Friday, April 10, 2015

அவனியில் இல்லை அல்லல்.

ஆண்டவன்  அறம் விரும்புவான் .

அவன்  சொத்தை அபகரிக்கும் கூட்டம்,

அவன் சந்நிதானத்திலேயே  ஏமாற்றும் கூட்டம்.

அவன் ஆலயத்தில் பாதாள அறைகளில் ஆபரணங்கள்

அதை அபகரிக்கும் கூட்டம்.

அசத்தியத்தை சாத்தியமாக்கி அலைமகள் கருணை பெரும் கூட்டம்.

அனைத்தையும்  அவன்  பார்த்தாலும்

பார்க்கவில்லை   என்றே  பாரில் உள்ளோர் நினைக்கின்றனர்,

ஆனால் பார் !சாஸ்வதம்  இல்லை  பார் !என்றே  ஒருநாள்

பாரின்  பாரம்  மறந்து  ஆண்டவன் உயிர் எடுக்கும் நாள்.

அதுவே அவன்  தீர்ப்பு. இதை அனைவரும் சொன்னாலும்

அவனி அதை பொருட் படுத்துவதில்லை.

ஆவி போகும்  நேரத்தில்  அவனை அறிந்து

என்ன  பயன் ?  சொன்னதே சொல்லி

வரும் ஆன்மிகம் ,அது  அறிவியல்  இல்லை .

உண்மை. மாற்றத்திற்கு சாத்தியமில்லை.

சத்யதேவன்   தர்மதேவன் --அறிந்தால்

அவனியில்  இல்லை அல்லல்.

No comments: