Sunday, October 27, 2013

அதுவே ஆதரவு தரும் இன்ப வழி .

அவனியில்  அவதரித்த ஆண்டவனே ,
அலுத்து அழுது அல்லல் பட்ட அவனி இது.

அல்லலுக்கே அவனி என்றால் அரிது அரிது மானிடராய் பிறப்பதரிது 

அவ்வையின் வாக்கில் என்ன வாய்மை?

அவர் கொடுக்கும் விளக்கம்  அரிது .

பிணி ,வறுமை போன்ற அல்லலளில்லா பிறவி அரிது.

ஆணவம் ,கல்லாமை ,பொறாமை ,ஈகையின்மை ,சுயநலம் ,
பந்த பாசம்,ஒருதலை பக்ஷம் ,ஆசை ,பேராசை, இல்லா 
மனிதப்  பிறவியும் அரிது.
அதனாலே  அழுதது ஆண்டவனின் அவதாரம்.
காமுகனை அழிக்க  ராமரும் அதர்மம்;விபீஷணனுக்கு அவப்பெயர்.
பங்காளி பகை ,அங்கும் பெண் ,அந்தகனுக்கு அபலை,
அல்லலே  அதர்மமே எங்கும்.சதி ;சதியால் வெற்றி;
ராமர் போல் வாழ்க?என்று வாழ்த்த முடியுமா?

ராமர் 14 ஆண்டுகள் வனவாசம்;புத்திர சோகத்தால் தசரதன் மறைவு;
ஆதி சங்கரரின் வாழ்விலும் அவர் தாயாருக்கு புத்திரசோகம்;
விதி சதி பிறப்பு வாழ்வு ,மரணம்  இதில் பிரிவு !!
இதில் அமைதிகாண  விதிப்பயன் நினைத்து 
இறைசக்தி இயற்கை வழிபாடே  வழி ; அன்பே ஆண்டவன்.
அதுவே ஆதரவு தரும் இன்ப வழி .

 

No comments: