Friday, November 7, 2014

அவன் அனந்தன். ஏகன்.

கடவுள் ஒருவரே ,
கண்டபடி கடவுளின்

நாமங்கள் ஏன்?

சனாதனதர்மம் முப்பத்தேழு  முக்கோடி தேவர்கள்,
மும்மூர்த்திகள்
ஆயிரம்   நாமங்கள்.

இதை பரிகசிக்கும் சுயதர்மம் சார்ந்தோர் ,

அயல் தர்மத்தார் , நாமே நமக்கு எதிரி .

நமக்கு எத்தனை நண்பர்கள்.

காலையில் ஐந்து மணிக்கு
பால்வாங்கச்சென்றால்
பால்கடையில் புதிய நண்பர்,

பள்ளியில் படிக்கும் போது நண்பர்கள்,
கல்லூரி நண்பர்கள்,
கான்பெரன்ஸ் நண்பர்கள்,
நேர்காணல் நண்பர்கள்,
வாகனசிக்னல் நண்பர்கள்,
முகநூல் நண்பர்கள்,
பணியாற்றும் இடத்தில் நண்பர்கள்,
நண்பர்களின் உறவின நண்பர்கள்.
ஆயுள் காப்பீட்டு முகவர் நண்பர்கள்,
உதவிகேட்டு வரும் நண்பர்கள்.
அனைவருக்கும் அறிமுகமான பின்
ஒருவருக்கு ஒருவர் செய்யும் உதவிகள்.
அப்பாவின் நண்பர்கள் மூலம் நண்பர்கள்
துறைகள் பலவற்றிற்கும் நண்பர்கள்
அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் புரிந்தவர்கள்

உதவி பெறும்போது  நாம் கூறும் வார்த்தைகள்.

உதவி செய்யும்போது அவர்கள் கூறும் வார்த்தைகள்

தெய்வம் போல் உதவினீர்கள்.
தெய்வமே உங்களை அனுப்பியுள்ளது.

நீங்கள் எங்கள் தெய்வம்.

எத்தனை  பேர் தங்களுக்கு  உதவிகள்
செய்தோரை தெய்வமாக போற்றுகின்றனர்.
எத்தனைதொண்டர்கள் தங்கள் கட்சித்  தலைவர்களை
அவர்களின்படங்களை ,சமாதிகளை ஆராதிக்கின்றனர்.
பெற்றோரை கடவுளாக வழிபடும்  தன்மை.

இயற்கை வழிபாடு,சூரிய  சந்திர நதி வழிபாடு

ஆகவே  பல தெய்வங்கள் வழிபடும்

சனாதன தர்மம் வாழையடி வாழையாக .
ஆலமர விழுதாக
அவனியில்  கோலோச்சும்.
அன்பே ஆண்டவன் ,
ஆண்டவன்  மானிட உருவத்தில்
அவதாரபுருஷன்.
அவன் அனந்தன். ஏகன்.







No comments: