Wednesday, January 14, 2015

ஓங்குக இறைவனின் அருளாட்சி.

            இறைவன்  இயற்கையில் 

             நமக்கு  நலமது அருளுவதே 

             அதி மன நிறைவு ;அதி மகிழ்ச்சி;

              நம் முன்னோர்கள் இயற்கைக்கு  

              அதி முக்கியத்துவம் அளித்த  தாலே 

             இன்று நாம் கொண்டாடும் பொங்கல் .

              சூரியனை இறைவனாக்கி ,அவனால் 

             நாம் பெரும் மகிழ்வுக்கு  நன்றி காட்டும் 

            இன்றைய  இனிய நாள்;
             
              இயற்கை  அளித்த உணவுவகைகள் ,

            அதை  உழைத்து  வளர்த்த உழவன் 

             அவனுக்கு உதவும் காளைகள் , என

            அனைவருக்கும் மன மகிழ்வு ,

            மன நிறைவு நாள்.
            இந்த புனிதநாளில்  அனைவரும் 

             அனைத்து நலம் பெற்றிட ,

             ஆதித்ய பகாவானை  
                 அகத்தில் வைத்து  போற்றுவோம்.
            பாரில்   பாரதம் பரிதிபோல் ஒளிவீச

            பகலவனை  போற்றுவோம்.

            என்பில் அதனை வெயில்போல் காயுமே 

             அன்பில் அதனை அறம் என்றார் வள்ளுவர்.

         அன்புடன் அனைவரும்  சேர்ந்து 

          அன்பருக்கு அருளும் 
              ஆண்டவனைப்  
                  போற்றுவோம்.

பொங்கல் திருநாளில் பொங்குக மகிழ்ச்சி;
ஓங்குக  இறைவனின்  அருளாட்சி.

      




  

                  
                         

                 

   



No comments: