Tuesday, May 1, 2012

KOVILKAL -TEMPLE FESTIVALS

மதுரை சென்றேன்.பழனி சென்றேன்.
பக்தி பக்தி பரவசம் என்பதை நேரில் கண்டேன்.
எண்ணங்கள் பல மறந்து,
தன் பலம் மறந்து ,
தெய்வ   பலம் பெரிதென, 
தேடி வந்த கூட்டம்.
வேதனைகள் தீரும்,
வேண்டிய  வரம்  கிட்டும்,
கனவுகள் நிறைவேறும்,
கந்தன் கருணை பொழிவான்--என
கஷ்டங்கள் தீரும்,
கலியுக தெய்வம் என்ற,
அன்பர்கள் கூட்டம்.
அதில் நாத்திகர்கள் இருந்தாலும்,
ஆத்திக எண்ணமே உயரும்.
அண்மையில் இருந்து அருளும்,
கந்தன்  அவன்.

மதுரையிலோ மதுரம் ,
மாநகர் முழுதும் ,
மாபெரும் கோவிலில்,
இறைவன் திருவீதி உலா,
அம்மன் அருளும் விழா,
ஆசைகள் இச்சைகள்,
அருள் பெற்று ,
ஏற்றம்  தந்து
ஐயங்கள்நீக்கி,
ஒப்பிலா திருநாள்.
ஓடம் போல் பக்தி ஓடம்.
இன்னல் கடல் தீர,
மனதில் செலுத்தும் திருவிழா.
தெவிட்டா மன மகிழ்ச்சி'
தெளிவு தரும் திருநாள்.
சித்தம் சிதையாமல்,
சிந்தனைகள்  பக்தி  யும்,
முக்திக்கு வழிவகுக்கும் ,
சித்திரைத் திருவிழா.


No comments: