Saturday, December 13, 2014

அவன்விதி ஆண்டவன் அசைவில்.

 பாரினில் பகவான்  இல்லை என்றும் 

உள்ளான் என்றும் 

தர்மம் அதர்மம்  இதில் 

தர்மம் தவித்தலும் 

அதர்மத்தின்  ஆராவாரமும் 

அனுதினமும்  பார்க்கும் காட்சிகள்.

நீதிமன்றதீர்ப்புக்குப்பின்னும் 

தீர்ப்பு ஏற்கா மக்கள் கூட்டம்.
இது  இன்றா ,நேற்றா 

புராண காலம்  முதல் இன்றுவரை,
ஹரிச்சந்திரன் காலம் ,
பிரஹலாதனின் காலம் 
ஏகலவ்யனின் கதை 
என்றெல்லாம் நாம் படித்து அறிந்தும் 

தெளிவு பெறாதது யார் குற்றம்?

பணம்  குவிக்க அதர்மம் ,
அதர்மத்தை தர்மமாகக 
தான தர்மம்.
விந்தையிலும் விந்தை மனிதன்.
விதியையே மதியால் மாற்றும் 

அதி புத்திசாலி.
ஆனால் 

அவன்விதி ஆண்டவன் அசைவில்.


No comments: