Saturday, April 4, 2015

ஆன்மிகம் வேண்டியதில்லை பாரினில்.

பாரினில்  பகவான்  படைப்பில்  ,

 பல அதிசயங்கள்.

பரவசங்கள்.

பக்தி  என்பது  மனிதனின்  கடும் முயற்சி

  பலன் அளிக்காமல்  போனால் தீவிரமாகிறது.

ஒரு கப்பல் மூழ்கும்  போது அனைவரும் மூழ்கி

முக்தி அடைகின்றனர்.

ஒரு விமான விபத்தில் அனைவரும் மரணம்.

ஒரு ஹிந்து தப்பிக்க முடியாது.

ஒரு இஸ்லாமியன்  தப்பிக்க முடியாது .

ஒரு கிறிஸ்தவன் தப்பிக்க முடியாது.

இயற்கை சீற்றம் ,பஞ்சம்  என்றால் அனைவருக்கும் பாதிப்பு.

பாலைவன மணல்  அனைவரையும் சுடும்.

அல்லா என்றால் ,சிவா   என்றால் ,ஏசு என்றால் சுடும் மணல்

குளிர் சாதனம் ஆகுமா?

இயற்கை    அனைவருக்கும் பொது .

இறைவன்  படைப்பது.

சூரிய ஒளி,சந்திரன் ஒளி,அமாவாசை இருட்டு  பொது.

மனிதர்களை ஒற்றுமைப் படுத்தவே  மதங்கள்.

மனிதர்களை  வேறுபடுத்துவது  மனித அறிவு.

மனிதர்களை  ஒற்றுமைப் படுத்துவது ஆன்மிகம்.

ஒற்றுமை இல்லா ஆன்மிகம் ,மனிதநேயம் வளர்க்கா ஆன்மிகம்,

மனிதர்களை  வேறு படுத்தும்  ஆன்மிகம் வேண்டியதில்லை

பாரினில்.





No comments: