Saturday, December 20, 2014

மனசாந்தி அடைவான் அன்பன்

 ॐ शरवणभव.


ஷண்முகம் சத்குணம் ஷைவம் குமாரம் குலபூஷணம்

தேவசேனாம் பதிம் வந்தேசர்வ  கார்யார்த்த சித்தயே;

அனைத்திலும் வெற்றி பெற அவனியில் 

அவதரித்த அருட் தெய்வமவன் ஆறுமுகம் .

அழகின் அவதாரம் அபிஷேகப்பிரியனவன்.

அறுபடைவீடுகளில் அவன் அருளாடல் 

அன்பர்களுக்கருளும் திருவிளையாடல்.

ஆண்டிவேடம் பூண்டு அலங்காரப்பிரியனாகி 

அரசாலங்காரத்தில்அத்புத அருளாளன் அவன்.

அவனடி பணிந்து அடைக்கலமடைந்தோருக்கு

அருள்மழை பொழிந்து இன்னல்தீர்க்கும் இனியவனவன்.

யானைமுகத்தம்பியவன் ",யாமிருக்க பயம் ஏன்?"என்றே 

யாவரையும் காக்கும்  யம பயம் நீக்கும் ப்ரத்யக்ஷமவன்.

பிரார்த்தனை   செய்தோர் பிரகாரம் செய்வோர் 

பலன்கள் பெரும் அதிசயம் புரியும் பழநிமலைவாசன்.

அவனடிசரணடைந்து மனமகிழ்ச்சி மனசாந்தி அடைவான் அன்பன்.







No comments: