசியம் என்பதற்கு 

வள்ளுவர் குரல்  அவர் தம் குறளில் 

ஆணித்தரமாக கூறப்பட்டுள்ளது.

'பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் 
இறைவனடி சேராதார். "


மனிதப் பிறவியில் எதிர்நீச்சல் போடவேண்டியுள்ளது.

கடல் அலைபோல் அவனது வாழ்க்கை அலை மடித்துக்கொண்டே உள்ளது.

தேவைகள் அதிகமாகிறது 
ஆசைகள் அதிகமாகிறது .

ஆடம்பரங்கள் அதிகமாகின்றன.

இன்றைய புதுமை நாளைய பழமை ஆகிறது.
இதில் நாம் முன்னேற  போட்டித்தேர்வுகள் ,போட்டிகள், சிபாரிசுகள் 
லஞ்சங்கள் ஊழல் கள் ,வாய்ப்புகள் இழப்புகள் 
கோபதாபங்கள் ,.

அதில் சில திமிங்கிலங்கள் ,சுறாக்கள்,சிப்பிகள், 
ஆழங்கள் ,

இவைகளையும் மீறி இந்த பிறவிப்பெருங்கடலில்  

நமக்கு ஒரு ஆன்மபலம் வேண்டும் .
ஒரு முன்னேற்றம் வேண்டும்.
நமதுவட்டத்திலேனும்  மரியாதை வேண்டும் 
ஆரோக்யமான சூழல் ,உடல் ,மனம் வேண்டும் .
மன நிறைவு வேண்டும்.
மனசஞ்சலம் இன்றி ஒருமை வேண்டும் .

இதற்கு இறைவனின் அருள் வேண்டும்.
அவன் கருணை நிதிவேண்டும் 
கபீர் சொல்கிறார் --
உன் கடவுளைத்தேடி அங்குமிங்கும் அலையாதே .
உன் கடவுள் உனக்குள் இருக்கிறார்.
பூவில் மணம்  இருப்பதுபோல் .
கஸ்தூரி மானில் கஸ்தூரி இருப்பதுபோல்.

கையில் ஜபமாலை சுற்றுகிறது.
மனம் அலைபாய்கிறது.
இறைவனிடம் மனம் ஐக்கியப்படவில்லை .
பல காலங்கள் கழிந்துவிட்டன.
இறைவன் தரிசனம் இல்லை.
ஜபமாலையைப்  போட்டுவிடு.
மனம் என்ற மாலைசுற்றுவதை  நிறுத்தி 
மனதை முழுவதும் அவனிடம் செலுத்து .
இறைவனைக் காணலாம்.


No comments: