Tuesday, October 29, 2013

அதுவே அமைதிக்கும் மன நிறைவுக்கும் வழி .

மனித சமுதாயம்  இவ்வுலகில் நிராசை அடையும்போது 
ஆதரவற்ற நிலை வரும்போது 
உலகில் உள்ள நடவடிக்கைகளால் 
உலகின் பாபங்களால் வெறுப்படைந்து 
சித்தார்த்தர் போன்று சித்தம் தெளிந்து 
உலகியல் ஆசை துறந்து  கானகம் சென்று 
தவம் செய்து ஞானம் பெற்றோர் உண்டு.

உலகில் துன்பங்கள், இன்பங்கள்
 கடல் அலைகள் போன்று ஓய்வதில்லை.
இதற்குக்  காரணம் உலகியல் பற்று;பந்தம் ;ஆசை ஆணவம் .
இவைகள் வரும்போதும் ,செல்வம் பெருகும் போதும் 
அக்ஞான  அந்தகனாக மனிதன் மாறுகிறான்.
அப்பொழுது அவனது செயல்கள் நீதிக்கு எதிராக மாறுகின்றன.
அதன் பலன் தான் துன்பங்கள்.
அநியாயமாக சம்பாதிக்கும் பணம் கையுகத்தில் 
வாழ்நாளிலேயே துன்பமாக நஷ்டமாக மாறுகிறது.
நாம் நினைக்கிறோம் இந்த கையூட்டுப் பணம் வாங்கவில்லை என்றால் 
நம் மகனை படிக்கவைக்க முடியாது.
தக்க மருத்துவம் செய்ய முடியாது.
நம் தேவைகள் பூர்த்தியாகாது என்று.
வீடுவாங்க முடியாது.
சுற்றுலா போக முடியாது. சமுதாயத்தில் அந்தஸ்து கிடைக்காது.
வேலை கிடைக்காது. என்று.
ஆனால் இதெல்லாம்  கிடைத்தாலும் முழு ஆனந்தமாக 
திருப்தியாக  வாழ்வோர் எத்தனை பேர்.
வீடு வாங்கியாகிவிட்டது.
ஆனால் அது பணியாற்றும் இடத்தில் இருந்து தொலைவு.
பேருந்து பிடித்து ,ரயிலில் ஏறி பின் நடந்து பணியாற்றும் இடம்.
பத்து மணிக்கு பணியிடம் செல்ல எழு மணிக்குப் புறப்படவேண்டும்.
ஐந்து மணிக்கு அலுவலகம் முடிந்து இல்லம் செல்ல எட்டு எட்டரை.
இதிலும் ஒரு மகிழ்ச்சி சொந்தவீடு.
குழந்தைகள் பள்ளி கல்லூரி என்று செயல்கள்.
இந்த உலகில் இன்பம் எங்கே?
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் நோ பீஸ் ஆப் மைண்ட். தான்.
வயதானதும் இதை உணர்ந்து என்ன பயன்?
ஆரம்ப முதலே தேவைகள் குறைத்து இறைவனை 

வழிபடுவதிலே  தான் மன சாந்தி.
அதுவே அமைதிக்கும் மன நிறைவுக்கும் வழி .



No comments: