Thursday, April 16, 2015

இவை விடுத்து இறைவனைதுதித்து இன்புற்று வாழ்வோம்.

   வையகம்  -இதில் ஆண்டவன் ஒரு புரியாத  புதிர்.

மனிதன்  விருப்பங்கள் நிறைவேறும் வரை.

ஆனால், மனித முயற்சிகள்  தோல்விகாணும் போது

அவன்  மனம் தளரும் போது ,

அவனுக்கு ஒரு நம்பிக்கை ,ஒரு பிடிப்பு , ஒரு முயற்சி ,

ஊக்கம்  தேவை.

அது எப்படி கிடைக்கும்?

இவை கிட்டாத போது ஒரு நொடியில் தற்கொலை /கொலை .

இது மனிதனுக்கு  ஏற்ற வழியா /??

அப்பொழுது  அவனுக்கு ஊக்கம் அளிப்பது  ஆன்மிகம்.

உலகம் ,நாம் என்று நினைக்கும்  மனிதன்

எவ்வித  தோல்வியும்  சந்திக்க முடியாமல்  தன்னையே

அழித்துக்  கொள்ள  லௌகீகம்  தூண்டும்.

ஆன்மிகம்  உன் க்ரஹநிலை  சரியில்லை .

இறைவனை வழிபடு  என்று ஆற்றுப்படுத்தும்.

நாற்பத்தைந்து  நாள்  இந்த மந்திரம் சொல்.

இந்த கோவிலுக்குப்போ .

அவனுக்கு  வாழ  நம்பிக்கை  அளிக்கும்.

தம்மினும் மெலியாரை நோக்கி ,அம்மா!

பெரிதென்று அக மகிழ்க --இது ஒரு தத்துவம்.

புத்தர்  பிறப்பு ,மூப்பு .இறப்பு   மூன்றிலும் வையகம் படும்

துன்பம்  கண்டார்.துறவியானார் .

அவருக்கு  கிடைத்த ஞானம் --அன்பு ,சேவை ,புன்சிரிப்பு .புலனடக்கம்.அஹிம்சை .

இதையே  ஆன்மிகம் --

காமம் ,குரோதம் ,ஆணவம் பேராசை ,
இதையே வள்ளுவர் அறம் பற்றி கூறும்  போது-

அழுக்காறு ,அவா,வெகுளி ,இன்னா சொல் இவை  நான்கும் மிழுக்கா இயன்றது அறம்  என்கிறார்.

காமம், வெகுளி, மயக்கம் இவை மூன்றன்

நாமம் கெடக் கெடும் நோய்.  என்கிறார்.

எனவே  இவை விடுத்து இறைவனைதுதித்து 

இன்புற்று   வாழ்வோம்.





No comments: