Tuesday, June 25, 2013

வீடு தேடி வருவான் விட்டலன்.


பொருளின்றி
 அருளா ? பொருளா?

அருள்  பொருள் உள்ளோருக்கா ?

ஆலயம்  ஆயிரம் வினாக்கள்.


இன்னல் தீர ஆலயம் .


ஈத்துவக்க ஆலயம்


எண்ணங்கள்   நிறைவேற  ஆலயம்.

ஏற்றம் பெற ஆலயம்.

ஐம்புலன்கள் அடக்க ஆலயம்.

ஒப்பில்லா   ஓவியமாய்

ஔஷதமாய்   அவன் க்ருபா கடாக்ஷம் பெற

ஆலயம் . ஆனால் ,இன்று  ஆலயம் என்பது

ஆஸ்தி உள்ளோருக்கு .

அந்தஸ்து உள்ளோருக்கு.

உண்மை அன்பர்கள் ஊர்ந்து செல்ல .

ஊர் செல்வாக்கு உள்ளோர்

  தத்கால்  தர்ஷனம்.

என்றுமே உண்மை பக்தர்களுக்கு

ஆண்டவன்  அருள் தாமதம் தான்.

அசுரர்களுக்கு வதம் செய்தபின்  மோக்ஷம்.

அன்பர்களுக்கு  உயிருடன் மோக்ஷம்.

உண்மை பக்திக்கு உள்ளத்தூய்மை.

ஆழமான அன்பு ,ஆழ்நிலை  தியானம்.

பக்திக்கு ஏகாந்தம்.

முக்திக்கு ஏகாந்தம்.

லௌகீகம் என்பதில்   பேரரவம் .

ஏகாந்த  இன்பம் இல்லை.



அலௌகீகம்   என்பதில்  ,

ஓம் சாந்தி !ஓம் சாந்தி.! ஓம் சாந்தி,!

ஏகாந்தத்தில்  ரமணர் மஹரிஷி  ஆனார்.

மௌனம்  காத்து  மௌன தவம்.

ஹீரா குகையின் ஏகாந்தம்  அல்லாவின் செய்தி,

முஹம்மது   பைகம்பர் ஆனார்.

ஏகாந்த தவம் வால்மீகி முனிவரானார்.

ஆடம்பர ஆரவார ஆஸ்ரமங்கள்  கோடியில் புரண்டு

கேடிகளாகும்  கதைகள்.

உத்தரகாண்ட்  சாமியார்கள் அடித்த கொள்ளை ,கற்பழிப்பு.

பக்தர்களே ! பக்தியின் பலன் ஆடம்பரத்தில் இல்லை.

ஆஷ்ரமங்களில்  இல்லை;

இறைவன் அங்கிங்கு எனாதபடி  எங்கும் உள்ளன்.

தூணிலும் துரும்பிலும்.

அவனைத்தேடிச் சென்று துன்பம் அடையாமல்,

உள்ளத்தூய்மையோடு   வழிபட்டு

ஆண்டவனை அன்புடன் அழைத்தால்

உங்களுக்கு அருள் புரிய

சேவை ஆற்ற உங்களிடம் வருவான்.

வீடு தேடி வருவான் விட்டலன்.

அன்பே ஆராதனை.

.






No comments: