Monday, April 20, 2015

அந்த வழிபாட்டின் அருளே , ஆண்டவன் ஏற்று தரும் கருணை ,அருள்.

இன்று  எனது நண்பர்  எண்ணிய எண்ணங்கள்

ஏற்றமடைய வேண்டும்  என்றார் .

மனிதன்  என்ன எண்ணுகிறான் ?

நிலைத்த  எண்ணங்கள்  மனதில் உள்ளனவா ?

ஆன்மீகத்திலும் சரி ,அரசியலிலும் சரி

அலைபாயும் எண்ணங்கள் ,

இறைவனின் ஆன்மீகச் சொற்பொழிவு ,

மனிதமனத்தில்  தெளிவு பிறக்கவேண்டும்.

ஆன்மீகத்தில்  பல இறைவனைக் கூறுகின்றனர்.

எண்ணங்கள் மாறுகின்றன.

இந்த எண்ண  மாற்றங்களால்

சக்திக்கு ஒரு இறைவன் ,முக்திக்கு ஒரு இறைவன் ,

ஆஸ்திக்கு  ஒரு இறைவன் ,உலகியல் இன்பத்திற்கு

ஒரு  இறைவன் ,

ஒரு மனைவியுடன் வாழ ஒரு இறைவன் ,

இருமனைவியுடன்  வாழ ஒரு இறைவன் ,

பிராமச்சரியத்திற்கு  ஒரு இறைவன் ,

பிணி  தீர்க்க ஒரு இறைவன்  என்றால்

கல்லூரியில்  விருப்ப பாடம் போல் இறைவனை

தேர்ந்தெடுத்து  வாழும் கலை  வளர்க்கும் எண்ணம் .

இறைவன்  வழிபாட்டில்  இறைவன் ஒருவனே

அனைத்தும் தருபவன் ,

என்ற மன ஒருமைப்பாடு தேவை .

அரசியல் தலைவர்கள் போல் ஆன்மீகத்தலைவர்கள் ,

தங்களுக்கென  ஒரு கூட்டம் ,ஆஸ்தி சேர்ப்பதில்

ஆன்மீகத்தில் அலைபாயும் மனம் .

இந்த மன ஒருமைப்பாடு  மனித ஆற்றலுக்கு அப்பால்

ஒரு  இயற்கை சக்தி ,இறை சக்தி ,

இதையே சித்தர்கள் ,யோகிகள் கூறி

இயற்கையைப் போற்றி   வணங்கினர்.

கோள்கள் வழிபாடு ,பஞ்சபூத வழிபாடு ,

இயற்கையை மாசுபடுத்தா வழிபாடு ,

வையகம்  வாழ  வழிபாடு

மனித நேய வழிபாடு

இதை உணரா  வழிபாடு

இறைவழிபாடு  அல்ல என்றே

இறைவனை  ஒரே எண்ணத்தில் வழிபட்டால்

இன்னல் களையும். இதுவே  இறைவனைக்

காணும் அருள் தரும்  எண்ணமாகும்.

தெளிந்த மனதுடன்  இறைவனை வழிபட வேண்டும்.

இந்த  ஆலயம் ,அந்த  ஆலயம் ,

இந்த  ஆஷ்ரமம் ,அந்தாஷ்ரமம் என்று அலைபாயும்

மனதால் ஆண்டவன்   வழிபாட்டில் அலைபாயும் எண்ணம்.

மத மாற்றம், மனித ஒற்றுமை இன்மை ,இறைவன் பெயரால் கொலை

இதல்ல  ஆன்மிகம் ஆண்டவன் அருள் பெரும் வழி.

வையகம்  இன்புற ,அமைதி ,அஹிம்சை ,சர்வே ஜனா சுகினோ பவந்து

அனைவரும்  இன்பமுடன் இருக்கவேண்டும்

இதுவே  இறைவழிபாடு .

அந்த வழிபாட்டின் அருளே  ,

ஆண்டவன் ஏற்று தரும்  கருணை ,அருள்.




No comments: