Saturday, January 31, 2015

மனிதப்பிறவி தப்புவது எப்படி.?

பாவங்களுக்கு  பகவானின்  மன்னிப்பு ,

பகவானிடம் பிராயச்சித்தம்.

இறைவனிடம்  பிரார்த்தனை ,

யாகங்கள் பிராயச்சித்தங்கள்.

தசரதரும் யாகம் செய்தார் ,

ராமரும்  அஸ்வமேத யாகம் செய்தார்.

ராவணனும் தவம் செய்தான் . ஆனால்

யாருக்கும்  பகவான் நிம்மதி தரவில்லை.

புத்திரசோகம் செய்த பாவம் விடவில்லை தசரதருக்கு.

ராமன்  வாழ்வில் நிம்மதியில்லை ,
மனைவியிருந்தும் இல்லை,
ராவணனுக்கு  தவவலிமை

 இருந்தும் இல்லை நிம்மதி.

கிருஷ்ணனே உடனிருந்தும்

இறுதிவரை துன்பமே .


தங்கக் குடமளித்தாலும்
தங்க யானை அளித்தாலும்

செய்த பாவங்களுக்கு தண்டனை உண்டே

கண்ணனும் அடைந்தான் ராமனும் அடைந்தான்

தெய்வப்பிறவி என்போருக்கே  பாரினில் துன்பம் என்றால் ,

மனிதப்பிறவி  தப்புவது எப்படி.?





No comments: