Friday, August 9, 2013

அது முதுமையின் இலக்கணம் என்பதா?

இறைவன் மேல் அகப் பற்று
குழந்தைப்பருவத்தில் இருந்தே
 ஏற்படுத்தவேண்டும். ஆனால்,

அது  முதியோருக்கான சிந்தனையாக

மாற்றப் பட்டுவிட்டது.காரணம்,

புரியவில்லை.

இறைவன், ஆன்மிகம் என்பது

நல்ல ஒரு பண்பை,அன்பை,ஒழுக்கத்தை,மன ஒருமைப்பாட்டை

உண்டாக்குவது.ஒவ்வொரு இறைவழிபாட்டுப் பாடல்கள்,சுலோகங்கள்

ஒரு அதிர்வலை கொடுத்து மனித  மனதில் உயர்வான எண்ணங்கள்

ஏற்படுத்துவது.

இன்றைய தலைமுறை திரைப் படப் பாடல்கள் தான் பாடுகின்றன;

அதில்  காதல் என்ற ஒரு கதைக் கரு தவிர வேறு இல்லை.

காதல்,பெற்றோரை இழிவு படுத்துதல்,ஆசிரியரை இழிவு படுத்துதல்,

காவல் துறை  பாதுகாப்புத் தரும் என்பதை விட அபாயமானது என்பதை அதிக வெளிச்சம் போட்டுக் காட்டுதல்,

காதல் நிறைவேறாது என்ற நிலையில் கையை அறுத்தல்,தற்கொலை,பெற்றோர்கள் தற்கொலை செய்வேன்  என்று மிரட்டுதல், காதல் போராட்டங்கள்,திருமணம் அன்று காதலுடன் ஓடுதல்,

வாழ்வில் பெற்றோர்களா?கட்டுப்பாடா?காதலா?என்பதில்

காதலுக்கு மகத்துவம் அளித்தல், குறுக்குவழியில்  பணம் சேர்த்தல்
 இவைகளே கதைக்கரு.

ஆன்மிகம் என்பதற்கும் ,இவ்வாறான சமுதயப்போக்கிற்கும் உள்ள விளைவு?

இன்று தவறான காதலால் கலங்கி கண்ணீர் விடும் அவலம்.

சற்றே சிந்தியுங்கள்.

ஆன்மிகம்  ஒழுக்கமா? ஆண்டவன் மீது காதல் சிறந்ததா?
அது முதுமையின் இலக்கணம் என்பதா?
சற்றே சிந்தியுங்கள்.
உயர்  எண்ணங்கள்  ஏற்படுத்த,வாழ்க்கை சீராக  அமைய,

ஆன்மிகம் என்பது குழந்தைப் பருவம்,இளமை ,முதுமை மூன்றுக்கும் அவசியம்.

No comments: