Sunday, December 29, 2013

ஆகையால் தர்மம் வெல்கிறது. மழை பெய்கிறது.

ஆண்டவன்  நம்மை சத்ய மார்கத்தில்.
தான மார்கத்தில்
தர்ம மார்கத்தில்
இட்டுச் செல்லும் அவன் நம்மை ஆண்டவன்.
என்றும் எங்கும் எதிலும் காட்சி அளிப்பவன்.
இன்று  எப்படி ஊழல் செய்து மறைத்தாலும்
வெளிப்படுத்தச் செய்யும் ஆற்றல் உள்ளவன்.
அதற்காக உருவாக்கிய பதவிகள்
பதவிமோகம் .பண மோகம் ,பண பலம்
இதை எல்லாம் மீறி ஊழல்பெசப்படுகிறது
ஊழல் வாதிகள் வெளியில் நடமாடினாலும்
நியாயம்  விரும்பும் நேர்மைவாதிகள் அதை
உணர வைக்கின்றனர்.
சத்தியம் சங்கடங்களில் நிமிர்ந்து நிற்கிறது.
ஊழல் நிமிர்ந்தாலும் பொலிவு இருப்பதில்லை.
தேர்தல் நேரத்தில் அந்த கட்சி ஊழல் ,இந்த கட்சி ஊழல்
ஒட்டு மொத்தமாக அரசியலில் ஆண்டவர்கள்
ஆளப்போகிரவர்கள் அனைவரும் ஊழல் வாதிகள்.
நேர்மை உறங்குவதுபோல் இருந்தாலும்
ஊழல்கள் போட்டிபோட்டு வெளியே வருகின்றன.
ஊழல்கள் சிலரை தலை காட்ட விடுவதில்லை.
இருப்பினும் ஊழல் ஆள்கிறது.
நேர்மை சத்தியம் என்ற பலஹீனமான சக்தி
ஊழல்களை வெளிப்படுத்துகிறது.
ஊழல்கள் தண்டனை பெறாவிட்டாலும்

ஊழல்வாதிகளுக்கு சாந்தி இல்லை.
அவர்களும் சமாதி ஆகிறார்கள்.
அங்குதான் ஆண்டவன்/இறைவன்/அல்லா/இயேசு அனைவரும்
  சாஸ்வதமாக அதாவது
 நிரந்தரமாக வாழ்கின்றனர்.
அவர்களை கல்லால் அடித்தவர்களும்
சிலுவையில் அறைந்த வர்களும்
போற்றப்படுவதில்லை.
அங்குதான் தர்மம் நிலைக்கிறது.
நான் ஊளை செய்தேன்.செய்வேன்.செய்கிறேன் என்று
வாக்கு வாங்க மேடையில் பேசும் தைரியம்
இல்லை .
நேர்மை,ஊழல் எதிர்ப்பு.ஊழல்வாதிகளுக்கு தண்டனை என்ற
வாய்ச்சொல்லே அவர்களுக்கு வெற்றிவாய்ப்பளிக்கிறது.
ஆகையால் தர்மம் வெல்கிறது. மழை பெய்கிறது.


வாழ்கின்றனர்.

Monday, December 23, 2013

செவிச்செல்வம் உனது புகழ் .

இறைவா !
 இரைக்காக    வா,?
இன்ப வாழ்க்கைக்காக     வா.?
இன்னல் தீர்க்க  வா.?
இறைவனைக்காண வா.
ஈடில்லா வீடுபேறு பெற வா.
எண்ணங்கள் நிறைவேற வா.
ஏற்றம் அளிக்க வா?
 உருவமின்றி உணரவைத்தாலும்
ஏகனாக வந்தாலும்
அத்வைத்துவமானாலும்
ஐந்துகரத்தினை உடையோனாக
ஆறுமுகமாக வந்தாலும்
ஆனந்தமே! இறைவா. வா.வா.
உலகில் நடப்பவை உன்னருள் என்றாலும்
உண்மைகள் உலையில் கொதிக்கும் போது
ஊமையாய் தவிக்கும் போது
ஏனோ! எனக்குள் ஒரு ஐயம்.
உனது படைப்புகள்
உலகில் தவறுகள் செய்கின்றன.
ஒன்றை அளித்து ,ஒன்றை அழித்து
ஒன்றை அலியாக்கி
சம நிலையாக்கும் நீ.
அநீதிகளை ஆர்பரிக்க வைக்கிறாய்.
நீதிகளை அடக்கி வைக்கிறாய்.
ஆழ்கடல் அமைதி என்றாலும்
அலைகடலை கரையில் வைத்து
அமைதிக்கு செல்லும் வழியில்
ஆர்பரிக்கிராய்.
ஆழ் மன தியானம்,
மேல்மன  அலைகள்,
உன்னடி
சரணாகதிக்குத்
தடைகள்.
தடைகள் மீறி  மனதை அடக்கினாலும்
மணம் நாசி வழியில் தடை .
மூக்கைப்பிடித்து முன் சென்றாலும்
பார்வை த் தடை.
கண் னை மூடி மூக்கடைத்து
முன்னே சென்றால்
காதால் தடை.
இவைகளை அடக்கும்  முன்பு
காதல் தடை.
பாசத்தடை.
எல்லாம் தடை மாயம்.
எப்படி உன் சரணம் அடைவது.

சும்மா இரு  என்று அருணகிரிக்கு அருள்.
அவராடிய  ஆட்டங்களுக்கு அறிவுரை  சும்மா இரு.
சும்மா ...அதிலே சுகமா?
உன்னை அறியா சுகமா?
அறிவதிலே சுகமா.
கண் மூடி  செவிமடுத்தல் உன்னருள்.
செவிச்செல்வம் உனது புகழ் .

Monday, December 16, 2013

आंडाल दक्षिण की मीरा-तिरुप्पावै -२

आंडाल दक्षिण की मीरा  -तिरुप्पावै -२
जग में जीने वाले भक्त जनों ! हम इस मार्गशीर्ष महीने के व्रत की क्रियाएं सुनिए!
क्षीर सागर में लेटे,ईश्वर नारायण की स्तुति करेंगे.
भोगिच्छा के भोजन नहीं करेंगे;
घी ,गोरस आदि नहीं ग्रहण करेंगे;
तडके नहायेंगे;फूल सर पर रखेंगे नहीं;नयनों में नहीं लगायेंगे काजल;
जिन क्रियाएं करने योग्य नहीं ,उनको करेंगे नहीं.
दान-धर्म करेंगे;भिक्षा देंगे;
मन लगाकर व्रत रखेंगे.
यों ही व्रत में मन लगायेंगे.

Friday, December 13, 2013

அதுவே சாந்தி தரும்.

 ஆழ்ந்த தத்துவம்,வேதாந்தம்  ,ஆழ்ந்த ஞானம் பெற்றால் தான்

 இறைவனைக் காணலாம். இறைவன் ஞான ஸ்வரூபி. அவனை தரிசிக்க 

தவம் செய்ய வேண்டும். அவன் அருள் பெற்று சம்சார சாகரத்திலிருந்து முக்தி பெற ,பாவ விமோசனம் பெற ,முக்தி பெற ,அறம் பொருள்,இன்பம் .வீடுபேறு பெற  யாகங்கள்,வேதபாராயணங்கள் ,பிரயாஷ்சித்தங்கள் செய்யவேண்டும்.
குரு தீக்ஷை பெற வேண்டும்.விரதங்கள் இருக்கவேண்டும்.
சத்யம்,நேர்மை,கடமை, ஆத்ம திருப்தி,பரோபகாரம்,சஹானுபூதி .சொன்னசொல் தவறாமை,போன்ற ஆதர்ஷ குணங்கள் வேண்டும்.
உலகப்பற்று  அற்ற  பற்றுள்ள சேவை செய்ய வேண்டும் .

இது ஒருவகையான ஞான மார்க்கம்.சனாதன தர்மத்தில் இவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன. ஆலயம் செல்லவேண்டும்.
அழகு பொருந்திய ஆண்டவனை தரிசிக்கவேண்டும்.ஆண்டவன் அலங்கார அபிஷேகப்பிரியன்.அவன் நாம ஜெபத்திலே,அஷ்டோத்திரத்திலே,சஹஸ்ரநாமத்திலே,ஸ்லோகங்களிலே தனி ஆனந்தம். அதுவே மெய்ஞானம் என்கிறது.

ஆச்சரியம் என்ன வென்றால் இப்படிப்பட்ட வேதஞான அறிவுபெற்றோர்கள் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் இவைகளை எல்லாம் அறிந்து,தெரிந்து,தெளிந்து,கடைப்பிடித்து வாழவேண்டும் என்ற அவா அனைவரின் மனதிலும் எழுகிறது. நடைமுறையில் இது சாத்தியமில்லாமல் போகிறது.

உலகியல்  பொருளியல் அடிப்படை.ஒவ்வொரு தேவைக்கும் பணம் அடிப்படை. இந்த பணம் உடனடித்தேவை.ஆன்மீகத்தில் ஆண்டிகளாக இருந்தவர்களின் ஞானபூர்வ் அனுபவ சேவைகளின் ஆதாரமாகவைத்து 
பொருளாசை அற்ற துறவிகளின் சீடர்கள் ஆலயப்பனிகள்,அறப்பணிகள் செய்ய  பணம் தேவைப்படும்பொழுது கிடைத்தது.தர்ம கைகரியங்கள் 
செய்யப்பட்டு வந்தன.
ஆனால் இன்றைய துறவிகளைப்பார்க்க,ஆசிபெற,தீக்ஷை பெற,ஆலய தரிசனம் செய்ய என கோடிக்கணக்கில் பொருள் சேர்கிறது. 

அன்னதானம் மட்டும் நடக்கிறது, கல்வி தானம் நடப்பதில்லை.

கல்விக்கூடங்கள்  இலவசமாக நடத்துவது என்பது  ஒரு மிகப்பெரிய வேள்வி.

நமது பாரத தேசத்தில் இன்றைய ஆன்மீகப்பணி இதுவே.

இதில் ஈடுபடுபவர்களுக்கும் ஆடம்பரங்கள் தேவைப்படுகின்றன.

கரதல பிக்ஷா,தரு தல வாசா என்ற கல்வி நிலை  காலத்திற்கு ஒவ்வாது.
கணினி,பரிசோதனைக்கூடம்,மன,பண,அறிவு நிறை உள்ள ஆசிரியர்கள் தேவை.
ஆசிரியர்கள் கவலை இன்றி அறிவளர்ச்சி செய்துகொண்டே தங்கள் அறிவை புதுப்பித்து பெருக்கிக் கொண்டே இருக்கவேண்டும்.அதற்கு ஏற்ற ஊதியம் அளிக்கப்படவேண்டும். ஆசிரியர்களைமட்டும்  தியாகம் செய்யவேண்டும் என்று குடிலில் தங்கவைத்தால் மாணவர்கள் மதியா நிலைதான் ஏற்படும்.
பொறியியல் கல்லூரி விரிவுரையாளர்கள் மாதம் ௧௫ ஆயிரம் பெற்று சேவை செய்கிறார்கள்.அவர்களின் தரம் உயர வேண்டுமா?வேண்டாமா?
நிரந்தரமாக மன நிறைவுடன் ஆசிரியர் பணி ஏற்ற அனைவரும் ஈடுபட சமுதாயத்தில் மிக உயர்ந்த மரியாதை குரு ஸ்தானம்.குரு தெய்வத்திற்கு சமம்.
ஆனால் இன்றைய பாரதத்தில் ஆசிரியர் நிலை பரிதாபம்.

இந்த நிலை மாறினால் ஞான நிலைமேம்பட்டு மனித சமுதாயம் பண்புநிலைக்கு மாறும். இந்நாளுக்காக பிரார்த்திப்போம்.அதுவே ஆன்மிக அருள் பெற வழி. அதுவே சாந்தி தரும்.

Tuesday, December 10, 2013

அந்த உணர்வில் அவன் நமக்கு ஆனந்தம் மன நிறைவு அளிக்கிறான்.

இறைவனைப்பற்றிய
  எண்ணங்கள்
இறை நாம ஜபங்கள்
சத்சங்கங்கள்
அவனியில்  உண்மையான
மன நிறைவை  தருபவை.
மன ஷாந்தி தருபவை.
மனக் கலக்கம் தீர்ப்பவை.
மனப்போராட்டம்  இன்றி
மன ஒருமைப்பாடு தருபவை.
மனஉறுதி தருபவை.
மங்களம் உண்டாக்குபவை.
மாயை தவிர்த்து தியாக எண்ணங்கள் வளர்ப்பவை.

அகிலத்தில் ஆன்மிகம் பரப்பும்
ஆன்மீகவாதிகளால்
மனிதநேயம் வளரவேண்டும்.
மனித குல ஒற்றுமை அதிகரிக்க  வேண்டும்.
அகிலம் ஒரு அன்பு நிலையமாக மாறவேண்டும்.
அறிவியல் இப்பணியை செய்யும் அளவிற்கு
ஆன்மிகம் செய்கிறதா?என்பதே இன்றைய
அவனியில் ஒரு வினா?
ஆகாய விமானங்கள் பயணத்தை
எளிதாக்கி பயண நேரத்தைக் குறைக்கின்றன.
தொலைபேசிகள்  செய்திகள் பரிமாற்றத்திற்கு
வலைத்தளங்கள் ஒளி-ஒளி மூலமாக
அகிலத்தை இணைக்கின்றன.
பரந்த உலகம் நெருக்கமாகி தொலைவுகள் தொலைந்துவிடுகின்றன.
நமது  ஷீரடி ,புட்டபர்த்தி சாய்பாபா  பஜனைகள்
மத நல்லிணக்கத்தை வளர்க்கின்றன.
புத்தரின் அன்பு ,இயேசுவின் பாப மன்னிப்பு
அல்லாவின்  மனிதர்களுக்கு தானம் வழங்கும் "ஜகாத்" என
மனிதர்களுக்கு மனிதப்பண்புகளை
மனத்தில் பதிக்க வைக்கின்றன.
ஆனால் ,அரசியல் சுயநலத்தை விட
ஆன்மீக சுயநலங்கள்  மனிதர்களைப்பிரிக்க
முயல்கின்றன.மதக்கலவரங்களை உண்டாக்கி
ரத்தம் சிந்தவைக்கின்றன.
இறைவன் ஒருவன் என்றாலும் ,
இறைவன் பல என்றாலும்,
உருவம் அருவம் என்றாலும்
அவை எல்லாம் மாயத்தோற்றங்கள்.
இறைவனை வேறுபடுத்தி மதங்களைக்கூறி
அரசியல் நடத்துவது,ஆஸ்ரமங்கள் நடத்துவது
அறிவியல் வளர்ச்சியால் ஏற்படும் வளர்ச்சிக்குத்
தடைக்கற்கள்.அகழி.
அகழியில் இருக்கும் முதலைகள்
மதம் /தர்மம் என்று பொருளீட்டி சுகபோகத்தில் வாழும்
சயநல மத வாதிகள்.
அவர்கள்  இறைவனால் சமுதாயத்தில்
அடையாளம் காட்டப்படுகின்றனர்.
ஆஸ்ரமங்களில் சேரும் பணங்கள்,
தேவனின் பெயரால் சேரும் பணங்கள்,
அல்லாவின் பெயரால் சேரும் செல்வங்கள்
அறப்பணி செய்ய ஈடுபடுத்துவோர்
ஆண்டவனால் புகழப்படுகிறார்கள்.
அவனியில் பாராட்டப்படுகிறார்கள்.
ஏழை-எளியோர்களும் அநாதைகளும் ஆதரவு பெறுகிறார்கள்.
இந்த உண்மை மதவாதிகளை
அவனியின் அறச் சிந்தனையாளர்கள்
தானம் அளித்து போற்றுகிறார்கள்.
தர்மம் தழைக்கிறது.
நல்லவர்கள்  அறம் வளர்ப்பதால் தான்
அவனியை ஆண்டவன் காக்கிறான்.
அதனால் ஆன்மிகமும் பக்தி இயக்கங்களும்
அவனியில்  அமரத்துவம் அடைகின்றன.
கபீர்   இந்த உயர் சிந்தனைகளை எளிய தோகையில்
மக்களுக்கு உணர்த்துகிறார்.
இக்பால் அவர்கள்
பாரதத்தின் "ஹிந்துஸ்தான் ஹமாரா"என்ற பாடலில்
மதங்கள்  மனிதர்களுக்குள் விரோதம்
 வளர்க்கக்  கற்றுத்தருவதில்லை என்கிறார்.
கபீர் மண் ஒன்றே,அதிலிருந்து செய்யப்படும்
பாத்திரங்கள் பலவகை.பெயர்கள் பல.
தங்கம் ஒன்றே. அதில் செய்யப்படும் ஆபரணங்கள்
பல பெயர்கள். அவ்வாறே இறைவன் ஒன்றே .
நாம் அணியும் விருப்பமுள்ள நகைகள்
உருக்கினால் சொக்கத்தங்கம்.அதில் கலப்படமின்றி
நகைகள் செய்ய முடியாது.
பக்தி விஷயத்தில் நாம் சொக்கத்தங்கமாக
எவ்விதகலப்பும்  இன்றி இறைவனை வழி படவேண்டும்.
ஆடம்பர பக்தியால் ஆண்டவன் அருள் கிடைக்கும் என்பது
மிகப்பெரிய தவறான எண்ணம். சிந்தனை.
கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் வாழ்வு தரும் இறைவன்
கருணை நிறைந்தவர்.பின்னர் ஏன் ஏழை/பணக்காரர்கள்
நோயாளிகள்/சக்திசாலிகள் என்ற வேறுபாடு?
இதற்கு எளிய விடை நாம் சொக்கத்தங்கமா?
இல்லையே.
உலக மாயையால் தவறுகள் செய்கிறோம்.
உலக பயத்தால் பாவச் செயல்களை தடுக்காமல்
ஒதுங்கிச் செல்கிறோம்.
பல பாபச் செயல்களுக்கு துணை போகிறோம்.
பாசத்தால் ,பந்தத்தால்,நட்பால்  தீயவை செய்வோரை காக்கிறோம்.
வருமானத்திற்காக  மதுக்கடைகள் நடத்துகிறோம்.
கையூட்டு கொடுப்போருக்கு வாக்களிக்கிறோம்.
இலவசங்கள் பெற்று இன்பமாக வாழ ஆசைப்படுகிறோம்.
நலவர்கள்-தீயவர்கள் யார் என்றே சிந்திக்காமல் வாக்களிக்கிறோம்.
அதன் பலன்களை அனுபவிக்கிறோம்.அவனியில் ஊழலுக்குப் பேர் பெற்ற நாடாக ,பலாத்காரத்திற்கு பெயர்பெற்ற நாடாக திகழ்கிறோம்.
லக்ஷக்கனக்கு அரசியலில் ஊழலளல்ல.கோடிகளே ஊழல் என்று 
அறிவிக்கும் அமைச்சர்களுக்கும் குற்றம்புரின்தொருக்கும் கொலைகாரர்களுக்கும்  வாக்களிக்கிறோம்.
உலக மாயை விடாததால் நாட்டின் மானத்தை பறக்கவிடுகிறோம்.
விலைவாசி உயர்வால் வேதனைப்படுகிறோம்.

ராமாவதாரத்திலும் சரி,கிருஷ்ணாவதாரத்திலும் சரி
அதர்மம் ஒழிக்க சில அதர்ம வழிகள் அவனியில் ஏற்றதாகின்றது.
அதுவே களங்கமாகிறது அந்த அவதார புருஷர்களுக்கு.
நாம் சொக்கத்தங்கமாகவே இருக்க அவனியில்
இன்னல்கள்  என்ற நெருப்பில் வெந்து வாழ வேண்டிய நிலை.
நாம் பற்றுள்ள உலகில் பற்றற்றவர்களாக
இறைவன் மீது மட்டும் பற்றுகொண்டு வாழவேண்டும்.
அதுவே "சாந்தி".இதை உணர நம் சுயநலங்களால் இன்னல்களை
அனுபவிப்பது உலக ஆசைகள்.பேராசைகள்.சுய நலங்கள்.பொய்யான போலி வாழ்க்கை.
இதை உணர்ந்து வாழ்ந்தால்  ஆனந்த மளிக்கும் ஆண்டவன் அருள்.
அதுவே பிரம்மானந்தம். அதை அனுபவிக்க முடியும்.
எப்படி நாம் காற்றை உணர்கிறோமோ அப்படி.
அதைக்காண முடியாது. உணர முடியும்.
அந்த உணர்வில் அவன் நமக்கு ஆனந்தம் மன நிறைவு அளிக்கிறான்.



அறிவுபெற்ற மனிதன் ஞானம் பெறாததாலா

ஆண்டவன்  எங்கே? எங்கே?
ஆலயங்களிலா? ஆஷ்ரமங்களிலா?
ஆருடங்களிலா?ஜோதிட நிலையங்களிலா?
கிராமிய தேவதைகளிலா?
உடுக்கை சத்தத்திலா?
புல்லாங்குழலிலா?
வீணையிலா?
பஜனையிலா?
அஷ்டோத்திரத்திலா?
சஹஸ்ர  நாம அர்ச்சனையிலா?
யாகத்திலா?
 ஹோமத்திலா?
தபசிலா?
வேதத்திலா?
குரானிலா?
பைபிளிலா?

விரதத்திலா?
தீர்த்த யாத்திரையிலா?
பரிகாரங்களிலா?
தான தர்மத்திலா?
பல எண்ணங்கள்
பல தத்துவங்கள்
அத்வைத்துவம்
த்வைத்துவம்
விஷிஷ்டாத்வைதுவம்.
எத்தனை தத்துவங்கள்
உருவமா?அருவமா? இரண்டுமா?
அனைத்தும் ஏற்றுக்கொள்ள  கூட்டம்.
எதிர்க்கவும் ஒரு கூட்டம்,
மறுக்கவும் ஒரு கூட்டம்.
அனைத்திற்கும் கூட்டம்.
சாரயக்கடையிலும் கூட்டம்.
அகிலத்தில் அவனது ஆட்டம்.
அறிய முடியா அவன் லீலைகள்.
இறைவன் ஒருவனே ஏன் ஒரு முழக்கம்.
பல உருவங்களில் வழிபட்டாலும்
அடையும்  இடம் ஒன்றே.
வரமும் ஒன்றே.
விருப்பமும் ஒன்றே,
ஏன்  இந்த மத சாதிக்கலவரங்கள்?
அறிவுபெற்ற மனிதன் ஞானம் பெறாததாலா?
ஞானம் பெற்றபின்னும் உலக மாயை இருப்பதாலோ?




Sunday, December 8, 2013

AHAM BRAHMAASMI.अहम् ब्रह्मास्मि.

WHERE  is God?
Is He in the sky?
Is He  in the earth?
Is He in the temple?
Is HE in the mosque?
Is He in the church?
IS he in the holy pilgrim centres?
ALL are going to pilgrim trips/tours.
IF no money,is there no  any God's grace?
Study and watch what are going you and your surroundings?
IS any one living in the earth fully happy?
Is there any one with fullest satisfaction?
Any one steady in prayer?
IS there any one called honest?
Ram ?Jesus?mohammed?--no.
IF they believe GOd,no  split in the religion.
We don't know HOW many GOd's  in the earth.?
Every GOd there are own followers.
every GOd   has some enemies,who are blaming HIM.
ONE says --RAm is supreme.HIs true devotte HANuman is his agent.
pray hanumaan you will be saved by RAM.
Hanuman always with you when you  surrender every thing to him with whole heart.
NO,THERE is KRISHna,when you call him with affection and full devotion ,when you are in difficulty ,immediately HE will come to save you forgetting to wear his dress.HE protect you How HE saved droupaty in Mahabharat.
NO.Allah!He alone  protecting the world.
No,Jesus is shedding blood for you. He is speaking for you. If you confess ,He forgive your sins.
Now a young Man confused.
THIS IS benefit for religious leaders.prohits.prophets.molavis.
they are using this confusion to get something from the confused.
SO,when mind confused there are many cheaters are ready to cheat you.
KAbeer,an uneducated gyani,saint says--
GOD IS WITHIN YOU.HOW?LIKE A FRAGRANCE IN A FLOWER.
LIKE A KASTURI IN A KASTURY DEER'S STOMACH.
DON'T SHOUT IN THE NAME OF GOD.IF YOU SHOUT HE WILL BECOME DEAF.NEVER HEARD YOUR PRAYER.
ALL ARE PRAYING DIFFERENT GOD'S,FOUR HAND GOD,FOUR HEAD.ETC.,BUT KABEER IS PRAYING THE GOD WHO HAS UNCOUNTED HANDS.
WE CAN'T MAKE A LIMIT FOR SHAPE OF GOD.
YOUR DEEDS MAKE YOUR SELF A GOD.
WHEN YOU HELP A NEEDY ,WHEN HE IS IN NEED  YOU ALONE GOD FOR HIM.
SO YOU WORKHARD. DO YOUR DUTY.THAT MAKES YOU GOD.
YOU SERVE THE SOCIETY YOU ARE GOD.
WORK IS GOD.LOVE AND AFFECTION,SERVICE TO THE SOCIETY,GOOD MORAL WORDS,
HONESTY,TRUTH,KEEP UP YOUR WORDS THESE ARE MAKE A MAN US GOD.
SO WE ARE HONOURING SHANKARA,MOHAMMED,JESUS,BUDDHA,GURUNANAK,SAIBABA, ,MAHAVEER,RAGAVEVDRA AND ALSO ROBINHOOD EVEN THOUGH HE IS A ROBBER,

GOD IS IN YOUR HEART.IN YOUR DEEDS.INYOUR WORDS.IF YOU ARE GENTLE,GOD GIVES POWER TO SERVE ALL.WEALTH TO GIVE ALL.STRENGTH TO PROTECT ALL.
MAN HAS A POWER .GIVEN BY GOD.IF HE RECOGNISES IT,FEEL IT,USES IT IN GOOD WAY GOD HELPS HIM.IT IS REAL HAPPY. SO I AM GOD ADVAIT PHYLOSAPHY OF SHANKARA.AHAM BRAHMAASMI.अहम् ब्रह्मास्मि.






இது பக்தியின் உயர் நிலை.அதுவே ஆனந்தம்

இறைவன் ப்ரத்யக்ஷம்   நம் உழைப்பிலே;
 தானத்திலே,தருமத்திலே;
அன்பிலே;சிரத்தையிலே;சத்தியத்திலே;
தியாகத்திலே,பரோபகாரத்திலே;
ஆகாயத்திலே இல்லை,
ஒவ்வொருவர் உள்ளத்திலே;
இத்ர-தத்ர-சர்வத்ர என்று
இருக்கும் இடம் விட்டு இல்லாத இடம் தேடி எங்கெல்லாம் அலைகின்றாய்
ஞானத் தங்கமே!
 ஆகாய இறைவனை விட்டு .
உள்ளத்து இறைவனை எழுப்பி ,
அஹம் ப்ரம்மாஸ்மி  என்ற நிலை உணர்.
மனிதனே தெய்வம். மனமே ஆலயம்.
கபீர்:  இறை வனைக்கண்டேன்; கண்ணின் கருவிழி யைக் கட்டிலாக்கி,
இறைவனைப்படுக்கவத்து  இமைகள் என்ற கதவால் மூடி வைத்துவிட்டேன்.
கண்ணுக்குள் இறைவன். நெஞ்சுக்குள் இறைவன்.
விடமாட்டேன் வெளியே. இது பக்தியின் உயர் நிலை.அதுவே ஆனந்தம் 

Friday, December 6, 2013

அது எத்தனை பேரால் முடியும்?

நல்லவர்கள்  நாட்டில்  இல்லாமல் இல்லை.

நல்லவர்கள்  உலகில் இருக்கிறார்கள்.

நல்லவர்களின் பிரார்த்தனை வீண் போவதில்லை.

நாடு மட்டுமல்ல உலகில் உள்ள அனைவரும் நலம் பெறவேண்டும் .

சர்வ ஜனாம் சுகினோ பவந்து.

லோகா சமஸ்தா  ஸுகினோ பவந்து.

நாட்டில்  நல்லவர்கள் நிம்மதியாக இருப்பார்கள்.

நிம்மதி என்பது  மன தளவில் வரவேண்டும்.

பொருளாதார நிறைவு, தார நிறைவு ,அனைத்து வெளி ஆடம்பர சுகங்கள் வேறு.
மன நிறைவு இல்லை என்றால்  மகிழ்ச்சி இருக்காது.

இதையே கபீர் தாசர் சிதை சவத்தை எரிக்கும் .

சின்தா  அதாவது கவலை உயிருடன் உள்ளவரை எரிக்கும்.

உயிருடன் எரிந்தால்  ,ஒரு ஊதுபத்தி எரியும் போது கைபட்டாலே தாங்க

முடியாது. உடல் முழுவதும் பற்றி எரிந்தால்,அப்பப்பா,

நினைத்தாலே பயங்கரமாக இருக்கும்.

கவலை இன்றி இருக்க மனத் தூய்மை மட்டும் போதுமா?

நாம் செய்த கர்மங்களில் ,செய்யும் கர்மங்களில் ,செய்யப்போகும் கர்மங்களில்

  ஒரு நேர்மை வேண்டும்.நா நயம் வேண்டும்.ஐம்புலன் அடக்கம் வேண்டும்.


பணிவு வேண்டும்.அறிவுத்திறன் வேண்டும்.ஒழுக்கம் வேண்டும்.

உண்மை வேண்டும்.வீரம் வேண்டும்.செல்வம் வேண்டும். மானம்,மரியாதை

வர வேண்டும். இதற்கெல்லாம் முன்வினைப்பயனோ அல்லது இந்த
ஜன்மத்தில்  இறைவன் அருள் வேண்டும்
இதற்கு  என்ன செய்ய வேண்டும்?
மனைவி அமைவது,கணவன் அமைவது,ஸத்புத்திரர்கள்  பிறப்பது  எல்லாம் மனிதன் கையிலா உள்ளது. ஒரு மன நலம் குன்றியவனுக்கு குழந்தை பிறக்கிறது. பைத்தியக்காரிக்கு குழந்தை பிறக்கிறது.பணக்கார நண்பனுக்கு சந்தான பாக்கியமில்லை. இவை களெல்லாம்  நாம் சமுதாயத்தைப்  பார்த்து புரிந்து தெளிந்து அறிந்து  இறைவனை வழிபட வேண்டும். அப்பொழுது கிடைக்கும்  இறைவனின் அருளும் இறைவனின் க்ருபாகடாக்ஷமும் முழுவதுமாக கிடைக்கும். இதற்கு பக்தி சிரத்தையுடன் பூர்ண சரணாகதி அவசியம். அதில் கிடைக்கும் பேரானந்தம் உலகப்பற்று எவ்வளவு இன்னல் என்பதை உணர்த்தி  அதில் தாமரை இல்லை தண்ணீர் போல் பட்டும் படாமல்

விலக்கிவைத்து  பேரின்பத்தைத் தரும்.அது எத்தனை பேரால் முடியும்?

அதனால் தான் தெய்வீக மனிதர்களாக சிலர் வணங்கப்பட்டு பூஜிக்கப்படுகிரார்கள்.



Thursday, December 5, 2013

பிரார்த்தனை நம் எண்ணத்தை செயல் படுத்தும்

 மனிதன் எதெல்லாம் சாதிக்கமுடியும்

 என்று நினைக்கிறானோ

அதெல்லாம் சாதிக்கமுடியும்

  என்பதில் ஐயமில்லை.ஆனால்

எண்ணித் துணிக கர்மம்  என்பதைவிட

 எண்ணுவதெல்லாம் உயருள்ளளாக இருக்கவேண்டும்.

எண்ணியவை ஏற்றமுடையதாக இருக்கவேண்டும்.

எண்ணுபவை சுயநலமின்றி பொதுநலமாக இருக்கவேண்டும்.

எண்ணுபவை பெண் .பொன் ஆசையாக இருக்கக்கூடாது.

எண்ணங்களுக்கேற்ற வளர்ச்சிக்கு ஆண்டவன் துணை இருப்பான்.

நான் இருந்த நிலையில் எனக்கு ஒருவேலை.மூன்றுநேர 

சாப்பாடு.இருக்கவீடு.உடுக்க உடை. இந்த எண்ணத்துடன்

ஆழ்மன பிரார்த்தனை.

எனக்கு ஆண்டவன் அளித்தான்.

தமிழக ஹிந்தி போராட்ட காலத்தில் 

ஹிந்தி தான் எனக்கு வாழ்க்கை என்ற நிலை.

என் தாயாரும் நானும் ஹிந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டோம்.

வறுமையிலும் மத்திய அரசின் உதவிபெறும் ஹிந்தி பிரச்சாரசபை 

வகுப்புகள்.ஆண்டிற்கு ஒரு முறை  மொத்தமாக பணம் வரும்.

என்று வரும் என்று தெரியாது.

 இருப்பினும் முற்றிலும் இலவசமாக ஐந்துமணிநேரம்

 என்று இல்லை வகுப்புகள் நடத்திவந்தோம்.

௧௦ ஆண்டுகள்.இறைவனை வழிபடுதல் ,வகுப்பெடுத்தல்.

இந்த நிலையில் ஒரு மழலைகள் பள்ளி துவக்கினோம்.

மிகக் குறைந்தகட்டணம்.ஒரு ஆங்கிலோ இந்தியன் ஆசிரியை. 

மூன்றாண்டுகளுக்கு மேலாக அப்பள்ளியில் இருந்து வருமானம் இல்லை.

அப்பொழுதுதான்  ஹிந்தி ஆசிரியர் பயிற்சிப்பள்ளி 

மதுரை மஞ்சனக்காரத்தெருவில் துவங்க இருப்பதாக 

 ஹிந்தி பள்ளி ஆய்வுக்குவந்த மதுரை தக்ஷிண் பாரத ஹிந்தி பிரசார ச பை 

அமைப்பாளர் திரு இ.தங்கப்பன் அவர்களும் ,திருச்சி செயலர் 

எம்.சுப்ரமணியம் அவர்களும் கூறி என்னையும் பயிற்சி முடிக்க அழைத்தனர்.

என் மாமா கு.வே.நாகராஜன் அப்பொழுது சமயநல்லூர் பவர் ஹவுஸ்  மின் 

வாரியத்தில் பணியாற்றிவந்தார்.

அவர் எனக்கு ஊக்கமளித்து படிக்க கட்டணம் ,

உண்டி உறையுள்  ஆகியவற்றிற்கு உதவிசெய்தார்.

பயிற்சி முடிந்த பின்  பாண்டிச்சேரி சபை கிளையில் எட்டு மாதம் பணியாற்றி

ராஜினாமா செய்து பழனி சென்றுவிட்டேன்.

பிறகு ஒட்டன் சத்திரத்தில் கிறிஸ்தவப் பள்ளி டாக்டர் செரியன் ஆரம்பித்தார்.

 அதில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினேன்.

பழனியில் இலவச  ஹிந்தி  வகுப்புகள்.

உழைப்பு.ஆத்மா திருப்தி. வருமானமில்லை
.
 இதற்கிடையில் திருமணம்.பிரச்சனைகள். 

ஆனால் நான் ஹிந்தி  ஆசிரியருக்கான பிரார்த்தனையுடன் 

ஹிந்தி  வகுப்புகள் இலவசமாக.

இறைவன் உதவினான்.

சென்னையில் அரசு உதவிபெறும் வெஸ்லி பள்ளியில்

 ஹிந்தி ஆசிரியர் வேலை.

இந்த இன்னலுக்கு இடையில் முயற்சி. 

ஹிந்தி பயிலவந்த ஹிருத்யராஜ் என்பவர்

 தில்லி பல்கலைக்கழகம் நடத்திய அஞ்சல்வழிக் கல்வியில் 

பி.ஏ.சேர வழி காட்டினார்.

பி.ஏ.படித்து ஹிந்தி ஆசிரியராக சேர்ந்தபொழுது

 செல்வராஜ்  என்ற ஆசிரியர் வெங்கடேஸ்வரா பல்கலைகழகத்தில் 

எம்.ஏ,ஹிந்தி சேர வழிகாட்டினார்.

என்ப்ரார்த்தனையுடன் இறைவன் அருளும் முயற்சியும்  இருந்ததால் 

எம்.ஏ .தேர்ச்சி அடைந்த உடனேயே 

 எனக்கு ஹிந்து மேல்நிலைப்பள்ளியில்

 முதுகலை ஹிந்தி ஆசிரியர் பணி.

 ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி வேங்கடவனை தரிசிக்கும் வாய்ப்பு.

 பள்ளி ஆசிரியர் சங்கம் ரூபாய் ௧௦ கட்டணத்தில் அழைத்துச் 

சென்றது.வேங்கடவன் அருளை அனுபவித்து உணர்ந்து பிரம்மானந்தம் 

அடைந்தேன்.

 பள்ளியின் தலைமை ஆசிரியாராக ஒய்வு பெற்றேன்.

 இதில் இறைவனின் முழு அருளும் எப்படி எனக்கு கிடைத்தது

 என்பதை பள்ளி நிர்வாகமும் உடன் பணியாற்றிய ஆசிரியர்களும் 
உணர்வார்கள்.

இறைவனின் பிரார்த்தனையால்  என் எண்ணம்

 என் குறுகிய வட்டத்தில் உயர் பதவி அளித்து  உயர்த்தியது.

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளியில் ஹிந்தித் துறை ஆசிரியராக 

இருந்து தலைமை ஆசிரியராக ஒய்வு பெற்றவர்கள்

 எனக்குத்தெரிந்து நானும்.பி.எஸ். சந்திரசேகர்,எஸ்.எஸ்.வி.மே.நி.ஹிந்தி 

ஆசிரியரும்.

என்னைப்போலவே அவரும் தில்லி பலகலைக்கழக அஞ்சல்வழி 

பட்டதாரி.பி.ஏ .தேர்வு எழுதும் போது நண்பரானோம்.

இதுவும் வேங்கடவன் அருள்.

பிரார்த்தனை நம் எண்ணத்தை செயல் படுத்தும் என்பது

 எனது வாழ்க்கை அனுபவம்.

நாம ஜபம் செய்யுங்கள்.கடமையைச் செய்யுங்கள்.

 இறைவன் உங்கள் எண்ணங்களை செயல் படுத்துவார்.

உங்கள் வட்டத்தில் உயரலாம்.

உயர்ந்த எண்ணமாக இருந்தால்
 உலகத்தில் புகழ் பெறலாம். நடிகர் ரஜினிபோல.

ஓம்  நமச்சிவாய!ஓம் முருகா!ஓம் சாய் ராம்!ஓம் அச்சுதா!

Wednesday, December 4, 2013

இறைவன் வாசம் செய்யும் இடம்.

  • Mani Prem கடவுளை் பார்ப்பதற்கு கூட பணம் இருந்தால் தான் முடிகிறது
  •  ்அப்படி ஆனால் ஏைழகளுக்கு பணமும் கிைடக்காது கடவுள் அருளும் 
  • கிடைக்காது 
  • இறைவனை காண உண்மையான பக்தி போதும்.பணம் இருப்பவன்
  •  ஆலயங்களில் உள்ள அலங்கார சிலை உருவத்தைப் பார்க்கிறான். 
  • கடவுள்  அருள் கிடைப்பதில்லை. அது ஆடம்பர பக்தி. 
  • கண்ணப்பன்,நந்தனார்,பக்த தியாகராஜர் .துளசிதாசர் ,பக்த 
  • துருவன்,புரந்தரதாசர், கபீர் இன்றும் போற்றுகிற இவர்கள் இறைவனை 
  • இருந்த இடத்தில் தரிசித்தவர்கள்.பணம்,வைரக்கிரீடம்,தங்கக்குடம் 

  • ,யானை காணிக்கை அளிப்பவர்கள் ஊரைக்கொன்று உலையில் 
  • போடுபவர்கள்.




