Friday, April 5, 2013

உண்மையில் மனிதனின் அறிவு பெருகுகிறதா?

உலகில்  மனிதன் அறிவுடன் பிறந்தாலும் அந்த அறிவுத்திறன் வேறுபடுவது
விந்தையிலும் விந்தை.  அது தான் இன்றைய அறிவியல் உலகில் எத்தனை பெரியார்கள் தோன்றினாலும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஆலயங்களின் உண்டியல் நிரம்புகிறது. அர்ச்சகர்கள் மகிழ்கிறார்கள்.
அதே சமயம் விபத்துக்கள்,கொலை,கற்பழிப்பு,லஞ்சம்,ஊழல் ,தற்கொலை,கொள்ளை,வழிப்பறி,கலப்படம்,எடை குறைவு (பொருள்),கருப்புப்பணம்,கறுப்புச்சந்தை,தேர்வுத்தாள்,தேர்வு மையம் அனைத்திலும் ஊழல்.

உண்மையில் மனிதனின் அறிவு பெருகுகிறதா? பெருகிய அறிவு தீய வழியில் செல்கிறதா?    

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் no peace of mind  என்ற வாழ்க்கையில் தான் அனைவரின் நிலை. சாமியார்களும் நிம்மதி இல்லை.அவர்களும் பல ஊழலில் சிக்குகின்றனர் . இவைகளை கலியுக தர்மம் என்பதா?மக்களின் சயநலம் என்பதா? அறிவு  தீய வழியில் செல்கிறதா ?ஆண்டவனின் லீலை என்பதா?

எனது சிந்தனையில் அதர்மத்துக்குத் துணைபோகிறவர்கள் அதிகம்.

இதற்காக  நாம் மனித ஆற்றலுக்கு அப்பால் இயக்கும் இறைவனை வழிபடுவோம்.

No comments: