Monday, January 7, 2013

விஷயாஸக்தி / அன்பே ஆண்டவன்.

விஷயாஸக்தி / அன்பே ஆண்டவன்.

மனித முன்னேற்றத்திற்கும் ,தியானத்திற்கும்  பெரும் தடை புலனின்பம்.இன்பப் பொருள்களின் மீது  தீவீர ஆசை  தான் விஷயாசக்தி.

புலன்களின் பற்றால் மனத்தொல்லை ஏற்பட்டு மன ஒருமைப்பாடு குறைகிறது.

கீதோபதேசத்தில்  கண்ணன் அர்ஜுனனிடம்  நல்வழியில் அறிஞர்கள்  சென்றாலும் ,நிலைத்து நின்றாலும் அறிஞனுடைய மனதையும் இந்த புலன்கள் அலைபாயச் செய்கின்றன.கப்பலைக் காற்றானது நீர் நிலை 
தத்தளிக்கச் செய்வது  போல் ,மனம் இந்திரிய சுகங்கள் அல்லது பற்றால் அவனது வேகத்தை அதிகரிக்கிறது. பரமாத்மாவின் மீது பற்றுகொண்ட பின் தான்  அவன் ஆசை அழிகிறது.ஆசை அறவே அழிய ஈஸ்வர தரிசனம் தேவை.மனிதன் ஆத்மானுபூதி அடைவதற்கு உயர் குறிக்கோள் ஒன்றே வழி.




No comments: