Thursday, April 30, 2015

வெறுப்பில் வேதனை தானே மிஞ்சும்

 ஆன்மிகம் என்றால்  தியாகம்  வேண்டும் .

ஆடம்பரம்  அறத்திற்கு மறத்திற்கு  வேண்டுமா?

ஆண்டவனைக் கண்டோர் ,ஆண்டவன் செய்தி சொன்னோர் 

ஆடம்பரம் என்றால்   வெறுத்து ஒதுங்கியவர்கள்.

கானகவாசம்  குடிசை  வாசம்  தவம் தியானம்.
ஆனால்  இன்றைய ஆன்மிகம்   ஆஸ்தி சேர்க்கிறது. 

ஆசார்யர்கள்  சாமியார்கள் பொற்கிரீடம் ,

பொன்னாசனம்  கேட்கின்றனர்.

கொடுப்பவர்களுக்கு  பணம் வரும் விதம் என்ன ?

கொடுப்பவர்கள் வாழ்க்கைத்தரம் என்ன ?

கொடுப்பவர்கள் எல்லாம் கோடீஸ்வரர்கள்  என்றால்,

ஏழைகளுக்கு இறைவன்  வரம் /அருள்  கிட்டாதா/?

அரசபோகம் துறந்து  கானகம் சென்றார் சித்தார்த்தர் 
ஞானம்  பெற்றார். புத்தர் ஆனார் 
அதில் ஆடம்பரம் கருத்துவேறுபாடு 
இரண்டுபட்டது புத்த மதம்.

தோற்றுவித்தவர்கள் மனித நேய  ஒற்றுமைக்கு என்றால் 

பின்னால் வந்தவர்கள் இரண்டுபடுத்தும் காட்சி .

இஸ்லாம் என்றாலும் கிறிஸ்தவம் என்றாலும் 

ஹிந்து  என்றாலும் மனித ஒற்றுமை இல்லா வேற்றுமைகள்.

உருவமில்லா இறைவன் உருவமற்ற இறைவன் ,

ஒரேமதத்தில்   இந்த வேறுபாடு .

இறைவனின் பல உருவங்கள் ,மந்திரங்களில் சில மாற்றங்கள் 

சிவா விஷ்ணு  வேறுபாடு.
சியா  சன்னி  என்ற வேறுபாடு 
காதொலிக் ப்ரோடேஸ் டாண்டு 

இன்னும் எத்தனையோ  இறைவன் வழிபட ஒற்றுமை இல்லா 

வையகம் ,இதற்கு அடிதடி குத்து வெட்டு கொலைகள் 

எந்த மத  ஆ ண்டவன்  சொன்னான் 
என்னை வழிபடா ,என் வழி  வரா ,மனிதனைக் கொன்று குவி .

அன்பில்லா  ஆண்டவன்  இரக்கமில்லா
ஆண்டவன் இல்லை வையகத்தில் 
மனித ஒற்றுமைகாணா   மதவாதிகள் 
ஆன்மிகம்  புரியா தெளியா  மேதைகள் 
உள்ளவரை  உலகில் இல்லை அமைதி.
வெறுப்பில்  வேதனை தானே மிஞ்சும்.

அன்பு  ,மனிதநேயம் மனித ஒற்றுமையே 

ஆன்மிகம் ஆடம்பரமல்ல . 




No comments: