Tuesday, October 21, 2014

தீபாவளிவாழ்த்துக்கள்

                                            தீபாவளி 
இமயம் முதல் குமரிவரை  கொண்டாடும் ஹிந்துக்களின் 
இனிய பண்டிகை.

தீயன  ஒழித்து  நல்லவை ஒளிர 

தீபத் திருநாள் இது.

வணிகர்களுக்கோ இது வசந்தகாலம்.
இனிப்பு காரா வணிகம் 
எண்ணெய் ,பல சரக்கு வணிகம்,
ஆடை ஆபரணங்கள் ,
திரைப்பட அரங்குகள் 
பேருந்து சிற்றுந்து தொடருந்துப் 
பயணங்கள்.
இதிலே மழலைகளுக்கோர் மகிழ்ச்சி ,
உற்றார் உறவினர் நண்பர்கள் 
சந்திப்பு நிகழ்ச்சி ,
ஆலயங்களில் ஆனந்தம் ,
எங்கும் ஒளிமயம் ,வெடிச்சத்தம்.
இந்த மகிழ்ச்சியான நாளில் 
பாரதமற்றும் வெளிநாட்டில் வாழும் 
அனைவருக்கும் 
நல்லதே நடந்து ,மன ஆசைகள் நிறைவேற 
 இறைவனைப் பிரார்த்தித்து  -எனது 
இனிய தீபாவளி  வாழ்த்துக்கள் . 






1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்...