அங்கிங்கெனாதபடி ஆனந்த பூர்த்தியாகி எங்கும் நிறைந்துள்ளான்

இறைவன்.ஆலயத்திலும் தர்ம தரிசனம் உண்டு. விதிப்பயன் ஒருவனை

அதிர்ஷ்ட துரதரிஷ்ட் மாக மாற்றும். கர்ம வினை. ரயிலில் பாடிய

சுந்தராம்பாள்,பயணச்சீட்டு அளித்த ரஜினி இறைவனருள்

பெற்றவர்கள்.தினந்தோறும் பாட்டு வகுப்பு செல்பவர்கள்,ஓவிய வகுப்பு

செல்பவர்களைவிட எந்த வகுப்பிற்கும் செல்லாமல் புகழ் பெரும்

மனிதர்களைப் பார்க்கிறோம். வரகவி பாடல்களை ஆராய்ச்சி செய்து

முனைவர் பட்டம் பெறுகிறோம்.நாம் ஒரு காவியம் படைக்க

முடியாது.இறைவனைக்காண பணம் வேண்டாம். இறைவன் இருக்கும்

இடத்தில் அருள் புரிவான். ரமணர்,விவேகானந்தர் ஒருவர் கோவணம்

மட்டும்.அடுத்தவர் காவி.இருவரும் பொருளைப்பற்றி சித்திதவர்களல்ல.

அருளைப்பற்றி சிந்தித்தவர்கள். உண்மை அன்பும் பக்தியுமே

 இறைவன் வாசம் செய்யும் இடம்.

கபீர்:--காசிக்கு .மதுரா.போன்ற தீர்த்த ஸ்தானங்களுக்கு  சென்றாலும்

கங்கையில்  மூழ்கினாலும்  உண்மையும் நேர்மையுமான ஈடுபாடான பக்தி இன்றி இறைவன் அருள் கிட்டாது.

இறைவன் வழிபாடு என்பது உள்ளத்தில் இருக்கவேண்டும். ஆடம்பர பக்தியில் லௌகீகம்  அதிகம். அலௌகீகம் இல்லை.



there are different thoughts regarding  the God.

but all are accepting  the power of almighty.

power and best result of prayer.

benefits  of  meditation.

why?   Everyone is getting sudden progress,sudden fall,sudden rise,sudden accidents,  

knowledge what he gained he himself does not know.

sweet voice,beautiful drawings,sculptures, nature calamity ,unknown disease ,curable and uncurable ,

physically handicapped.mentally retarded ,polio,blind,deaf,  dumb,

talents in handicape persons,blind peoples memory, recognising the voice,memmaries,

MANY people  can not escape sufferings  even though they get all kinds of wealth,power. he

know one can escape from the punishment of his deeds.

Because of his sins every one get punishment although law and order protecting the sinner.

so every one is thinking the god and prayer.


                                            

இதுவே பிரம்மானந்தம். இதை உணரமுடியும். விளக்க முடியாது.

அவனியில்  நடக்கும் ,நியாய அநியாய செயல்கள் ,

ஆனந்தங்கள் ,துன்பங்கள் ,வேதனைகள்,
விபத்துக்கள் ,விபரீதங்கள் ,

மாளிகை வாசிகள்,குடிசைவாசிகள்,நடைபாதை வாசிகள்,

ஆண்டிகள்,அரசபோக வாசிகள்,அனாதைகள்,சந்தான பாக்கியம் இல்லாதவர்கள், அனைத்து வசதிகள் இருந்தும் அனுபவிக்க இயலாதவர்கள்,
பசியால் வாடுபவர்கள், உணவிருந்தும் பலவித நோயால் வாடுபவர்கள்,
ஏதாவதொரு  மன உளைச்சல் ,.

இவைகள் ஆன்மீக மரம்   வளர்ச்சிக்கு  ஆணிவேராக வடவிருக்ஷமாகிறது.

இதுதான் இயற்கையின்  இறைவனின் தண்டனை. இதை எந்த அரசியல் தலைவர்களாலும் ,நீதிமன்றங்களாலும் ,சட்டங்களாலும் மாற்ற முடியாது கடல் அலைகள் போல. சந்திர சூரிய ஒளி போல ,விண்மீன்கள் மின்னுவது போல.

இருப்பினும் ஊழல் ,கருப்புப்பணம் ,பேராசை,ஆணவம் ,அதிகார அநியாயங்கள்  நடந்து கொண்டே இருக்கின்றன.வாக்களிக்கப் பணபலம் உதவு கிறது.
பதவி பெற பண பலம் உதவுகிறது.

நோய்களிலிருந்து சில நாள் வாழ பண பலம் உதவுகிறது.

ஆனால் மரணம் ,இயற்கையின் சீற்றம் ,இவைகளை எந்த அதிகார பலமும் ,
பணபலமும் ,ஊழலும் கறுப்புப் பணமும் ,பதவியும் உதவாது.
இது சத்தியம். இது உள்ளவரை ஆன்மிகம் இறைபக்தி வளரும்.

அன்பே சிரத்தையே ஆண்டவன் . இதுவே பிரம்மானந்தம். இதை உணரமுடியும். விளக்க முடியாது.





Tuesday, December 3, 2013

இல்லையேல் இன்னல் நிறைந்த துன்ப வாழ்க்கை.

உலகில்  இறைவன் என்ற எண்ணமே இல்லா ஆதிவாசிகள்உள்ளனர்.
உலகில் இறைவனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் முதல் நாடு பாரதம்.
ஆன்மீகத்திற்கு அளித்த முக்கியத்துவம் அறிவியலுக்கு அளிக்கப்படவில்லை.
ஆனால் ஆன்மீகத்தில் இருக்கும் அறிவியல் உண்மைகள் வியக்கவைக்கின்றன.
இந்த ஆன்மீக நாட்டில் கல்வி  அனைவருக்கும் அளிக்கப்படவில்லை.
தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
நாட்டை ஆட்சி செய்ய,நாட்டை பகைவர்களிடமிருந்து காக்க ஒரு சமுதாயம்,
அதற்கென பயிற்சிகள்,போர் முறைகள் ,கல்வியில் சிறந்தோர் நிறைந்த அமைச்சரவை,அரசவை.
ஆன்மீகம் தழைக்க வென்று ஒரு சமுதாயம்.

வாணிகம் தழைக்க ஒரு சமுதாயம்.
தொழில் வளம் சிறக்க ,விவசாயம் செய்ய என்ற ஒரு சமுதாயம்.
நாளடைவில் இந்த அமைப்பில் உயர்ந்த தாழ்ந்த என்ற நிலை உருவாகியது.

இதற்குக் கரணம் கல்வி அனைவருக்கும் இல்லை.

இந்த நிலைதான் அகிலத்தில் உள்ளது, காரணம் அனைவருக்கும் அறிவுத்திறன்  வேறுபட்டிருப்பதே.

படிக்கின்ற அறிவு  வேறு. அனுபவ அறிவு வேறு, பொருளீட்டும் அறிவு வேறு.
எவ்வளவு சம்பாத்தித்தாலும் ,சொத்துக்கள் எவ்வளவு வாங்கினாலும்
மனநிறைவடையாத  ஒரு கூட்டம்.
மற்றவர்களை ஏமாற்றியே வாழும் ஒரு கூட்டம்.
மற்றவர்களை அண்டிவாழும் கூட்டம்,
இன்றைய சாப்பாட்டிற்கே போதும் நாளை பார்க்கலாம் என்று ஒரு கூட்டம்.
வருமானம் அனைத்தையும் சேமித்துவைக்கவேண்டும் என்ற ஒரு கோட்டம்,
வருமானம் அனைத்தையும் சிலவு செய்யும் ஒரு கூட்டம்,
இவை தவிர மாற்றுத்திரனாளிகள்,சோம்பேறிகள் .

இப்படி இருக்கும் சமுதாயத்தில் தர்மமும் சத்தியமும் நேர்மையும் நிலைக்க இவைகளில் தவறினால் அமைதி கெடும்,நிம்மதி இருக்காது என்ற அச்சத்தை
உருவாக்க ஆன்மிகம்.
ஆன்மீகமும் பக்தி நெறிகளும் இல்லை என்றால் சமுதாயம் ஒழுக்கமற்ற,கட்டுப்பாடற்றதாக மாறிவிடும்.

ஆன்மீகமும் பக்தியுமே நியாய தர்ம சத்தியம் காக்கும். அதற்காகவே

ஆண்டவன் படித்தவை அகாலமரணம்,நோய்,மரணம்.முதுமை தளர்ச்சி,குழந்தை இன்மை ,நோயுள்ள குழந்தைகள்.பெற்றவர்கள் செய்யும் பாபங்களின் பலன் குழந்தைகளுக்கு வரும். நல்லவர்கள் நம் எதிரே துன்பப்படுவதும் இதனால் தான்..
இவைகளை  உணர்ந்து உள்ளன்போடு இறைவனைதுதித்தால் இன்னல் இல்லா  இன்பவாழ்க்கை .இல்லையேல் இன்னல் நிறைந்த துன்ப வாழ்க்கை.
பலரிடம் செல்வமிருந்தாலும் நிம்மதி இருக்காது.




छोड़ो मत नारा लगाना --"सत्य-मेव जयते

सत्य    की  विजय झूठ का हार निश्चित है?
क्या इस जग में लोकतंत्र शासन में या राज्य-तंत्र में  ,
महाभारत में ,रामायण में साध्य रहा यह तत्व.
कर्तव्य कर, फल की चिंता ईश्वर पर छोड़.
खेत में कठोर मेहनत कर,फल अपने मालिक पर छोड़.
खाना पका;दूसरों को खिला;खुद भूख सह;
भगवान की याद में रह;अलौकिक आनंद भोग;
लौकिकता केवल लौकिक भाग्यवानों के लिए;
सच्चे भक्त तो कुछ नहीं चाहता;आश्रम न बनवाता;
दीक्षा देने पैसे न लेता;
कर ताल भिक्षा;तरु तल्वासा रह जाता;
सोना-चांदी के लालच में नहीं पड़ता;
केवल कोपीन धारण कर चुप-चाप नाम-स्मरण जपता;
सदुपदेश  ;दीनावस्था में जीता;
उनकी वाणी का संग्रह करके  उनके शिष्य बनते मालामाल;
चित्रपट में उनकी कहानी बनता निर्माता मालामाल;
उन श्रेष्ठों के शोध ग्रब्थ लिखकर पाते उपाधियाँ;
उनके स्मारक बनाके.बनवाके चंदा इकठ्ठा करके 
बनता नामी सेवक.
पर कोई भी उन उपदेशों का पालन नहीं करता;
फिर भी सत्यमेव जयते का नारा गूंजता रहता समाज में;
चुनाव लड़ो;जीतो ;इस नारे को लेकर;
करो भ्रष्टाचार;जोड़ो काला-धन;
छोड़ो  मत  यह नारा "सत्य-मेव "जयते.
छोड़ो  मत महात्माओं के नाम  जय का नारा लगाना;
छोड़ो मत उन की शिलाएं ,बनाना,माला पहनाना;
जोड़ो  काला-धन ,पर मत छोड़ो नारा लगाना "सत्य मेव जयते;
कम से कम तेरे कुछ अनुयायी सत्य का अनुकरण करेंगे;
संसार में कुछ सद काम चलेंगे;
अच्छे एक होने पर होगी वर्षा;
धरती होगी हरा-भरा;
छोड़ो मत नारा लगाना --"सत्य-मेव जयते".

Monday, December 2, 2013

அந்த நிலையில் உணர்வதே பரமானந்தம்

அங்கு இங்கு எங்கு  என்று எங்கும் நிறைந்திருக்கும்
அருள்வள்ளல் ,அவனியை ஒரு புதிருக்குள்
அடக்கி,கேட்டவர்களுக்கு  கேட்ட வரும் தரும்
ஆண்டவன்,அசுரர்களுக்கும் வரமளித்து
அவர்களின் அதிகாரம் அவனியில் கோடி பறக்க
அவர்களை அழிப்பதற்கு முன் நல்லவர்களை
சோதிப்பது  தான் விந்தை.
உண்மையை நிலைநாட்ட ஹரிஷ்ச்சந்திரன் ;
அந்த உத்தமன் ஒருவனே சித்தம் கலங்காமல்

இறுதிவரை நாடிழந்து ,நட்பிழந்து,மனைவியை விற்று
மகனிழந்து சுடலை காத்து மனைவியின் தாலி கேட்டு
மனைவியையே திருட்டுப்பழி  பொய்யென்று அறிந்தும்
 வெட்டச் சென்ற சத்யவாதி.
இவனைப்போல் இருந்தவர்கள் அவனியில் இல்லை.

ராம-ராவண யுத்தம் ,குருக்ஷேத்திரப் போர்  இதில் சில அதர்மங்கள்
குற்றச்சாட்டுகள்,லௌகீக ஆசைகள்  ,வெற்றிக்கு குறுக்குவழிகள்

ஆனால் அரிச்சந்திர வரலாற்றில்  வாய்மை வெல்லும் என்ற

 ஒரே நிலையில்  இறுதிவரை உறுதிபட நின்ற ஒரே கதை அரிச்சந்திரன் கதை.

உத்தமர் காந்தியும் இறுதிவரை உண்மைக்கு  உறுதியாக  இருக்க பின்பற்றிய கதை.

அவனியில் எப்படி இவ்வளவு உறுதிபட உண்மைக்காக இருக்க முடியும்?

 இது சாத்தியமா? இது விந்தை உலகில் உயர் காட்சி.

இப்படிப்பட்ட உண்மை நிலையில் அந்த  ஆண்டவன் அருள்கிறான்.

உண்மையே இறைவன்.அந்த நிலையில் உணர்வதே பரமானந்தம்.

இது எத்தனை பேருக்கு சாத்தியம்?