Friday, April 5, 2013

சிரத்தை;பக்தி.

நமது   மனம் என்பது கடல் அலை போன்று ஓயாமல் சிறிய-பெரிய பழைய-புதிய  எண்ணங்களால் அலைபாய்ந்துகொண்டே இருக்கும். இதை நிலைப்படுத்த  சாதரணவர்களால்    முடியாது.  விளையாட்டு வீரர்கள் மனம் 

ஒருநிலைப்படுத்துவார்கள் .கேரம் விளையாட்டில் வெல்பவர்கள் அடிப்பான் ,காயின் ,அந்த குழி  மூன்றையும் ஒரே கவனமாகப்  பார்த்து அடிப்பார்கள்.
மன நிலைப்பாடு இல்லாதவர்கள் கண்ணை மூடி எதையோ அடிப்பார்கள் அடிப்பான் எதிலோ மோதி ஒருகாயின் விழுந்துவிடும்.
 இதை குருட்டா ன்போக்கு /மாட்டடி  என்பர். மன ஒருமைப்பாடு உள்ளவர்கள் கேரம் விளையாட்டில் எப்பொழுதும்  வெல்வர். அதிகம் பேசமாட்டார்கள். குருட்டான் போக்கில் தடால் அடி அடிப்பவர்கள்  வெல்ல முடியாது. அவ்வாறே மன சஞ்சலம்  இல்லாதவர்கள்  தான் எதிலும் வெல்ல முடியும்.
 அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் /இறை பக்தியில் ஈடுபடுபவர்கள் 
கவனம் சிதறாமல் இருப்பார். அபிராம பட்டர் கதை அனைவருக்கும் தெரிந்திருக்கும். 

தேவியின்  தியானத்தில்  மூழ்கி இருந்த அபிராமி பட்டருக்கு அரசன் வருகை தெரியவில்லை. அரசருக்கு கோபம் .அன்று முழு இருட்டு. அமாவாசை.மன்னர்    கேட்க அவர் தேவியின் தியானத்தில்  பௌர்ணமி என்று சொல்ல ,அதை நிரூபிக்கவேண்டிய இக்கட்டில் இருந்து தேவி காப்பாற்றிய கதை அபிராமி அந்தாதி படிப்போருக்குத் தெரியும்.

அவ்வாறே நியுடன் முதலியோருக்கு வைத்த உணவை மற்றவர்கள் சாப்பிடுவார்கள். இவர்களிடம் கேட்டால்  ஆராய்ச்சியில்  ஈடுபட்டமணம் பசி அறியவில்லை. நான் சாப்பிட்டகிவிட்டது என்பர். இதுதான்  மன ஈடுபாடு.

புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு  பலர் மனம் பல கற்பனையில் மூழ்கும். எப்பொழுதும் கையில் புத்தகம் இருக்கும். மதிப்பெண் வராது. சிலர் படிக்கும் நேரம் குறைவாக இருக்கும் .மதிப்பெண்கள் அதிகம் எடுப்பார்கள் .

  சிலர் படிக்கவே  மாட்டார்கள். அதிகமாக மதிப்பெண்கள் பெறுவார். பால கங்காதர திலகர் வகுப்பறையில் எதையும் குரிப்பெடுக்கமாட்டா. ஒருமுரு ஆசிரியருக்கு கோபம் வந்து விட்டது. எழுதிவிட்டாயா ? என்று கோபமாக கேட்டார்.
உடனே திலகர் எழுதிவிட்டேன் என்றார். எங்கே?ஆசிரியரின் அடுத்த வினா?

திலகர் தன தலையில் அடித்து இங்கே என்றார். ஆசிரியர் படி என்றார். ஆசிரியர் கூறியவற்றை அப்படியே கூறினார்.
இது ஒருவகையான தியானம்.

 நம்மில் பலருக்கு கவனச் சிதறல்கள் அதிகம். அதனாலேயே  நாம் தோல்வியைத் தழுவுகிறோம்.
அது  எப்படி ?நமக்குத் தெரியாது.

அதற்கு ஒரு வைராக்கியம் வேண்டும்.தியானத்தில் ஈடுபடவேண்டும்.

அந்த தியானம் வால்மீகி,அருணகிரிநாதர் போன்று ஏற்படவேண்டும்.

ரமணமஹரிஷி  மௌன சாமியார். அவர் வரலாறு  அவர் மன ஒருமைப்பாடு 
நாம் காணும் இன்றைய சாட்சி. 

இவ்வாறான ஒருமைப்பாடான பக்தி  நாம் பெற மனதை அலைபாயவிடாமல் ஆழ் கடல் போன்று   வைக்க ஒரே வழி  தியானம்.இறையன்பு;இறைப்பற்று;
சிரத்தை;பக்தி.


1 comment:

Ranjani Narayanan said...

மனதை ஒருமுகப் படுத்துவது சற்றுக் கடினம்தான். ஆனால் நமக்குப் பிடித்த விஷயங்களை - குறிப்பாக சினிமா பாடல்களை ஒருமுறை, இரண்டு முறை கேட்டவுடனேயே வரி தப்பாமல் பாட முடிகிறதே!

நம் வாழ்க்கைக்கு எது அவசியம் என்று அறிந்து அதில் மனதை ஒருமைப் படுத்த முயல வேண்டும்.