Sunday, January 6, 2013

சர்வேஷாம் சாந்திர் பவது --அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும்

மன ஒருமைப்பாட்டிற்கு  தியானமே .

நிர்குண  தியானம்  அருட்பெருஞ்சோதி ,தனிப்பெருங் கருணையாக உள்ளது.
ஆத்மா பரமாத்மா அஹம் பிரம்மாஸ்மி என்ற  நிலை தியானமே நிர்குண தியானம்.

சகுண  தியானத்தில் இறை உருவத்தை கண்களில் பதியவைத்து  பாதரகேசம் வரை மனத்தை செலுத்தி கண்களை மூடி தியானம் செய்தல்.

  தியானம் செய்யும் பழக்கம் வர வர லௌகீக நாட்டம் குறையும்.இறைவன் தங்கள் அருகில் இருப்பதை உணர்வீர்கள்.

ஆணவம்,கோபம்,பேராசை ,காமம் போன்றவை குறையும்.தியானத்திற்கு தடை வீண் கற்பனைகள். நமக்கு ஆண்டவன் சக்தி அளித்தால்  உலக சாதனை படிக்கவேண்டும் என்பது.இந்த ஆசைகளை விட்டால் தான்  மனம்
ஒருமைப்பட்டு தியானத்தில் ஈடுபடும்.
லோகா : சமஸ்தா:ஸுகினோ  பவந்து---உலகம் முழுவதும் இன்பத்தை அனுபவிக்கட்டும்; நலமாக இருக்கட்டும்.
சர்வேஷாம்  சாந்திர்  பவது --அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். என்ற நிலையில்  தியானம் இருக்கட்டும்.

சிவ  தியானம்.

சாந்தம் பத்மாஸனஸ்தம்  சசதரமுகுடம்   பஞ்சவக்த்ரம் த்ரிநேத்ரம் 

சூலம் வஜ்ரம் ச  கட்கம்  பரசுமபயதம்   தக்ஷிணாங்கே வஹந்தம் 

நாகம் பாசம் ச கண்டாம்  டமருக சஹிதாம் சாங்குசம்  வாமபாகே 

நானாலங்கார தீப்தம் ஸ்படிகமநிணிபம்  பார்வதீசம்  நமாமி.


        வித விதமான ஆபரணங்களை  அணிந்தவரும் , ஸ்படிக மணிபோல் 

 பிரகாசிப்பவரும் .பத்மாசனத்தில் அமைதியாக அமர்ந்தவரும் ,தலையில் 

பிறைச்சந்திரன்  மற்றும் வலப்புறத்தில் சூலம் ,வஜ்ரம்,வாள் ,கோடரியைஉடையவரும் ,
இடப்புறத்தில் நாகம், பாசம்,மணி,உடுக்கை,அங்குசத்தைக்   கொண்டவரும்

தமது  பக்தர்களை சகல பயங்களிலிருந்தும்                 

காப்பவருமாகிய  பார்வதியின் ஐந்துமுகத் தலைவனை  வணங்குகின்றேன்..


(ஸ்ரீ சுவாமி  சிவானந்தா ==concentration and meditation)



2 comments:

Advocate P.R.Jayarajan said...

//அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். என்ற நிலையில் தியானம் இருக்கட்டும்.//

அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும்.

அம்பாளடியாள் said...

தியானம் செய்யும் பழக்கம் வர வர லௌகீக நாட்டம் குறையும்.இறைவன் தங்கள் அருகில் இருப்பதை உணர்வீர்கள்.
உண்மைதான் அருமையான கருத்துக்கள் !