Thursday, November 6, 2014

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு .

ஆனந்தம் எங்கே ?

அது அன்புள்ள இடத்திலே.

பரமானந்தம் .பேரானந்தம் ,

ப்ரஹ்மானந்தம்--

இந்த நிலை அடைந்தவர்கள்


பொருளுள்ள பக்தியில்

பொருளாதாரத்தை  வெறுத்தவர்கள் .

உலகியலில்  உள்ளவர்கள்

மெய்ஞானம்  கண்டதுண்டா?

உலகியல் உள்ளத்து மாயையா?

தாரத்தை  விடுத்தது

சாம்ராஜ்யம் விடுத்து

ஞானம் பெற்று வந்ததே

உலகில்  உண்மை சொல்லவே.

உணவு வேண்டும் என்றால்

உலகத்துடன்  ஒட்டிவாழ வேண்டும்.

ஆசை ஒழி என்றாலும்

இச்சையுடன்  அஹிம்சை வழிநடக்க

ஒரு ஆசை .

அன்பு வழி பரப்பும் ஆசை.

உலகில்  உள்ள  துன்பங்கள்

தீர்க்க ஆசை.

உறவைத் துறந்தாலும் ,

உலகம் மாயை என்றாலும்

உலக நன்மைக்கே  என

உலகோடு ஒட்டிவாழ

உத்தமர்கள்  உபதேசம்.

வனத்தில் ஞானம் -அதன்
பயன் ஜகத்தினில் பரப்ப
ஊரோடு சேர்ந்து வாழ

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு .









No comments: